All posts by Anthonithas Dalima

புனித யோசேவ்வாஸ்- இலங்கையின் திருத்தூதர் பெருவிழா.

புனித யோசேவ்வாஸ்- இலங்கையின் திருத்தூதர் பெருவிழா.

2026.01.18.

முன்னுரை.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள் தோறும் அறிவியுங்கள்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தம் மக்களுக்கு ஆறுதல் அளிக்கின்றவரும், மீட்பு வழங்குகின்றவரும், மாட்சியையும் புகழ்ச்சியையும், ஆற்றலையும் எழிலை யும் தம் திருமுன் கொண்டுள்ளவரான நம் இறைத் தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இலங்கையின் திருத்தூதரான புனித யோசேவ்வாஸ் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.

இன்று நாம் கொண்டாடும் இலங்கையின் திருத்தூதராக போற்றப்படும் புனித யோசேவ்வாஸ் அவர்களின் பெரு விழாவில், இவருடைய தியாக வாழ்வையும், பணியார் வத்தையும், நற்செய்தி அறிவிப்பில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டையும்  நினைவுகூருகிறோம். அவர் தன்னு டைய பணி வாழ்வில், தாழ்மையையும் துன்பத்தையும் தேர்ந்தெடுத்தவர்.

17-ஆம் நூற்றாண்டில் இலங்கையில் கத்தோலிக்க இறைநம்பிக்கை சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, கத்தோலிக்கர்  துன்புறுத்தப்பட்ட காலத்தில், கோவா விலிருந்து எல்லாவித ஆபத்துகளையும் பொருட் படுத்தாமல், இலங்கைக்கு  வந்து, பல சவால்களின் மத்தியில் திருச்சடங்குகளை நடத்தினார். நோயாளிக ளுக்கு ஆறுதலாய் இருந்தார், கத்தோலிக்க இறை நம்பிக்கையாளர்களைத் தேடிச் சென்றார், கத்தோலிக்க இறைநம்பிக்கை சிதைந்து போகாமல் இருக்க தன் வாழ்வையே அர்ப்பணித்தார்.

புனித யோசேவ்வாஸ் நமக்கு வாழ்ந்து காட்டிய வாழ்க்கைப்பாடம்: இறை நம்பிக்கை  என்பது வசதியில் அல்ல, தியாகத்தில் வெளிப்படும் என்பதே. எனவே இத் திருப்பலியில், புனித யோசேவ்வாஸ் அடிகளாரின்; தாழ்மை, துணிச்சல், தியாகம் ஆகியவற்றை நம் வாழ்விலும் நடைமுறைப்படுத்த அருள் வேண்டுவோம். அவரது பரிந்துரையால், நாமும் இன்றைய உலகில் உண்மையான கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ, இயேசு கிறிஸ்துவை நம் மீட்பராக ஏற்று விசுவசித்து அவர் காட்டும் வழியில் நடக்க  வேண்டும் அருள் வரம் கேட்டுத்; தொடரும் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம். (வாசகநூல் 3, பக்கம்582, இல.05)

மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

இறைவாக்கினர் எசாயா  நூலிருந்து வாசகம். 52:7-10

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத் தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலை யைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங் கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!

இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்ற னர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.

பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணு லகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 96: 1-3, 6-8,10 (வாசகநூல் 3, பக்கம்590, இல.05)             

பல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;. ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள் தோறும் அறிவியுங்கள்.பல்லவி:

பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங் கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத் தகு செயல்களை அறிவியுங்கள். மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன. ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன.பல்லவி:

மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவரு க்குச் சாற்றுங்கள். ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். வேற்றினத்தாரிடையே கூறுங்கள்;பல்லவி:

‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது. அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.பல்லவி:

இரண்டாம் வாசகம். (வாசகநூல் 3, பக்கம்586, இல.02)

தூய ஆவியார் கண்காணிப்பாளராக ஏற்படுத்தி யுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20:17-18,28-32,36

சகோதரர் சகோதரிகளே,

பவுல் மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆளனுப்பி, திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்தார். அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது:

தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்கு தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள். உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.

எனவே, விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ் வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்கு முரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்லது.

இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள் படியிட்டு அவர்களெல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டி னார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. மத்.28:9,10  (வாசகநூல் 3, பக்கம்603, இல.02)

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்: உலகமுடிவு வரை எந்நாழும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா.

நற்செய்தி வாசகம். (வாசகநூல் 3, பக்கம்607, இல.06)

“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற் செய்தியைப் பறைசாற்றுங்கள்;.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  16:15-20

அக்காலத்தில்

இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங் கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.

இவ்வாறு அவர்களோடு பேசியபின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந் தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தி யைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர் களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

  1. மக்களுக்கு ஆறுதல் அளிக்கின்றவரும், மீட்பு வழங்குகின்றவருமான தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் உமது அருள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்களாக, புனித யோசேவ்வாஸ் போல் தாழ்மையிலும் துணிச்சலிலும், துன்பங்களிடையிலும் இறை நம்பிக்கையிலும்; உறுதியாக இருந்து நற்செய்தியை அறிவிக்கும் உண்மையான சாட்சியாக விளங்கவும் இறைமக்களை நிறை உண்மையை நோக்கி வழிநடாத்திடவும் தேவையான வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள் ளும் தந்தையே இறைவா!

உமது பிள்ளைகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும்,   புனித யோசேவ்வாஸ் அடிகளரின் வாழ்வைப் பினபற்றி, இறை நம்பிக்கையிலும், நற்செய்தி அறிவிப்புப் பணியிலும் உறுதியாக நிலைத்திருந்து, இயேசு கிறிஸ்துவை எம் மீட்பராக ஏற்று விசுவசித்து அவர் காட்டும் வழியில் நடக்க  எமக்கு அருள்; தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. பேரன்புடையவரான தந்தையே இறைவா!

