ஈச்சளவக்கை குழந்தை இயேசு ஆலயத் திருவிழா

விடத்தல்தீவு பங்கின் கிளை ஆலயமாக அமைந்துள்ள ஈச்சளவக்கை குழந்தை இயேசு ஆலயத் திருவிழா இன்று (31.01.2018) புதன்கிழமை காலை நடைபெற்றது. காலை 07.00மணிக்கு திருப்பலி நிறைவேற்றும் குருக்களையும், விடத்தல்தீவில் இருந்து பணி செய்யும் பிரான்சிஸ்கன் சபை அருட்சகோதரிகளையும் கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களையும், ஏனைய விருந்தினர்களையும் ஆலய மக்கள் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து திருவிழாத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின் முடிவில் திருவுருவ ஆசீரும் வழங்கப்பட்டது.விடத்தல்தீவு பங்குத் தந்தை அருட்பணி.செல்வநாதன் பீரிஸ் ஆலய அருட்பணிப் பேரவையோடு இணைந்து அனைத்து பணிகளையும் சிறப்பாக ஒழுங்குபடுத்தியிருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *