வாழ்விக்கும் விவிலியம், வாழ்வாக்குவது எப்படி?

வாழ்விக்கும் விவிலியம், வாழ்வாக்குவது எப்படி? சிந்தனை வழங்குபவர் அருட்பணி லெறின் டீ றோஸ் கொஸ்தா. 31/01/2018 மரியன்னை ஆலயத் திருவிழா ஆயத்த வழிபாட்டில்,மன்னார்.

எது திருச்சபை? ஒரு விவிலியப்பார்வை.

எது திருச்சபை? ஒரு விவிலியப்பார்வை. வழங்குபவர் அருட்பணி லெறின் டீ றோஸ் கொஸ்தா. 39/01/2018 மரியன்னை ஆலயத் திருவிழா ஆயத்த வழிபாட்டில்,மன்னார்.

ஈச்சளவக்கை குழந்தை இயேசு ஆலயத் திருவிழா

விடத்தல்தீவு பங்கின் கிளை ஆலயமாக அமைந்துள்ள ஈச்சளவக்கை குழந்தை இயேசு ஆலயத் திருவிழா இன்று (31.01.2018) புதன்கிழமை காலை நடைபெற்றது. மேலும் அறிய ஈச்சளவக்கை குழந்தை இயேசு ஆலயத் திருவிழா

பொதுக்காலம், வாரம் 4 புதன்

முதல் வாசகம்

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 2,9-17

அந்நாள்களில் தாவீது அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழைத்து, “மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தாண் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையைக் கணக்கிடுங்கள்” என்றார். யோவாபு, வீரர்களின் தொகைக் கணக்கை அரசரிடம் தந்தார். வாளை ஏந்தும் வீரர்கள் எண்ணூறு ஆயிரம் பேர் இஸ்ரயேலிலும், ஐந்நூறு ஆயிரம் பேர் யூதாவிலும் இருந்தனர். வீரர்களின் தொகையைக் கணக்கெடுத்த பிறகு தாவீது மனம் வருந்தினார். “நான் மாபெரும் பாவம் செய்தேன்! ஆண்டவரே! உம் அடியானின் குற்றத்தை மன்னித்தருளும்! ஏனெனில் நான் பெரும் மதியீனனாய் நடந்து கொண்டேன்” என்று தாவீது ஆண்டவரிடம் மன்றாடினார். தாவீது காலையில் எழுந்தார். தாவீதின் திருக்காட்சியாளராகிய இறைவாக்கினர் காதிற்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது: “நீ சென்று இவ்வாறு ஆண்டவர் கூறுவதாகத் தாவீதிடம் சொல்: “நான் உன்மீது மூன்று தண்டனைகளைக் குறிப்பிடுகிறேன். நீ ஒன்றைத் தேர்ந்தெடு. அதன்படி நான் செய்வேன்” “. காது தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது: “உனது நாட்டில் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப் பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து முடிவுசெய்”. “நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது கையில் நாம் விழுவோம்; ஏனெனில் அவரது இரக்கம் பெரிது! மனிதரின் கையில் விழ வேண்டாம்” என்று தாவீது கூறினார். ஆண்டவர் காலைமுதல் குறித்த நேரம்வரை இஸ்ரயேலின் மீது கொள்ளைநோய் அனுப்பினார். தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர். வானதூதர் எருசலேமை அழிப்பதற்காக அதன்மீது தம் கையை ஓங்கினார். ஆண்டவர் அத்தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக்கொண்டிருந்த வானதூதரை நோக்கி, “போதும்! உன் கையைக் கீழே போடு” என்றார். அப்போது ஆண்டவரின் தூதர், எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே இருந்தார். மக்களை அழித்துக்கொண்டிருந்த ஆண்டவரின் தூதரைத் தாவீது கண்டபோது, அவர் ஆண்டவரை நோக்கி, “பாவம் செய்தவன் நானல்லவோ? தீச்செயல் புரிந்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது? இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக!” என்று கூறினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 32: 1-2. 5. 6. 7


பல்லவி: ஆண்டவரே, என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர்.
ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி

என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை;
ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்’ என்று சொன்னேன்.
நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி

ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்;
பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. பல்லவி

நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்;
உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர்.பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா. : மாற்கு 6:01-06

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

ஜனவரி:31 புனித தொன்போஸ்கோ

ஜனவரி:31
புனித தொன்போஸ்கோ
சலேசியன் சபை நிறுவுநர்-(கி.பி.1815-1888)

