Category Archives: ஞாயிறு திருவழிபாட்டுக் குறிப்புக்கள்

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு.

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு.

2025.12.14.

முன்னுரை.

அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும். அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள். துன்பமும் துயரமும் பறந்தோடும்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! ஒடுக்கப் பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டி. பசித்திருப் போர்க்கு உணவளித்து. சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கும், நம் இறைத் தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத் திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவருகைக்கால  மூன்றாம் ஞாயிறு தினத் திருப்பலியைக்  கொண்டாடுகின்றோம்.

நம் இறைவன் அளிக்கும் விடுதலை எப்படி இருக்கும், அவ் விடுதலை யாருக்குக் கிடைக்கும்,  ஆண்ட வர் அளிக்கும் அவ் விடுதலையைப் பெற நாம் என்ன செய்யவேண்டும் என்னும் தேடலுக்குரிய விடை களை இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு விளக்கிக் கூறுகின்றன. இறைவனின் வருகை அவரை நாடு வோடுக்கு நிறை மகிழ்ச்சியையும், அருள் ஆசீர்வாதங்க ளையும் கொண்டுவரும் என்பதே இன்று நமக்குக் கிடக்கும் நம்பிக்கையின் செய்தியாகும்.

எனவே,நெருங்கி வரும் ஆண்டவரின் வருகையை எதிர்கொள்ள நம்மைத் தயார் படுத்துவோம். அடுத்தவ ரைப் பற்றி குறைபேசாது, துன்பத்தைத் தாங்குவதிலும், பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் நாம் உறுதியுடன் இருக்க அருள் வரம் கேட்டுத்; தொடரும் பலியில் பங்கேற்போம். அத்தோடு இயற்கையின் சீரான இயக்கத்திற்காகவும், பாதிக்கப்பட்டோரின் நல் வாழ்வுக்காகவும் இறைத் தந்தையின் இரக்கத்தை இறைஞ்சுவோம்.

முதல் வாசகம்.

கடவுளே வந்து உங்களை விடுவிப்பார்”.

இறைவாக்கினர் எசாயா  நூலிருந்து வாசகம். 35:1-6,10

அந்நாள்களில்

பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும். பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலி போல் பூத்துக் குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும். லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும். காமேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும். ஆண்டவர் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள்.

தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, ‘திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள். இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார். அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்”.

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும். காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர். வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர். பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும். வறண்ட நிலத்தில் நீரோடை கள் பாய்ந்தோடும்.

ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர். மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர். அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக் கும். அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள். துன்பமும் துயரமும் பறந்தோடும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 146: 7-10

பல்லவி: ஆண்டவரே எங்களை மீட்க வந்தருளும்.

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலை நாட்டுகின்றார். பசித்திருப்போர்க்கு உணவளிக்கின் றார். சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி:

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின் றார். தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார். நீதிமான் களிடம் அன்பு கொண்டுள்ளார்.பல்லவி:

ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களை யும் ஆதரிக்கின்றார். ஆனால், பொல்லாரின் வழிமுறை களைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலை முறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி:

இரண்டாம் வாசகம்.

 உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5:7-10

சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவரின் வருகை வரை பொறுமையோடிருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார். நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங் களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது.

சகோதர சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறை யிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்று கொண்டிருக்கிறார். அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரி களாகக் கொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி;. எசா.61:1

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது: ஒடுக்கப் பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பி யுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

‘வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?”.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  11:2-11

அக்காலத்தில்

யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். அவர்கள் மூலமாக, ‘வரவிருப் பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு மறுமொழியாக, ‘நீங்கள் கேட்ப வற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின் றனர். கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர். தொழு நோயாளர் நலமடைகின்றனர். காது கேளாதோர் கேட்கின்றனர். இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறுபெற்றோர்” என்றார்.

அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப் பற்றிப் பேசத் தொடங் கினார்: ‘நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறை வாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலான வரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்கு முன் உமது வழியை ஆயத்தம் செய்வார். என்று இவரைப் பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்தும் தந்தையே இறைவா!
    எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக் கள், துறவிகள் ஆன்மிக அருள் வாழ்வில் தளர்ந்து போகாது துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமை யைக் கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை மாதிரிகளாகக் கொண்டு வாழ்வதற்கு வேண்டிய வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.
  2. பார்வையற்றோரின் கண்களைத் திறக்கும் தந்தையே இறைவா!
    இருள் கவ்வியிருக்கும் எங்கள் அகக் கண்களைத் திறந்தருளும். நாங்கள் ஒவ்வொருவரும்  அடுத்தவரைப் பற்றி குறைபேசாது, துன் பத்தைத் தாங்குவதிலும், பொறுமையைக் கடைப்பிடிப்பதி லும்; உறுதியுடன் இருக்க அருள்; தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களை யும் ஆதரிக்கும் தந்தையே இறைவா!
கைவிடப்பட் டோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், ஆதரவின்றித் தவிப்போர் இயற்கை பேரிடரால் பாதிக் கப்பட்டோர் அனைவரையும் உமது கருணையினால் நிரப்பி, அவர்கள் உம்முடைய பிரசன்னத்தில் புதிய நம்பிக்கையோடு வாழ  அருள் அளித்திட  வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. சமத்துவ சமுதாயத்தை உருவாக்குகின்ற தந்தையே இறைவா!
    உலகிலே தோன்றியுள்ள சாதிய, நிற, மொழி, கலாசாரப் பிரிவுகளால் அலைக்கழிக்கப்படும் மனித சமூகத்திற்குள் சமத்துவ, சகோதரத்துவ மன நிலையை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற இந்த இணைப்பை அழுத்தவும் 3rd Sunday of Advent 2016

 

 

 

திருவருகைக் காலம் இரண்டாம் – ஞாயிறு.