உமது பிள்ளைகளாகிய நாங்கள், இறைவாக்குகளைப் புறக்கணியாது எமது பாவ வாழ்வை உணர்ந்து,  மனமாற்றத்திற்கான வழிகளைக் கண்டடைந்து, இரக்கமுடையோராகவும், ஒளியின் மக்களாகவும் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. ஒளியான தந்தையே இறைவா!

எமது சிறுவர்களும், இளைஞர்களும் உமது ஒளியின் வழியில் நடந்து, தங்களது சக்தியையும், ஆற்றலையும் உமது பணிக்காகப் பயன்படுத்தும்  இலட்சியப் பிடிப்பை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Feast of St.Joseph Vaz 2026

பொங்கல் – நன்றி விழாத் திருப்பலி.

பொங்கல் – நன்றி விழாத் திருப்பலி.

15.01.2026.

முன்னுரை.

நானிலம் தன் பலனை ஈந்தது. கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம்மை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறவரும், கொடிய பாலைநிலத்தில் வழி நடத்தியவரும், இறுகிய பாறை யிலிருந்து நீரைப் புறப்படச் செய்தவரும், மன்னாவால் பாலைநிலத்தில் உண்பித்தவரும், செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை அளித்தருமான நம் இறைத்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இப் பொங்கல் நன்றித் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.

விவசாயத்தின் மூலம் பெற்றுக்கொண்ட ஆசிர்வாதங் களுக்காக கடவுளுக்கு நாம் நன்றி செலுத்தும் நாள் இந்நாள். விவசாயத்தில் ஈடுபட்டு உழைக்கும் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்யும் நாள் இந்நாள். கடவுள் நம்மீது இரங்கி, நமக்கு ஆசி வழங்கினார், தம் திருமுக ஒளியை நம்மீது வீசினார்,  நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார், செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை நமக்கு அளித்தார் அதனால் நானிலம் தன் பலனை ஈந்தது என்னும் மறுக்கமுடியாத, மறைக்கமுடியாத உண்மையை இன்றைய நாள் நமக்கு எடுத்துரைக்கின்றது. நாம் பெற்றுக்கொள்ளும் அனைத் தும் இறைவனின் இரக்கத்திலிருந்து நமக்குக் கிடைப் பவையே. அதனால் நாம் எப்போதும் இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்னும் உண்மையை நமக்கு இந்நாள் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது.

எனவே நாம்; உண்டு நிறைவுகொள்ளும் போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும் போதும், நம்; ஆடுமாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும் நமக்கு  மிகுதியாகும் போதும், நமக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும், நாம் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய வறுமை யிலிருந்தும், வெறுமையிலிருந்தும்  நம்மை விடுவித்த நம் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிடாதிருப்போம். இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்துகொள்ளு வோம். இறைவனுடைய இரக்கத்தையும், பேரன்பையும் மறவாது, இறைவன் தந்த இயற்கையின் கொடை களுக்காக முழுமனதுடன் இத்திருப்பலியில் நன்றி சொல்வோம்.

முதல் வாசகம்.

ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.

இணைச்சட்ட  நூலிருந்து வாசகம். 08:07-18

அந்நாள்களில்

மோசே மக்களைப் பார்த்துக் கூறியது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த நாடு பள்ளத்தாக்கு களிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது. கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு. அது ஒலிவ எண்ணெயும் தேனும் நிறைந்த நாடு. அந்த நாட்டில் பஞ்சமின்றி நீங்கள் அப்பங்களை உண்பீர்கள். அங்கு உங்களுக்கு எந்தக் குறையும் இராது. அந்த நாட்டின் பாறைகள் அனைத்தும் இரும்பு. அதன் மலைகளிலிருந்து செம்பு வெட்டி எடுக்கலாம். நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள். அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள்.

இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றி னின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள்.

நீங்கள் உண்டு நிறைவுகொள்ளும் போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும், உங்கள் ஆடுமாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்ககு மிகுதியாகும் போதும், உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும், நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழி நடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்; இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்த வரும் அவரே. எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள். உங்கள் மூதாதை யருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக் கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 67: 1-2, 4, 6-7

பல்லவி: நானிலம் தன் பலனை ஈந்தது. கடவுள், கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!  அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும். பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர்.பல்லவி:

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடு வராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின் றீர்.பல்லவி:

நானிலம் தன் பலனை ஈந்தது. கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ் வோர் அவருக்கு அஞ்சுவராக!பல்லவி:

இரண்டாம் வாசகம்.

மக்கள் அனைவரையும் கிறிஸ்து மீட்கிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:6-10

சகோதரர் சகோதரிகளே,

நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை. நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை. விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை. நடுகிறவரா னாலும் நீர் பாய்ச்சுகிறவரானாலும் ஒன்றுதான். தாம் செய்த வேலைக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தம் கூலியைப் பெறுவர். நாங்கள் கடவுளின் உடன் உழைப்பார்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.

கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ் வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவன மாக இருக்க வேண்டும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி;. லூக்.3:4,6

அல்லேலூயா, அல்லேலூயா! கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  12:15-21

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தை  நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கை யாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டி ருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.

அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’. பின்பு, “என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன் நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு” எனச் சொல்வேன்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

ஆனால், கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாத வராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகை யோரே.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

1.செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை அளிக்கின்ற வரான தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் தாம் பணியாற்றும்; முறையைக் குறித்துக் கவனமாக இருக்கவும், வறுமையிலிருந்தும், வெறுமையிலிருந்தும்  தாம் அழைக்கப்பட்டோம், தாம் பெற்றுக்கொள்ளும் அனைத்தும் உமது இரக்கத்திலிரு ந்து தமக்குக் கிடைப்பவையே என்பதை உணர்ந்து, ஏற்றுக்கொண்டு திருஅவையை வழிநடாத்திடத் தேவை யான வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. மன்னாவால் பாலைநிலத்தில் உண்பித்தவரான தந்தையே இறைவா!

உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் உண்டு நிறைவுகொள்ளும் போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும், எம்; ஆடு மாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும் எமக்கு  மிகுதியாகும் போதும், எமக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும், உம்மை மறந்துவிடாது உமக்கு என்றும் நன்றியள்ளவர்களாக வாழத் தேவையான வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. உம் திருமுக ஒளியை எம்மீது வீசுகின்ற தந்தையே இறைவா!

பாடுபட்டு உழைக்கும் அத்தனை விவசாயிகளையும் உம் திருப்பாதம் கொண்டுவருகின்றோம். அவர்களு டைய முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு வெற்றி யளிக்கவும், பருவகாலம் முறைப்படி அமையவும், அவர்கள் உடல்நலத்தோடு வாழவும், அவர்களுடைய விளைபொருட்களுக்கு போதிய வருவாய் கிடைக்கவும் அருள் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.எமக்கு வாழ்வு அளிக்கின்ற தந்தையே இறைவா!

இயற்கையின் சீற்றத்தாலும், வன்முறைகளாலும் பாதிக் கப்பட்டு வேதனையுறும் அனைவரையும் ஆசீர்வதித்து, புதிய நம்பிக்கை வாழ்வை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Pongal 2026

 

ஆண்டவரின் திருமுழுக்கு – பெருவிழா.

ஆண்டவரின் திருமுழுக்கு – பெருவிழா.

2026.01.11

முன்னுரை.

இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்: தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள்.

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே. மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்கும் நம் இறைத் தந்தையின் திருப்பெயரில் நல் வாழ்த்துக்கள் கூறி இன்றைய திருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வருகைதந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். இன்று நம் ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவைத் கொண்டாட இறைவனின் திருப்பாதத்தில் ஒன்று கூடியிருக்கின்றோம்.

இயேசுவினுடைய உயர்ச்சிக்கும், மகிமைக்கும்  காரணமாய்; அமைந்த  அவரது தாழ்ச்சி, பொறுமை, இறைவனிடமிருந்து வந்த அழைப்பை முழுமையாக ஏற்று வாழும் நல்லுள்ளம், பணியார்வம், என்பவற்றையும்: இயேசு இறைமகன் என்பது வெளிப்படுத்தப் படுவதையும், தூய ஆவியார் அவர்மீது இறங்கி வருவதையும் இன்றைய இறைவார்த்தைகள் எடுத்தியம்பி நிற்கின்றன.

இயேசுவின் சீடர்களாகிய நாமும் அவருடைய வழியைப் பின்பற்றி தாழ்ச்சி, பொறுமை, பணியார்வம் உடையோராய் வாழ வரம்கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

இதோ! என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது:

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 42:1-4,6-7

ஆண்டவர் கூறுவதாவது:

இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கி றேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும் படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்கு வார். அவர் கூக்குரலிடமாட்டார்: தம் குரலை உயர்த்த மாட்டார்: தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவும் மாட்;டார். நெரிந்த நாணலை முறியார்: மங்கி எரியும் திரியை அணையார்: உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்: அவரது நீதி நெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.

ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்: உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்: மக்களுக்கு உடன்படிக்கை யாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்கு மாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்            திபா: 29:1-4,9-10

பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!

இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆண்டவரின் பெயருக் கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்: தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். பல்லவி:

ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது: ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது: ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது.பல்லவி:

ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமை ஆக்குகின்றது: அவரது கோவிலில் உள்ள அனைவரும் இறைவனுக்கு மாட்சி; என்று ஆர்ப்பரிக்கின்றனர். ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்: ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார்.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

கடவுள் இயேசுவின் மேல் தூய ஆவியாரின் வல்லமை யைப் பொழிந்தருளினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து  வாசகம் 10:34-38

கொர்னேலியு மற்றும் அவரது வீட்டாரை நோக்கிப் பேதுரு கூறியது,  ;கடவுள் ஆள் பார்த்துச் செயல் படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்.

இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்றும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப் பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். திருமுழுக் குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின் மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளி னார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   மாற்.9:7

அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது: தந்தையின் குரலொலி கேட்டது:  ;என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்;! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

திருமுழுக்குப் பெற்ற இயேசு, கடவுளின் ஆவி தம்மீது இறங்கி வருவதைக் கண்டார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:13-17

அக்காலத்தில்

அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், ;நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்: நீரா என்னிடம் வருகிறீர்?; என்று கூறித் தடுத்தார். இயேசு,இப்பொழுது விட்டுவிடும்.  கடவுளுக்கு ஏற்புடை யவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை; எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங் கினார்.

இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார்.  உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, ; என் அன்பார்ந்த மைந்தர் இவரே.  இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ; என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

  1. உமது பணியாளருக்கு ஆதரவு அளிக்கும் தந்தையே!

அருட்பணியை முழுமையாக நிறைவேற்ற நீர் நியமித்திருக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்குள்ளும் உமது ஆவியைத் தங்கச் செய்து : அவர்கள் உம்மைப்போல தாழ்ச்சி, பொறுமை,  பணியார்வம், ஆகியவற்யைக் கொண்டு இயங்கவும் , நன்மை செய்வதிலும், பணிபுரிவதிலும் சோர்வடை யாதிருக்கும்  சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. என்றென்றும் அரசராக வீற்றிருக்கும் தந்தையே!

உலகிலுள்ள தலைவர்கள் அனைவருக்கும் உண்மை, அமைதி, நீதி ஆகியவற்றிற்காக  உழைக்கும் நல்லுள்ள த்தை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்கும் தந்தையே!

மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்: தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். என்னும் அழைப்பிற்கேற்ப வாழும் ஆற்றலை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என்றுரைத்த தந்தையே இறைவா!

எமது இளைஞர்கள் அனைவர் மீதும் மனமிரங்கி, நீர் உம்  திருமகன் இயேசுவை அனைத்து நலன்களாலும் நிரப்பியது போல  எம் இளைஞர்களையும் ஆவியின் வல்லமையால் நிரப்பி, ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Baptism of our Lord.2026

திருக்காட்சித் திருவிழா.

திருக்காட்சித் திருவிழா.