 

இளவயதில் இவர் கண்ட கனவு ஒன்று. இவரது வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில் 15 முறை திரும்ப வந்தது. இதன் மூலம் தேவ அழைத்தலில் மறைந்துள்ள சில பேருண்மைகளை ஆழமாக இவர் உணர்ந்தார். இக்காட்சிகள் இவரது தேவ அழைத்தலின் நாளிலிருந்து இறுதிவரை மரியன்னையின் சிறப்பான சலுகை இவருக்கு கிடைத்ததையும் வெளிக்கொணருகின்றன. திருத்தந்தை 9ம் பத்திநாதர் இவரிடம் இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதக் கேட்டுக் கொண்டார். அதில் ஜான்போஸ்கோ குறிப்பிடுகின்றார். ஒருமுறை வீட்டு முற்றத்தில் சிறுவர் பலரின் நடுவில் நான் நிற்பதாக காட்சி கண்டேன். சிலர் நன்றாக கூடிக்குலாவி கும்மாளம் போட்டு விளையாடுகின்றனர். மற்றவர்கள் பழிச்சொற்களை உதிர்கின்றனர். நான் இந்த தீயவர்களை கடிந்து அடித்துத் தவற்றை நிறுத்தச் சொன்னேன். பின்னர் வெண்ணாடை அணிந்த ஒருவர் இவர்களை கண்காணித்துக் கொள். அடித்துத் துன்புறுத்தி நீ இவர்களை கவரமுடியாது. மாறாக பொறுமை அமைதியான இயல்பு தான் வெல்லும் என்றார். உடனே அழகான ஒரு பெண் தோன்றினார். அப்போது கொடிய விலங்குக் கூட்டம் ஒன்று காணப்பட்டது. இந்த விலங்குகளுக்கு இப்போது நடக்கப் போவது போல் இந்த சிறுவர்களிடமும் நீ நடந்து கொள்ள வேண்டும் என்றார். இவ்வாறு சொன்னபோது விலங்கினங்கள் சாந்தமுள்ள ஆடுகளாக மாறின. மாறி அன்னைமரியுடனும் இயேசுவுடனும் ஆரவாரத்துடன் விளையாடின. மறுநாள் காலையில் தொன்பொஸ்கோ இந்தக் கனவை தன் தாயிடம் கூறினார். ஜியோவான்ன,p ஒருநாள் குருவானவராகப் போகிறாய் என்று கூறினார் தாய். அப்போது புனிதருக்கு வயது 9 மட்டுமே.
இவரது குருத்துவப் பணி முதலில் ட்யூரின் நகரில் தொடங்கியது. தனது 60வது வயதில் ஆயிரக்கணக்காண சிறுவர்களுக்கு ஞானப்பயிற்சிகள் அளித்த பிறகு தமது வாழ்வை திரும்பிப் பார்க்கிறார். ஒருமுறையாவது யாரையும் தண்டித்ததாக நினைவில்லை என்கிறார். சிறுவர்களுடன் பழகும் போது தோழமை, அன்பு, நட்புறவு அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுதல,; பொறுப்புணர்வு ஆகியவற்றைக் கொண்டு தான் கவர்ந்திழுக்க இயலும் என்பது இவரது அசையாத நம்பிக்கை. அடிக்கடி ஒப்பரவு அருட்சாதனத்திலும், திவ்விய நற்கருணையிலும் பங்கு பெற வைப்பது, ஆழமாக மறைக்கல்வி புகட்டுவது, கலை உணர்வை வளர்ப்பது இவைகளையே சலேசியன் சபையின் அனுகுமுறையாக இவர் வைத்துள்ளார்.
இன்று இவரது குருத்துவ துறவற சபையில் 20000க்கும் மேற்ப்பட்டோர் உள்ளனர். உலகின் எல்லாப் பகுதிகளிலும் இவர்களது துறவற சபை பரவியுள்ளது. திருச்சபையின் மிகப் பெரிய துறவற சபைகளில் ஒன்றாகப் பல அரும்பெரும் பணிகளை இன்று ஆற்றி வருகிறது. புனித மேரி மஸெல்லாவுடன் சேர்ந்து பெண்களுக்கும் சலேசிய சபையை இவர் நிறுவியுள்ளார் .பொதுநிலையினரில் இத்துறவிகளுடன் திருப்பணியில் ஒத்துழைப்பவர்களுக்கென 3ம் சபை போன்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.