திருவருகைக் காலம் இரண்டாம் –  ஞாயிறு.

2025.12.07.

முன்னுரை.

ஆண்டவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக!!

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் விடுவிக்கும் நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவருகைக்கால இரண்டாம்; ஞாயிறு திருப்பலியைக்  கொண்டாடுகின்றோம்.

இறைவனுடைய இரக்கம் எவ்வாறானது என்பதையும், சமத்துவம் நிறைந்த ஒரு அன்புச் சமூகம் அவரால் உருவாக்கப்படும் என்பதையும் இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு உறுதியாக எடுத்துரைக் கின்றன. கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார். காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார். நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார். நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்: என்னும் வார்த்தைகள் இறைவனின் தூய அன்பை நமக்கு எடுத்துக்காட்டு கின்றன.

எனவே இந்நாட்களில், ஞானத்தோடு அனைத்தையும் செய்யவும், மனம் மாறியவர்களாய், அந்த மன மாற்றத்தைச் செயலில் காட்டுபவர்களாய் இருந்து,  அன்புச் சமூகமாய் வாழவும் அருள் வரம் கேட்டுத்; தொடரும் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்.

நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்.

இறைவாக்கினர் எசாயா  நூலிருந்து வாசகம். 11:1-10

ஆண்டவருக்குரிய நாளில் ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும். அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும். ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு – இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார்.

கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார். காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார். நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்கு வார். நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார். வார்த்தை எனும் கோலினால் கொடிய வரை அடிப்பார். உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை. உண்மை அவருக்கு இடைக்கச்சை.

அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும். அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும். பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும். அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும். சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையா டும். பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை. கேடு விளைப்பார் யாருமில்லை. ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிற இனத்தார் தேடி வருவார்கள். அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்தகாக இருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 72: 1-2, 7-8, 12-13, 17

பல்லவி: ஆண்டவர் காலத்தில் நீதி தழைத்தோங்கும்.

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும். அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!பல்லவி

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக. நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. ஒரு கடலிலிருந்து அடுத்த கடல் வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார். பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.பல்லவி

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.பல்லவி

அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி

இரண்டாம் வாசகம்.

மக்கள் அனைவரையும் கிறிஸ்து மீட்கிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 15:4-9

சகோதரர் சகோதரிகளே,

முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதி யையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்.

ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே. கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். மூதாதை யருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும், பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன். உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்று வேன்” என இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி;. லூக்.3:4,6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள். அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது”;.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  3:1-12

அக்காலத்தில்

அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து,  ‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று பறைசாற்றி வந்தார்.

இவரைக் குறித்தே, ‘பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்த மாக்குங்கள். அவருக்காகப் பாதையைச் செம்மை யாக்குங்கள்” என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார். தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார். வெட்டுக் கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தார்கள்.

பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, ‘விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்தி லிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?  நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை. என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தா யிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.

நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர்  என்னை விட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமை யையும் பதரையும் பிரித்தெடுப்பார். தம் கோதுமை யைக் களஞ்சியத்தில் சேர்ப்பார். ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

1.ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி ஆகியவற்றை வழங்கும் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி  ஆகியவற்றைப் பெற்று திருச்சபையை வழிநடாத்திடத் தேவையான வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் விடுவிக் கும் தந்தையே இறைவா!

எங்கள் அனைவரை யும் தீமையிலிருந்து விடுவித்து, நாம் மனம் மாறி அதற்கேற்ற செயல்களைச் செய்து அன்புச் சமூகமாக வாழ  எமக்கு அருள்; தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. நீதியின் தந்தையே தந்தையே இறைவா!

நாடுகளை ஆழ்வோருக்கும், மற்றும் பல்வேறு பொறுப்புக்களிலுள்ள அனைவருக்கும் நீதியோடும், உண்மையோடும் செயற்படும்  ஆற்றலை அளியும். அவர்களிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர்கள் மக்களின்  நலனில் அக்கறை கொண்டவர்களாக வாழ  அருள் அளித்திட  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்ய வல்லவரான தந்தையே இறைவா!

குழந்தைகளின்றி வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி அவர்களுடைய ஏக்கத்தை நீக்கி குழந்தை என்னும் ஆசீர்வாதத்தை அவர்களுக்கு அளித்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற இந்த இணைப்பை அழுத்தவும்2nd Sunday of Advent 2025

 

 

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு. 2025

 

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு. 2025

2025.11.30.

முன்னுரை.