2026.01.04

முன்னுரை.

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்:

அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! நம்மீது எழுந்தருளி நமக்கு இரக்கம் காட்டும்  தந்தையாம் இறைவனின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இன்றைய திருக்காட்சிப்; பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்: ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். என்னும் இறைவனின் குரல்: அவர் நம் ஒவ்வொருவர் மீதும் கொண்டுள்ள அக்கறையை எடுத்துக் காட்டுகின்றது. அத்தோடு இறைவன் தனி ஒரு பகுதியினருக்கு மட்டுமல்ல அவர் அனைவருக்கும் அனைத்தையும் அருளுகின்றவர் என்னும் மகிழ்வின் செய்தியும் இன்றைய இறைவார்த்தைகளில் எதிரொலிக்கின்றது.

ஆண்டவரின் திருக்காட்சி விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், நமது நற்செயல்கள் வழியாகவும், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே என்ற உண்மையை உணர்ந்து ஒற்றுமையுடன் வாழுவதன் வழியாகவும், கிறிஸ்துவின் உண்மைச் சீடர்களாயப் பிரகாசிக்க  இத் திருப்பலியில்  அருள் வரம் கேட்டுச்  செபிப்போம்.

முதல் வாசகம்

ஆண்டவரின் மாட்சி உன்மீது உதித்துள்ளது.

இறைவாக்கினர் எசாயா  நூலிலிருந்து வாசகம். 60:1-6

எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்: காரிருள் மக்களினங்களைக் கவ்வும்: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள் வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும்!

பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்: மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி  நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்: அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்: தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்: உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்: உன் இதயம் வியந்து விம்மும்: கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்: பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்: மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்: இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவரு வர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்            திபா: 72:1-2,7-8,10-13

பல்லவி:  ஆண்டவரே, எல்லா இனத்தவரும் அவருக்கு உமக்கு செய்வார்கள்!

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்: அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர் க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி:

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக: நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவு வதாக. ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்: பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.பல்லவி:

தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்: சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்: எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்: ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி:

இரண்டாம் வாசகம்.

பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது. 

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு  எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:2-3, 5-6

சகோதரர், சகோதரிகளே,

உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிரு ப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது.

அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப் படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   மத் 2:2

அல்லேலூயா, அல்லேலூயா ! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்.  அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

அரசரை வணங்க வந்திருக்கிறோம்.

மத்தேயு  எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-12

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்.  அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,  யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம்.  அவரை வணங்க வந்திருக்கிறோம்; என்றார்கள்.

இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில்,  யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை: ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்; என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்  என்றார்கள்.

பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். மேலும் அவர்களிடம். நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள்.  அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்; என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். 

இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்: நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்: தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

  1. வெளிப்பாட்டின் வழியாக அனைத்தையும் தெரியப்படுத்தும் தந்தையே இறைவா!
    எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் சமகாலத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் எதிரொலிக்கும் உமது செய்தியைத் தெளிவாகப் புரிந்து கொண்டு வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையினதும், உறவினதும் பணியாளர்களாகச் செயற்பட வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் நல்லுள்ளத்தையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அனைவர் மீதும் எழுந்தருளுகின்றவரான தந்தையே இறைவா!

விண்மீன்போல எமக்கு வழிகாட்டும் உமது வார்த்தையை நாங்கள் கவனமுடன் பின்பற்றி வாழ, ஞானத்தையும், ஆற்றலையும் எம் அனைவரும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

  1. ஆட்சியும், மாட்சியும் நிறைந்தவராய் விளங்கும் தந்தையே இறைவா!

பொது நிலையினராய் இருக்கும் நாங்கள்: எமது அழைப்பினை உணர்ந்து, எங்கள் வாழ்வாலும், பணியாலும், அர்ப்பணத்தாலும் திருச்சபையை வளர்த்து உமக்கு மகிழ்ச்சியை அளிக்கும் மக்களாக வாழும் மனப் பக்குவத்தை எமக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. ஒளியான தந்தையே இறைவா!

எமது சிறுவர்களும், இளைஞர்களும் உமது ஒளியின் வழியில் நடந்து, தங்களது சக்தியையும், ஆற்றலையும் உமது பணிக்காகப் பயன்படுத்தும்  இலட்சியப் பிடிப்பை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Epiphany2026

வருடப் பிறப்பு – இறைவனின் அன்னை தூய கன்னி மரியா பெருவிழா.

வருடப் பிறப்பு – இறைவனின் அன்னை தூய கன்னி மரியா பெருவிழா.

2026.01.01

முன்னுரை.

ஆண்டவர் போற்றி ! போற்றி ! ஏனெனில், அவர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தார். ஆண்டவர் என் வலிமை, என் கேடயம். நான் இன்னிசை பாடி அவருக்கு நன்றி சொல்வேன்.

அன்புமிக்க சகோதரரே சகோதரிகளே! மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றவரும், உலகின் நாடுகளை நல் வழியில் நடத்துகின்றவருமான நம் இறைத் தந்தையின் திரு நாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி , இப் புதிய ஆண்டின் புலர்வில், ஆண்டவருக்கு நன்றி செலுத்தவும், மகிழ்வோடு திருப்பலியில் இணைந்து செபிக்கவும்; வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம்.

புலர்ந்;திருக்கும் புதிய ஆண்டிலே: உதிர்ந்து போகாதா எம் சோகங்கள், உலர்ந்து போகாதா அநீதியின் வேர்கள், இயற்கையின் சீற்றமே உனக்கு இறப்பு இல்லையோ, எங்கிருந்து எமக்கு உதவி வரும் என்னும் அங்கலாய்ப்புகளோடு நுழைகின்ற நமக்கு: ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி  உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! என்னும் சக்திமிகு ஆசீர்வாதம் “என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்” என்னும் உறுதியான ஒரு நம்பிக்கையில் நாம் வாழ நமக்குப் பலம் தருகின்றது. அத்தோடு;, இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே! என்னும் தூய பவுலடியாரின் இறைவாக்கு இறைவனுடைய எல்லையற்ற அன்பின் இயல்பையும் நமக்குத் தெளிவு படுத்துகின்றது.

அத்தோடு இறைவனின் தாயும், நமது அன்னையுமான அன்னை மரியாவை, அமைதியின் அரசி  எனப் பெருமைப்படுத்தி அவ் அன்னையின் பரிந்துரையையும், அரவணைப்பையும், இன்றைய நாளில் வேண்டி நிற்கும் நாம்: இன்னை மரியாவைப் போன்று தூய ஆவியாரை அணைத்துவிடாதும், இறைவாக்குகளைப் புறக்கணியாதும் வாழ்வதோடு, தனி மனிதரிலும்,குடும்பங்களிலும், சமூகங்களிலும், உலகிலும் அமைதி நீடித்து நிலைபெற செபிப்போம். இப் புதிய ஆண்டு அனைவருக்கும் அமைதியும், உடல் நலமும், பாதுகாப்பும் நிறைந்த ஆண்டாக அமையவும்,  வெள்ளத்தினால், இயற்கையின் சீற்றத்தினால் பாதிப்புற்ற அனைவரும் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பவும் இத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

முதல் வாசகம்

இஸ்ராயேல் மக்கள்மீது நமது பெயரைக் கூறி நீங்கள் வேண்டும்போது நாம் அவர்களுக்கு ஆசி அளிப்போம்:

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம். 6:22-27

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி  உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! ; இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 67: 1-2, 4-5,7

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!.

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்: பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர்.பல்லவி:

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்: உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.பல்லவி:

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற் றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!பல்லவி:

இரண்டாம் வாசகம்.

கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய  திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச் சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்: அந்த ஆவி  ;அப்பா, தந்தையே ;, எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எபி. 2:13-14 

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்: அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும்; கண்டார்கள். எட்டாம் நாள் அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21

அக்காலத்தில்

இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப்  போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

  1. இயேசுவின் ஆவியை எமக்குள் அனுப்பும் தந்தையே இறைவா!

நீர் எமக்குப் பணிபுரியத் தேர்ந்து கொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் உலகின் போக்குகளைக் கைவிட்டுவிட்டு. உம்மிடமிருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டும், பெற்றுக் கொண்டும்  நிறை ஞானத்தோடு தூய ஆவியாரை அணைத்துவிடாதும், இறைவாக்ககளைப் புறக்கணிக்காதும் செயற்பட்டு மக்களை  நடாத்திச் செல்லத்  தேவையான அருள் வரங்களை அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. உம் மகன் வழியாக எம்மிடம் பேசுகின்ற தந்தையே இறைவா!

உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் நிறை ஞானத்தோடு செயற்பட்டு  தூய ஆவியாரை அணைத்துவிடாதும், இறைவாக்ககளைப் புறக்கணிக்காதும் அமைதிக்கும், பொறுமைக்கும், சசிப்புத்தன்மைக்கும் சான்றாக மிளிரும் அன்னை மரியாவைப் போன்று உமது அருள்வாக்கில் வேரூன்றியவர்களாகவும், உமது விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றுபவர்களாகவும், அமைதி, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய பண்புளை எம்மில் வளர்ப்பதற்கு வேண்டிய அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. உம் திருமுக ஒளியால் எம்மை வாழவைக்கும் தந்தையே இறைவா!

உம்முடைய அருட்கொடையாலும், இரக்கத்தாலும் நாம் பெற்றுக் கொண்ட இந்தப் புதிய ஆண்டிற்காக உமக்கு நன்றி கூறி, இவ்வாண்டு முழுவதும் எம் வாழ்வாலும், பணியாலும் உம் வல்லமை மிக்க செயல்களை எடுத்துரைக்கும்  நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. மாறாத பேரன்பு உடையவரான தந்தையே இறைவா!

இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர்மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. காலத்தின் அடையாளங்கள் வழியாக எம்மோடு பேசுகின்ற தந்தையே இறைவா!

உலக மக்கள் அனைவரும் இயற்கையில் ஏற்படும் மாற்றங்களின் செய்தியைப்; புரிந்து கொண்டு, பொறுப்புணர்வுடன் செயற்பட்டு, உலகை உமது திட்டப்படி கட்டியெழுப்பும் நல்லுள்ளத்தை அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் New Year 2025

வருட இறுதி நன்றித் திருப்பலி

வருட இறுதி நன்றித் திருப்பலி

2025.12.31

முன்னுரை.

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்: நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்: என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.

அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு நமக்கு நன்மைகள் செய்துள்ள நம் இறைத் தந்தையின்; திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி, வருடத்தின் இறுதி நாளாகிய இன்று,  இறைவனுக்கு நன்றி செலுத்தி , அவர் புகழ் பாட இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஆண்டவரின் பேரன்புச் செயல்களை எடுத்துரைத்து அவருக்குப் புகழ்சாற்றுவேன். ஏனெனில், ஆண்டவர் நமக்கு நன்மைகள் செய்துள்ளார். தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு எனக்கும், என்; குடும்பத்தாருக்கும் மாபெரும் நன்மை செய்துள்ளார் என்னும் உண்மையை உணர்ந்தவர்களாக, நன்றியுணர்வு நம்மில் பெருக, நம்மை இவ்வாண்டு முழுவதும் நன்மைகளால் நிரப்பி நம்மைக் காத்து வந்த இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். 

அப்பாவாக, அம்மாவாக, சகோதரனாக, சகோதரியாக, நண்பனாக, நண்பியாக நம்மோடு இருந்து: தீமை உன்னை அணுகாது, துன்பம் உன் உறைவிடத்தை நெருங்காது செல்லும் இடமெல்லாம் உன்னைக் காக்கும்படி என் தூதருக்கு கட்டளையிட்டிருக்கின்றேன் என்னும் வாக்குறுதியை நம்மில் நிறைவேறச் செய்த நம் இறைவனுக்கு நம் இதய மலர்களின் இதழ்கள் விரித்து மனமகிழ்வோடு இத் திருப்பலியில் நன்றி கூறிச்; செபிப்போம்.