அகமகிழ்வேடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம். வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தமது பேரன்பை நமக்;குக் காட்டி, தமது மீட்பையும் நமக்குத்; தரும் நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவருகைக்கால முதல் ஞாயிறு திருப்பலி யைக்  கொண்டாடுகின்றோம்.

இறுதிக்காலம் இதுவே, மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம் என்னும் உயரிய அழைப்பு இன்று நமக்குக் கொடுக்கப்படுகின்றது. தங்கள் வாள்க ளைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார் கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது. அவர்கள் இனி ஒருபோதும் போர்ப் பயிற்சி பெற மாட்டார்கள் என்பது அண்டவரிமிருந்து நமக்குக் கிடைக்கவிருக்கும் அமைதியையும், நிறை ஆசீரையும்; குறிப்பிட்டுக் காட்டுகின்றது.

இந்த வாக்குறுதிகளுக்காக நன்றி கூறிக்கொண்டு, இருளின் ஆட்சிக்குரிய செயல்களான: களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்கள் ஆகியவற்றைக் களைந்துவிட்டு, இயேசு கிறிஸ்துவை நம் மீட்பராக ஏற்று விசுவசித்து அவர் காட்டும் வழியில் நடக்க  வேண்டும் அருள் வரம் கேட்டுத்; தொடரும் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்.

இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்று சேர்க்கின்றார்.

இறைவாக்கினர் எசாயா  நூலிருந்து வாசகம். 2:1-5

யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி:

இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும். எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும். மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.

வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம். யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார். நாமும் அவர் நெறிகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும். எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.

அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார். பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார். அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது. அவர்கள் இனி ஒருபோதும் போப்ப் பயிற்சி பெற மாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 122: 1-2, 4-9

பல்லவி: அகமகிழ்வேடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”, என்ற அழைப்பை நான் கேட்டபோது அக மகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.பல்லவி:

ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர். இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.பல்லவி:

எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள். ‘உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!பல்லவி:

உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

நமது மீட்பு மிக அண்மையில் உள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13:11-14

சகோதரர் சகோதரிகளே,

இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள். உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது.

இரவு முடியப்போகிறது. பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடி வெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. திபா.85:7

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும். உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

விழிப்பாயிருங்கள். ஆயத்தமாய் இருங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  24:37-44

அக்காலத்தில்

மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:

நோவாவின் காலத்தில் இருந்ததுபோலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப் பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விட்டுவிடப்படுவார்.

இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விட்டுவிடப்படுவார்.

விழிப்பாயிருங்கள். ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரி மையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

1.நல்வாழ்வையும், உடல் நலத்தையும் நிறைவாகத் தரும் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொண்டு  இறைமக்களை நிறை உண்மையை நோக்கி வழிநடாத்திடத் தேவையான வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. மீட்பளிக்கும் தந்தையே இறைவா!

நாங்கள், களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்கள் ஆகியவற்றைக் களைந்து,  விட்டு. இயேசு கிறிஸ்துவை எம் மீட்பராக ஏற்று விசுவசித்து அவர் காட்டும் வழியில் நடக்க  எமக்கு அருள்; தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. தீமை அனைத்தில் இருந்தும் எம்மை விடுவிக்கும் தந்தையே இறைவா!

எமது விசுவாச வாழ்வைக் குழப்பும் சக்திகள் அனைத்தையும் நாம் முறியடித்து, உண்மையாம் கிறிஸ்து காட்டும் வழிகளைப்  பின்பற்றி வாழ்ந்திட அருள் அளித்திட  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. மீட்பளிக்கும் தந்தையே இறைவா!

சவால்களும், ஏமாற்றங்களும் நிறைந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் உமது பிள்ளைகளாகிய நாங்கள்: உமது விருப்பம் என்ன என்பதைக் கண்டுணர்ந்த செயற்படுவதற்கு வேண்டிய அருளாற்றலை எமக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற இந்த இணைப்பை அழுத்தவும்1st Sunday of Advent 2025

 

இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா

இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா

2025.11.23

திருப்பலி முன்னுரை

தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார். அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார்.

இறை இயேசுவில் அன்பின் சகோதர சகோதரிகளே! விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரையும் படைத்தவரான நம் இறைத் தந்தையின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள் கூறி இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா தினத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடனும், மகிழ்வுடனும் வரவேற்கின்றோம்.

அன்பு, பாசம், பரிவு, அக்கறை, மன்னிப்பு, உண்மை, நீதி, அமைதி, விடுதலை உடைய, மக்களின் குறையறிந்து நிறைவளிக்கும்,  மக்களைத் தேடிவரும் தலைமைத்துவத்தை இன்றைய உலக மக்கள் எதிர்பர்த்து நிற்கின்றனர். இவை அனைத்தும் நம் அண்டவர் இயேசுக்கிறிஸ்துவிடம் மாத்திரமே உண்டு என்னும் உண்மையைக் கிறிஸ்து அரசர் பெருவிழா நமக்கு எடுத்துரைக்கின்றது. ஆண்டவரது இல்லத்தில் நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன என்னும் உண்மை, இயேசுவின் தலைமைத்துவத்தின் தன்மையை நமக்கு தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

எனவே இயேசுவை நம் ஆண்டவராகவும், மீட்பராகவும், தலைவராகவும் முழுமனத்துடன் நம்பி, ஏற்றுக்கொண்டு: “ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பிற்கு நிறைவாக செவிமடுத்து அவர் நமக்குக் தருகின்ற அருள்வாழ்வைப் பெற்று மகிழும் ஆர்வத்தைப் பெற்றிட அருள்வரம் கேட்டுத் தொடரும் கல்வாரிப் பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசகம்

இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-3

அந்நாள்களில்

இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: “நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். ‘நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்’ என்று உமக்கே ஆண்டவர் கூறினார்.”

இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 4-5 (பல்லவி: )

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். – பல்லவி

ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். – பல்லவி

இரண்டாம் வாசகம்

தந்தையாம் கடவுள் நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-20

சகோதரர் சகோதரிகளே,

தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார். அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார். ஆம் மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.

அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே. அனைத்தும் அவரோடு இணைந்து நிலைபெறுகின்றன.

திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 11: 10

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 35-43

அக்காலத்தில்

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்ததை மக்கள் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், “பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும்” என்று கேலி செய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்று எள்ளி நகையாடினர். “இவன் யூதரின் அரசன்” என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று” என்று அவரைப் பழித்துரைத்தான்.

ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று பதிலுரைத்தான்.

பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான்.

அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்.

1.வலிமையும், வாழ்வும் அருளுகின்ற தந்தையே இறைவா!
எமது திருத்தந்தை ஆயர்கள்,குருக்கள், துறவிகள் அனைவருக்குள்ளும், தூயதோர் உள்ளத்தை உருவாக்;கி, உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை அவர்களுக்கு அளித்து, அவர்கள் அனத்து மக்களுக்கும், ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும்  இருந்து செயற்படுவதற்கு  வேண்டிய ஆற்றலை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2..வலிமையாய்ச் செயலாற்றுகின்ற தந்தையே இறைவா!
தலைமைத்துவத்தின் நற்பண்புகளை அனைத்துத் தலைவர்களிடமும் உருவாக்கி, அவர்கள் மக்களின் நலனில் அக்கறையடையவர்களாகவும், மனித மாண்பை மதிக்கின்றவர்களாகவும், அமைதியின் கருவிகளாகவும்; வாழவும், செயலாற்றவும் அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.வாழ்வு அளிக்கின்றவரான தந்தையே இறைவா!இறையரசையும், அதற்கு ஏற்புடையதையும் தேடுவதில் அதிக ஆர்வமுள்வர்களாக நாங்கள் ஒவ்வொருவரும் இருந்து, எந்த வேளையிலும் உமது அருளில் மாத்திரமே நம்பிக்கை கொண்டவர்களாக உமது வார்த்தையை என்றும் கடைப்பிடித்து வாழ அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.எமக்கு அனைத்தையும் கற்றுத்தரும் தந்தையே!உம்மைப் பற்றிய அறிவிலும், ஞானத்திலும் நாமும், எமது பிள்ளைகளும் வளர எமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்   இறைவார்த்தையையும், திருச்சபைப் பணியாளர்கள் வழியாக நீர் வெளிப்படுத்தும் செய்திகளையும் எம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து அறிவிலும், ஞானத்திலும் வளர நாம் முயற்சிகளை மேற்கொள்ள அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன் றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற இந்த இணைப்பை அழுத்தவும் Christ the King 2025 Feast

 

 

 

 

பொதுக்காலம் 33ஆம் வாரம் – ஞாயிறு

திருப்பலி முன்னுரை

“என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.”

இறை இயேசுவில் அன்பின் சகோதர சகோதரிகளே!

உலகுக்கு நீதி வழங்க வருகின்றவரும், பூவுலகை நீதியுடன் ஆழுகின்றவரும், மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்பவருமான நம் இறைத் தந்தையின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள் கூறி ஆண்டின் பொதுக்காலம் 33ம் ஞாயிறு தினத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடனும், மகிழ்வுடனும் வரவேற்கின்றோம்.

இன்றைய திருப்பலியின் இறைவார்த்தைகள்: இறை அச்சம் இல்லாமல் வாழும் ஆணவக்காரர், கொடுமை செய்வோர் ஆகியோர் எதிர்கொள்ளவிருக்கும் வேதனை பற்றி அறிவுறுத்துவதோடு, எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் எனவும், எப்போதும் நாம் ஆண்டவரைப் போற்றிப் புகழவேண்டுமெனவும், இறையரசுக்காக நீதிமான்கள் துன்புறுத்தப்படுவார்கள் எனவும் எடுத்துக் கூறுகின்றன.

எனவே, நாம் நமது துன்ப வேளைகளில், நிலைகுலையாது இறைவனுக்கு உறுதியுடன் சான்று பகர, அவர் நமக்கு நாவன்மையையும், ஞானத்தையும் தருவார் என்னும் உறுதியோடு பயணிக்க இறையருள் வேண்டித் தொடரும் கல்வாரிப் பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசகம்

உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்.

இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 4: 1-2

“இதோ! சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது. முற்றிலும் சுட்டெரித்துவிடும்” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

“ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 98: 5-6. 7-8. 9 (பல்லவி: 9)

பல்லவி: மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். – பல்லவி

கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். – பல்லவி

ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். – பல்லவி

இரண்டாம் வாசகம்

உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-12

சகோதரர் சகோதரிகளே,

எங்களைப் போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம்.

‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’ என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.

இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-19

அக்காலத்தில்

கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.

அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது” என்றார்.

மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.

இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.

ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்.

  1. நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன் என வாக்களித்த தந்தையே இறைவா!
    எம் திருத்தந்தை ஆயர்கள், குருக்கள், துறவிகள் ஆகிய அனைவரும், தமது கிறிஸ்தவ நம்பிக்கை வாழ்விலும், பணிவாழ்விலும் சவால்களை எதிர்கொள்ளும் போது உமது வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்டு, தீமை, அநீதி, பொய்மை போன்றவைகளைத் துணிவுடன் எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும்   வேண்டிய  நாவன்மையையும் ஞானத்தையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  1. உமது இறக்கைகளில் நலம் தரும் மருந்தைக் கொண்டுள்ள தந்தையே இறைவா!
    உமது மக்களாகிய நாங்கள் அனைவரும் சோம்பல், நம்பிக்கையற்ற தன்மை முதலியவற்றை ஒழத்துவிட்டு, போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாது, உம்முடைய இரக்கத்தில் மாத்திரம் நம்பிக்கை கொண்டு இறையச்சம் உடையவர்களாய் வாழுவதற்கு வேண்டிய சக்தியை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  1. உலகுக்கு நீதி வழங்க வருகின்றவரான தந்தையே இறைவா!
    உலக நாடுகளில் பெருகிவரும் வன்முறை, அதிகாரப் பேராசை, ஆயுதப்போட்டி, பகைமை அநீதி முதலியவற்றை அழித்து உமது நீதி மட்டுமே உலகில் நிலைபெற அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  1. வல்லமையின் ஆண்டவரே இறைவா!
    நாங்கள் அனைவரும், எமது கிறிஸ்தவ விசுவாச வாழ்வுக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ளும்போது மன உறுதியோடு இருந்து எங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற இந்த இணைப்பை அழுத்தவும்  33rd Sunday Ordinary Time 2025

 

 

ஆண்டின் பொதுக்காலம் 32ம் ஞாயிறு 2025.11.09

ஆண்டின் பொதுக்காலம் 32ம் ஞாயிறு 2025.11.09

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா – கோவில் நேர்ந்தளிப்பு ஆண்டு நாள்

திருப்பலி முன்னுரை

உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்” “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்”

இறை இயேசுவில் அன்பின் சகோதர சகோதரிகளே!

நம்மோடு இருக்கின்றவரும், நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளவரும், இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையுமானவருமான நம் இறைத் தந்தையின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள் கூறி இன்றைய திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடனும், மகிழ்வுடனும் வரவேற்கின்றோம். ஆண்டின் பொதுக்காலம் 32ம் ஞாயிறாகிய இன்று நாம் வத்திக்கானிலுள்ள இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடுகின்றோம்.

இத் திருவிழாவானது, உலகின் தாய் ஆலயமாகிய லாத்தரன் பசிலிக்காவுடன் அனைத்து கத்தோலிக்கர்களும் ஒற்றுமையோடும் விசுவாசத்தோடும் இணைந்து இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுவதோடு, திருஅவையின் மையமான உரோமுக்கும், திருஅவையின் தலைவரான திருத்தந்தைக்கும் கத்தோலிக்க இறை நம்பிக்கையாளர்கள் தங்கள் தொடர்பை வலுப்படுத்தவும் இந்த நாள் நம்மை அழைத்து நிற்கின்றது.

இத் திருவிழா இறைவனுடைய இல்லம் என்பது வெறும் கட்டிடம் அல்ல, மாறாக அது கத்தோலிக்க இறை நம்பிக்கையாளர்கள் ஒன்று கூடும் தூய ஆவியாரின் வல்லமையால் ஒன்றிணைக்கப்பட்ட இறைச் சமூகம் என்பதையும் நினைவூட்டுவதோடு, ஒவ்வொரு கத்தோலிக்கரும் தமது இதயத்தையும் இறைவன் தங்கும் ஆலயம் என்பதை நம்பி ஏற்றுக்கொண்டு அதனை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந் நாளின் அழைப்பாகும்.

எனவே இத் திருவிழாவின் உண்மைப் பொருளுணர்ந்து, நாமும் நம் உடல், இறைவன் தங்கும் ஆலயம் என்பதை ஏற்றுக்கொண்டு, தூய ஆவியாரின்  இயல்புகளால் நம்மை நிறைத்து, நம்மைத் தூய்மைப்படுத்தி, நம்மை முழுமையாக இறைவனுக்க அர்ப்பணிப்போம். அதற்கான ஆன்மிகச் சக்தி வேண்டித் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.

அத்தோடு இன்றை நாளில், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக உயிர்தியாகம் செய்த நமது மன்னார் கத்தோலிக்க இறைமக்களை நினைவு கூருகின்றோம். சாவுக்கு அஞ்சாது கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் செய்த நமது மன்னார் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் மறைசாட்சிகள் என்னும் மகிமையை பெற்றிட இறைவனிடம் மன்றாடுவோம்.