(இந்த இறைவார்த்தையை திருப்பலி வாசக நூல் ஐஏ ல் பக்கம் 651ல், 3வது இறைவார்த்தைத் தொகுப்பில் காணலாம்)

முதல் வாசகம்

தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மை செய்துள்ளார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 63:7-9

ஆண்டவரின் பேரன்புச் செயல்களை எடுத்துரைத்து அவருக்குப் புகழ்சாற்றுவேன். ஏனெனில், ஆண்டவர் நமக்கு நன்மைகள் செய்துள்ளார். தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மை செய்துள்ளார்.

ஏனெனில், ‘மெய்யாகவே அவர்கள் என் மக்கள், வஞ்சனை செய்யாத பிள்ளைகள்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் அவர்களின் மீட்பர் ஆனார். துன்பங்கள் அனைத்திலும் அவர்களின் மீட்பர் ஆனார். தூதரோ வானதூதரோ அல்ல, அவரே நேரடியாக அவர்களை விடுவித்தார் தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை மீட்டார். பண்டைய நாள்கள் அனைத்திலும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

(இந்த இறைவார்த்தையை திருப்பலி வாசக நூல் VI ல் பக்கம் 656ல், 3வது இறைவார்த்தைத் தொகுப்பில் காணலாம்)

பதிலுரைப்பாடல்            திபா: 138:1-5

பல்லவி:  உம் பேரன்பை முன்னிட்டு உமக்கு நன்றி செலுத்துவேன்!

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்: பல்லவி: 

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்: ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்: என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி: 

ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம் மைப் போற்றுவர். ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்: ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! பல்லவி: 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   லூக்.1:49

(இந்த இறைவார்த்தையை திருப்பலி வாசக நூல் ஐஏ ல் பக்கம் 657ல், 4வது இறைவார்த்தைத் தொகுப்பில் காணலாம்)

அல்லேலூயா, அல்லேலூயா ! வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.  தூயவர் என்பதே அவரது பெயர் . அல்லேலூயா

(இந்த இறைவார்த்தையை திருப்பலி வாசக நூல் VI ல் பக்கம் 659ல், 2வது இறைவார்த்தைத் தொகுப்பில் காணலாம்)

நற்செய்தி வாசகம்

ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30

அவ்வேளையில்

இயேசு, தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.  ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.  தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்: மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்; என்று கூறினார்.

மேலும் அவர், பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். 

ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.  அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது: என் சுமை எளிதாயுள்ளது என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

1.விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரான தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் உம்மிடமிருந்து மாத்திரமே தமக்கு ஆறுதலும் அமைதியும் கிடைக்கின்றது என்னும்; உண்மையை உணர்ந்தவர்களாக வாழும் மனப்பக்குவத்தை. அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.இளைப்பாறுதல் தரும் தந்தையே இறைவா!

நாம்; மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்: என் மனத்திற்கு வலிமை அளித்தீர் என்னும் உமது வாக்குறுதியின்படி அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதலையும், ஆசீர்வாதத்தையும் நிறைவாக அளித்து புதிய வாழ்வை நம்பிக்கையோடு தொடர   வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ள தந்தையே இறைவா!

இந்த ஆண்டு முழுவதும் நீர் எமக்குக் காட்டிய பேரன்பிற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்: உமது சிறகுகளின் நிழலுக்குள் எம்மை அழைத்துச் சென்று பாதுகாத்து வழிநடாத்திய உமது இரக்கத்திற்காக உம்மைப் போற்றுகின்றோம். பிறக்கவிருக்கும் புதிய ஆண்டை அமைதியும், மகிழ்வும், பாதுகாப்பும், அருளும் நிறைந்த ஓர் ஆண்டாக எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.அனைவருக்கும் கற்றுத்தரும் வல்லவராம் கடவுளே தந்தையே! 

எமது இளைஞர்களை உமது ஞான ஒளியால் நிரப்பி, நீரே தங்களது ஆசானும், வழிகாட்டியும், மாதரிகையும் என்பதை உணர்ந்து, உமக்கு என்றும் நன்றி செலுத்தி, உமது சாட்சிகளாய்  வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Thanks Giving 2025

திருக்குடும்பத் திருவிழா. 2025

திருக்குடும்பத் திருவிழா. 2025

2025.12.28

முன்னுரை.

முழு ஞானத்தோடு திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள். எதைச் சொன்னாலும் எதைச் செய் தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! ஆசியும் நல்வாழ்வும் வழங்கும் தந்தையாம் இறைவனின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இன்றைய திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரை யும் அன்புடன் அழைக்கின்றோம். இன்று நாம் திருக் குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். நம்மை அழைத்து, அர்ச்சித்து குடும்பமாக ஒன்றிணைக் கும் நம் ஆண்டவரின் சந்நிதானத்தில்  ஒன்று கூடியுள் ளோம்.

குடும்பம்: இறைவனின் மாபெரும் கொடை, இறை யன்பின் இனிய வெளிப்பாடு, இறைவனோடு இணை ந்து பணியாற்ற நமக்குக் கொடுக்கப்படும் ஓர் அழை ப்பு. உண்மையான செப வாழ்வும், இறைவனின் வார்த் தைகளை வாழ்வாக்குவதுமே குடும்ப வாழ்வை மகிழ்ச்சியுள்ளதாக்கும். அன்பு, பொறுமை, மன்னிப்பு, தூய வாழ்வு, புரிந்துணர்வு என்பவையே குடும்ப வாழ்வுக்கு உறுதியூட்டுபவையாகும். அவைதான் குடும்பத்தின் நற்பெயரை உருவாக்கும் தன்மையுடை யவை. இவையே இன்றைய இறைவர்த்தைகள் ஊடாக நாம் பெற்றுக்கொள்ளும் இறைச் செய்தியாகும்.