முதல் வாசகம்

நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-2, 8-9, 12

அந்நாள்களில்

ஒரு மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது.

அவர் என்னிடம் உரைத்தது: “இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயும் இடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

பல வகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா. அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 46: 1-2,3. 4-5. 7-8 (பல்லவி: 4)

பல்லவி: ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.

கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால், நிலவுலகம் நிலை குலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை. – பல்லவி

ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது. வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. – பல்லவி

படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! – பல்லவி

இரண்டாம் வாசகம்

நீங்கள் கடவுளுடைய கோவில்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 9டி-11, 16-17

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் கடவுள் எழுப்பும் கட்டடம். கடவுள் எனக்கு அளித்த அருளின் படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.

நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 குறி 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! எனது பெயர் என்றென்றும் போற்றப்படுமாறு இக்கோவிலை நான் தெரிந்தெடுத்துத் திருநிலைப்படுத்தியுள்ளேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-22

அக்காலத்தில்

யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்.

அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள், “உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்” என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவுகூர்ந்தார்கள்.

யூதர்கள் அவரைப் பார்த்து, “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், “இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்றார். அப்போது யூதர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?” என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்.

அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட போது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்.

1.எமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளவரான தந்தையே இறைவா!

திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை ஆயர்கள், குருக்கள், துறவிகள் ஆகிய அனைவரும், தாம் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் தங்களில் குடியிருக்கிறார் என்னும் உண்மையை ஆழமாக உணர்ந்து ஏற்றுக்கொண்டு தூய ஆவியானவரின் இயல்புகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவற்றைத் தம்மிலே பிரதிபலித்து வாழ்ந்திட அருள் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. படைகளின் ஆண்டவரான தந்தையே இறைவா!

உமது மக்களாகிய நாங்கள் அனைவரும் உமது ஆலயமாக இருக்கும் உடலை மாசுபடுத்தும் ஊனியல்பின் நாட்டங்களான பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவற்றை அழிப்பதற்கு வேண்டியச க்தியை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இடுக்கணுற்ற வேளைகளில் எமக்கு உற்ற துணையாயிருக்கும் தந்தையே இறைவா!

பல ஆண்டுகளுக்கு முன்னர் சாவுக்கு அஞ்சாது உமது திருமகன் கிறிஸ்துவுக்காக வீரத்தோடும், விசுவாசத்Nதூடும் இரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் செய்த மன்னார் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களை மறைசாட்சிகள் என்னும் மகிமையை அடைய நீர்தாமே அருள் கூர்ந்து அவர்களை அந் நிலைக்கு உயர்த்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அருள் வளங்களின் ஊற்றே இறைவா!

யூபிலி ஆண்டைக் கொண்டாடி வரும் நாங்கள் அனைவரும், “கிறிஸ்துவோடு இணைந்து முதிர்ச்சி நிலை பெறுகிற விதத்தில்” எம் கிறித்தவ அழைத்தலுக்கு ஏற்ற வாழ்வினை மேற்கொள்ள வேண்டுமென்றும், மாசற்றவராய் நடந்து, நேரியவற்றைச் செய்து, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர்கள் ஆகும் பேற்றினைப் பெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற இந்த இணைப்பை அழுத்தவும் 

 

 

 

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – ஞாயிறு

திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – ஞாயிறு

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புள்ள சகோதர சகோதரிகளே!

ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் வந்துள்ள, நம் ஆண்டவர் இயேசுவின் திருப் பெயரில் வாழ்த்துக்கள் கூறி திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடும், பெரு மகிழ்வோடும் வரவேற்கின்றோம்.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதும்;. இடைவிடாது இறைவனிடம் வேண்டுதல் செய்வதும். எல்லாச் சூழ்நிலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறுவதும், தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்காதிருப்பதும். இறைவாக்குகளைப் புறக்கணிக்காமல் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொண்டு. எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகி வாழ்வதுமே நமது கிறிஸ்தவ ஆன்மிக வாழ்வின் முழுமைக்கான வழிகளாக இருக்கின்றன என்பதை இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

எனவே அமைதி அருளுகின்றவரும், நம்மை முற்றிலும்; தூய்மையாக்குபவரும்,  நம்முடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காக்கின்றவரும், நம்பிக்கைக்குரியவருமான நம் கடவுளிடம் சரணடைந்து அவர் பின்னே செல்லுவோம், அமைதியையும், மகிழ்ச்சியையும் பெறுவோம். அதற்காக இத்திருப்பலியில் நம்மை அர்பணித்துச் செபிப்போம்.

 

முதல் வாசகம்

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-2a, 10-11

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் என்னை அனுப்பியுள்ளார்.

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்   லூக் 1: 47-48. 49-50. 53-54

பல்லவி: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்.

ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். பல்லவி

ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். –  பல்லவி

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். – பல்லவி

இரண்டாம் வாசகம்

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது கடவுள் உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத் தையும் காப்பாராக!

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 16-24

சகோதரர் சகோதரிகளே,

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.

தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமை களையும் விட்டு விலகுங்கள்.

அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக! உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக் குரியவர். அவர் இதைச் செய்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி : எசா 61: 1

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோ ருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 6-8, 19-28

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனை வரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர் களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, “அப்படி யானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார். “நீர் தாம் வரவேண்டிய இறை வாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறு மொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “‘ஆண்டவருக்காக வழியைச் செம்மை யாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது’ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப் பற்றியே” என்றார்.

பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வரவேண்டிய இறைவாக் கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக் கிறீர்?” என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களி டையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரை யிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நம்பிக்கையாளர் மன்றாட்டு.

1.உம் பணியாளருக்குத் துணையாக இருந்து வருகிற எங்கள் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரையும்  நிறைவாக ஆசிர்வதித்து வலுப் படுத்தும். அவர்கள் ஒவ்வொருவரும:; தாம் ஒடுக்கப் பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோ ருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோ ருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் உம்மால் அழைக்கப்பட்டுள் ளோம், அனுப்பப்பட்டுள்ளோம் என்னும் உண்மையை உணர்ந்து பணியாற்ற வேண்டிய ஞானத்தை அவர் களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகின்ற தந்தையே இறைவா!

இறைமக்கள் சமுதாயத்தின் உறுப்பினர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும்: தூய ஆவியின் செயல் பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். என்னும் இறைவனின் குரலுக்கு நல்லுள்ளத்தோடு செவிமடுத்து, நாங்கள் ஒவ்வொருவரும் இறை மகிமைக்காவும், பிறர் நலனுக்காகவும் உழைக்கின்ற மக்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் காப்பாற் றுகின்றவரான தந்தையே இறைவா!

அலகையின் தந்திர வலையில் சிக்கிப் போதைப் பொருள் பாவனையினாலும், கலாச்சாரச் சீர்கேடுகளி னாலும், ஒழுக்க வாழ்விற்கு மாறான செயற்படுகளி னாலும், தவறான இலத்திரனியல் பொருட்களின் பாவனையினாலும் சிதைவடைந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து, இந்தத் தீமையின் பிடியிலிருநது அவர்களை விடுவித்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. நேர்மையும் விடுதலையும் துளிர்த்தெழச் செய்கின்றவரான தந்தையே இறைவா!

உலக நாடுகள் முழுவதிலும் விதைக்கப்பட்டுள்ள அநீதி. சுயநலம், பேரின்மீது பெருவிருப்பம், அடக்குமுறை போன்ற தீமைகளை வேரறுத்து அமைதி, விடுதலை, பிறர்நலம், உண்மை  என்னும் விதைகளை விதைத்திட வேண்டுமென்றும், தற்போதைய காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அத்தனை தாக்கங்களிலிருந்தும் அனைத்து மக்களையும் பாதுகாத்திட் வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3rd Week of Advent 2023

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு.

2019.12.08.

முன்னுரை.

ஆண்டவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக!!

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் விடுவிக்கும் நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவருகைக்கால இரண்டாம்; ஞாயிறு திருப்பலியைக்  கொண்டாடுகின்றோம்.

இறைவனுடைய இரக்கம் எவ்வாறானது என்பதையும், சமத்துவம் நிறைந்த ஒரு அன்புச் சமூகம் அவரால் உருவாக்கப்படும் என்பதையும் இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு உறுதியாக எடுத்துரைக்கின்றன. கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார். காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார். நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார். நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்: என்னும் வார்த்தைகள் இறைவனின் தூய அன்பை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

எனவே இந்நாட்களில், ஞானத்தோடு அனைத்தையும் செய்யவும், மனம் மாறியவர்களாய், அந்த மனமாற்றத்தைச் செயலில் காட்டுபவர்களாய் இருந்து,  புதுப்பித்தலுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியவர்களாய்,  அன்புச் சமூகமாய் வாழவும், அருள் வரம் கேட்டுத்; தொடரும் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்.

நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்.

இறைவாக்கினர் எசாயா  நூலிருந்து வாசகம். 11:1-10

ஆண்டவருக்குரிய நாளில்

ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும். அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும். ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு – இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார்.

கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார். காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார். நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார். நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார். வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார். உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை. உண்மை அவருக்கு இடைக்கச்சை.

அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும். அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும். பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும். அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும். சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையா டும். பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை. கேடு விளைப்பார் யாருமில்லை. ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிற இனத்தார் தேடி வருவார்கள். அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்தகாக இருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 72: 1-2, 7-8, 12-13, 17

பல்லவி: ஆண்டவர் காலத்தில் நீதி தழைத்தோங்கும்.

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும். அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி:

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக. நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. ஒரு கடலிலிருந்து அடுத்த கடல் வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார். பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.பல்லவி:

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.பல்லவி:

அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர் மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக!பல்லவி:

இரண்டாம் வாசகம்.

மக்கள் அனைவரையும் கிறிஸ்து மீட்கிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 15:4-9

சகோதரர் சகோதரிகளே,

முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்.

ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே. கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும், பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, ‘பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன். உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்” என இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி;. லூக்.3:4,6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள். அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது”;.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  3:1-12

அக்காலத்தில்

அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து,  ‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று பறைசாற்றி வந்தார்.

இவரைக் குறித்தே, ‘பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள். அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார். தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார். வெட்டுக் கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தார்கள்.

பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, ‘விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?  நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை. என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.

நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர்  என்னை விட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார். ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி ஆகியவற்றை வழங்கும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி ஆகியவற்றைப் பெற்று திருச்சபையை வழிநடாத்திடத் தேவையான வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் விடுவிக்கும் தந்தையே இறைவா!  எங்கள் அனைவரை யும் தீமையிலிருந்து விடுவித்து, நாம் மனம் மாறி அதற்கேற்ற செயல்களைச் செய்து அன்புச் சமூகமாக வாழ  எமக்கு அருள்; தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. நீதியின் தந்தையே தந்தையே இறைவா! நாடுகளை ஆழ்வோருக்கும், மற்றும் பல்வேறு பொறுப்புக்களிலுள்ள அனைவருக்கும் நீதியோடும், உண்மையோடும் செயற்படும் ஆற்றலை அளியும். அவர்களிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர்கள் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக வாழ  அருள் அளித்திட  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்ய வல்லவரான தந்தையே இறைவா! குழந்தைகளின்றி வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி அவர்களுடைய ஏக்கத்தை நீக்கி குழந்தை என்னும் ஆசீர்வாதத்தை அவர்களுக்கு அளித்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்  2nd Sunday of Advent 2019

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு.

2019.12.01.

முன்னுரை.

அகமகிழ்வேடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம். வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தமது பேரன்பை நமக்;குக் காட்டி, தமது மீட்பையும் நமக்குத்; தரும் நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவருகைக்கால முதல் ஞாயிறு திருப்பலி யைக்  கொண்டாடுகின்றோம்.

இறுதிக்காலம் இதுவே, மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம் என்னும் உயரிய அழைப்பு இன்று நமக்குக் கொடுக்கப்படுகின்றது. தங்கள் வாள்க ளைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார் கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது. அவர்கள் இனி ஒருபோதும் போர்ப் பயிற்சி பெற மாட்டார்கள் என்பது அண்டவரிமிருந்து நமக்குக் கிடைக்கவிருக்கும் அமைதியையும், நிறை ஆசீரையும்; குறிப்பிட்டுக் காட்டுகின்றது.

இந்த வாக்குறுதிகளுக்காக நன்றி கூறிக்கொண்டு, இருளின் ஆட்சிக்குரிய செயல்களான: களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்கள் ஆகியவற்றைக் களைந்துவிட்டு, இயேசு கிறிஸ்துவை நம் மீட்பராக ஏற்று விசுவசித்து அவர் காட்டும் வழியில் நடக்க  வேண்டும் அருள் வரம் கேட்டுத்; தொடரும் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்.

இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்று சேர்க்கின்றார்.

இறைவாக்கினர் எசாயா  நூலிருந்து வாசகம். 2:1-5

யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி:

இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும். எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும். மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.

வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம். யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார். நாமும் அவர் நெறிகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும். எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.

அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார். பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார். அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது. அவர்கள் இனி ஒருபோதும் போப்ப் பயிற்சி பெற மாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 122: 1-2, 4-9

பல்லவி: அகமகிழ்வேடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”, என்ற அழைப்பை நான் கேட்டபோது அக மகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.பல்லவி:

ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர். இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.பல்லவி:

எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள். ‘உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!பல்லவி:

உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

நமது மீட்பு மிக அண்மையில் உள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13:11-14

சகோதரர் சகோதரிகளே,

இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள். உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது.

இரவு முடியப்போகிறது. பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடி வெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. திபா.85:7

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும். உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

விழிப்பாயிருங்கள். ஆயத்தமாய் இருங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  24:37-44

அக்காலத்தில்

மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:

நோவாவின் காலத்தில் இருந்ததுபோலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப் பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விட்டுவிடப்படுவார்.

இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விட்டுவிடப்படுவார்.

விழிப்பாயிருங்கள். ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரி மையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. நல்வாழ்வையும், உடல் நலத்தையும் நிறைவாகத் தரும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொண்டு இறைமக்களை நிறை உண்மையை நோக்கி வழிநடாத்திடத் தேவையான வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. மீட்பளிக்கும் தந்தையே இறைவா!  நாங்கள், களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்கள் ஆகியவற்றைக் களைந்து,  விட்டு. இயேசு கிறிஸ்துவை எம் மீட்பராக ஏற்று விசுவசித்து அவர் காட்டும் வழியில் நடக்க  எமக்கு அருள்; தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. தீமை அனைத்தில் இருந்தும் எம்மை விடுவிக்கும் தந்தையே இறைவா! எமது விசுவாச வாழ் வைக் குழப்பும் சக்திகள் அனைத்தையும் நாம் முறியடித்து, உண்மையாம் கிறிஸ்து காட்டும் வழிக ளைப் பின்பற்றி வாழ்ந்திட அருள் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.
  4. மீட்பளிக்கும் தந்தையே இறைவா! சிறைகளுக்குள்ளும், வதை முகாம்களுக்குள்ளும், தடுப்பு முகாம்களுக்குள்ளும் அடைபட்டு வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களின் கண்ணீரைத் துடைத்து அவர்கள் விடுதலைபெற்று அமைதியோடும், பாது காப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ அருள் கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.

    சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்     1st Sunday of Advent 2019