எனவே நாம் நம்முடைய குடும்ப வாழ்வைச் சீர்தூக்கிப்பார்த்து, இறைவனுக்குகந்த குடும்பங்களாய் வாழவும், பிரிந்திருக்கும் குடும்பங்கள் ஒன்று சேரவும், குடும்பங்களுள் அமைதி நில வவும் அருள் வேண்டிச் செபிப்பதோடு, இன்று தங்கள் சபையின் திருவிழாவைக் கொண்டாடும் திருக்குடும்பச் சபை அருட்சகோதரி களுக்காகவும் மன்றாடுவோம். பல வருடங்களாக நமது பங்கின் ஆன்மிகப் பணியிலும், கல்விப் பணியிலும், சமூகப்பணியிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி அர்ப்பணத்தோடு பணியாற்றிய, பணியாற்றிக் கொண் டிருக்கின்ற அனைத்து அருட்சகோதரிகளுக்காகவும் இறைவனுக்கு நன்றி சொல்வோம். இறைவனுடைய வல்லமையும், தூய ஆவியானவரின் அருள்வரங்களும் அவர்களுக்கு நிறைவாகக் கிடைக்கவும், அவர்கள் அனைவரும் நிறைந்த உடல் நலத்தோடு வாழ்வும், நமது பங்கில் பணியாற்றி இறந்த அனைத்து அருட்சகோதரிக ளுக்கும் இறைவனுடைய நிறைவான நித்திய இளைப்பாறுதல் கிடைக்கவும் இத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

முதல் வாசகம்

ஆண்டவருக்கு அஞ்சுகிறவன் தாய் தந்தையரை மதிக்கிறான்.

சீராக்கின் ஞான  நூலிலிருந்து வாசகம். 3:2-7,12-14

பிள்ளைகளைவிடத் தந்தையரை ஆண்டவர் மிகுதியாக மேன்மைப்படுத்தியுள்ளார். பிள்ளைகள் மீது அன்னை யருக்குள்ள உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார். தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப் படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பா வர். தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளை களால் மகிழ் ச்சி கிட்டும். அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும். தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடு வாழ்வர். ஆண்டவருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர். தலைவர்கள் கீழ்ப் பணியாளர்கள் போல் அவர்கள் தங்கள் பெற்றோருக் குப் பணி செய்வார்கள்.

குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு. அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப் பிடி. நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. தந்தைக்குக் காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்            திபா: 128:1-5

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!பல்லவி:

உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார் உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.பல்லவி:

ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!பல்லவி:

இரண்டாம் வாசகம்.

ஆண்டவருக்கு உகந்த குடும்ப வாழ்க்கை. 

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:12- 21.

அன்பார்ந்தவர்களே,

நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவ ரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய் யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள்.  ஆண்டவர் உங்களை மன்னி த்ததுபோல நீங்களும் மன்னிக்க வேண்டும். இவை யனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவு பெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக் கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள்.

கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவு ளைப் போற்றுங்கள். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார் ந்து வாழ்வோருக்கு இதுவே தகும். திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள். பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவ ரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்ப டிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   கொலோ.3:15-16

அல்லேலூயா, அல்லேலூயா ! கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப் படுத்து வதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக் குள் நிறைவாகக் குடிகொள்வதாக!;  அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும்.

மத்தேயு  எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:13-15,19-23

ஞானிகள்  திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ‘நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந் தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.  ஏரோது இறக்கும்வரை அங் கேயே இருந்தார். இவ்வாறு, ‘எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,

‘நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்” என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப் பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார் கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்கு குடியிரு ந்தார். இவ்வாறு, ‘நசரேயன்| என அழைக்கப்படுவார்  என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டுதல்கள்.

1.வாழ்வும், வழியுமான  தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் கிறிஸ்து அருளும் அமைதி அவர்கள் உள்ளங்களை நெறிப் படுத்தி! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அவர்க ளுக்குள் நிறைவாகக் குடிகொண்டு, அவர்கள் சிறப்பான நற்செய்தியின் தூதுவர்களாய் வாழ வேண்டிய சக்தி யையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றா டுகின்றோம்.

2.அருள் வளங்களின் ஊற்றே இறைவா!

குடும்பங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாங்கள் ஒவ்வொருவரும் பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் எங்களை அணிசெய்து. ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொண்டு. ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் நீர் எங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னித்து நற்செயல்களில் ஆர்வமுள்ள உமக் குரிய தூய குடும்பங்களாக வாழ  வரமருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. நல்வாழ்வைக் காணும்படி செய்வாரான தந் தையே இறைவா!

உம்முடைய பிள்ளைகளான எங்களுடைய ஆன்மிக, கல்வி, சமூக வாழ்வின் மேம்பாட்டிற்காக உழைக்க உமது பணியாட்களாகக் கொடுத்திருக்கும் திருக்குடும்ப அருட்சகோதரிகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். எமது பங்கில் பணியாற்றும் அனைத்து திருக்குடும்ப அருட்சகோதரிகளையும் நிறைவாக ஆசிர்வதித்து: வல்லமையும், தூய ஆவியானவரின் அருள்வரங்களும் அவர்களுக்கு நிறைவாகக் கிடைக்க வும், அவர்கள் அனைவரும் நிறைந்த உடல் நலத்தோடு வாழ்வும், எமது பங்கில் பணியாற்றி இறந்த அனைத்து அருட்சகோதரிகளுக்கும் உமது நிறைவான நித்திய இளைப்பாறுதலை அளித்திடவும் வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்களித்த பெற்றோருக்காக உமக்கு நன்றி கூறுகின் றோம். நாங்கள் எங்கள் பெற்றோரை மதித்து, அவர்களைப் புண்படுத்தாது, அவர்களை மேன்மைப் படுத்தி வாழ வேண்டிய அருள் தந்து ஆசீர்வதித்து வழிப் படுத்தியருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.ஆசியும், நல்வாழ்வும் தருகின்ற தந்தையே! 

பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங் கும் மனநிலையோடும், கண்ணீரோடும் வாழும் அனை த்து குடும்பங்கள்மீதும் மன மிரங்கி அவர்கள் உண்மை யான மனமாற்றம் பெற்று, கணவன், மனைவி ஆகி யோர் ஒப்புரவாகி திருக்குடும்பமாகிய அன்னை மரியா, தூய யோசேப்பு, இயேசு ஆகியேரைப் பின்பற்றி வாழ் வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Holy Family Feast 2025

கிறிஸ்து பிறப்பு பெருவிழா. ( காலைத்திருப்பலி)

கிறிஸ்து பிறப்பு பெருவிழா. ( காலைத்திருப்பலி)

2025.12.25

முன்னுரை.

நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள்!

அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! நேர்மையாள ருக்கென ஒளியையும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியையும் விதைக்கின்ற நம் இறைத் தந்தையின் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி, நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாப் பெருமகிழ்ச்சித் திருப்பலியில் கலந்து செபிக்க வந்திரு க்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின் றோம்.

இயற்கை அளித்த அவலங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு: தம் இரக்கத்தை முன்னிட்டு கடவுள் நம்மை மீட்டார். ‘ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்’ என்றும்  ‘தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட வன்’ என்றும், இனி ‘கைவிடப்படாத நகர்’ என்றும் பெயர் பெறுவாய். என்னும் இறைவனின் வாக்குறுதிகள் பெரும் ஆறுதல் தரும் செய்தியாக இருக்கின்றன. அவர்களுக் குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது என்னும் இறைவாக்கும், நமக்குத் தரப்படுகின்ற  இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறியே  தீரும் என்ற உண்மையை அழுத்திக் கூறுகின்றன. ஆண்டவர் நம்மை ஆட்சி செய்கின்றபோதுதான் நாம் முழுமை யான விடுதலையைப் பெற்றுக் கொள்ளுகின்றோம், இறைவன் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை  என்பவைகள்தான் இன்றைய முக்கிய இறைச் செய்தி யாக இருக்கின்றன.

இச் செய்திகளை நம் மனத்தில் இருத்திக்கொண்டு, இவ்வுலகில் வாழும் நாம்; இறை நம்பிக்கையோடு கடவுளுக்கு உகந்ததோர் வாழ்க்கை வாழவும், எப்பொ ழுதும் இயேசுவை அயலவரிலும், அருட்சாதனங்களிலும் கண்டு செயல்படுகின்றவர்களாகவும்,  குறிப்பாக வெள் ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவரின் நல் வாழ்வுக் காகவும் வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் செபிப் போம்.

முதல் வாசகம்

இதோ, உன் மீட்பர் வருகின்றார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 62:11-12

உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறை சாற்றியது: “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ, உன் மீட்பு வருகின்றது, அவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது; அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது.”‘புனித மக்களினம்’ என்றும் ‘ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்’ என்றும் அவர்கள் அழைக் கப்படுவார்கள்; நீயோ, ‘தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்’ என்றும் இனி ‘கைவிடப்படாத நகர்’ என்றும் பெயர் பெறுவாய்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 97: 1,6.11-12

பல்லவி: பேரொளி இன்று நம்மேல் ஒளிரும்: ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்துள்ளார்.

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன அனைத்து மக்களினங் களும் அவரது மாட்சியைக் காண்கின்றன.பல்லவி:

நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க் கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன. நேர்மையா ளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய் மையை நினைந்து அவரைப் புகழுங்கள்.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

கடவுள் தம் இரக்கத்தை முன்னிட்டு நம்மை மீட்டார்.

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய  திருமுகத்திலிருந்து வாசகம் 3: 4-7

நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப் பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக். 2:14 

அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

இடையர்கள் மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும்; கண்டார்கள்:

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 15-20

வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறி வித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்; என்று சொல்லிக்கொண்டு, விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தை யைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.

அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித் துக் கடவுளைப்  போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்ட வாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது..

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் மீட் பளிக்கும் தந்தையே இறைவா!
    எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் என்றும் உமக்கு உகந்தோராயும், நேர்மையாளராயும், நேரிய உள்ளமுடையோராயும், வாழ்வதற்குத் தேவையான அருள் வரங்களை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.ஒளியையும் மகிழ்ச்சியையும் விதைக்கின்ற தந்தையே இறைவா!

உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், உமக்கு உகந்ததோர் வாழ்க்கை வாழவும், எப்பொழுதும் இயேசுவை அயலவரிலும், அருட்சாதனங்களிலும் கண்டு செயல்படுகின்றவர்களாகவும் வாழவேண்டிய மனப்பக்குவத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.இரக்கத்தின் அரியணையில் அமர்ந்திருக்கும்; தந்தையே இறைவா!
வன்முறையும், சுயநலமும், அநீதியும், போதைப் பொருள் பயன்பாடும் எம் மண்ணிலிருந்து அகன்று போகவும், எம் மக்கள் நிம்மதியாக வாழவும் நீர் அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. எம்மேல் பரிவிரக்கம் கொண்டுள்ள தந்தையே இறைவா!

இவ்வாண்டின் இறுதிப்பகுதியிலே இயற்கை விட்டுச் சென்ற பல கசப்பானதும் கடினமானதும், வேதனை நிறைந்ததுமான அனுபவங்களைக் சந்தித்து வெறுமை யோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவரையும் நீரே அரவணைத்து, அவர்கள் புதிய ஆற்றலோடும், நம் பிக்கையோடும் வாழ்வதற்கு  வேண்டிய மனப்பக்கு வத்தை  அவர்கள் அனைவருக்கும் அளித்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம் களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர்மீதும் மனமிரங்கி, அவர் களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Christmas Morning 2025

கிறிஸ்து பிறப்பு பெருவிழா. (இரவில் திருப்பலி)

கிறிஸ்து பிறப்பு பெருவிழா. (இரவில் திருப்பலி)

2025.12.24

முன்னுரை.

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டா ர்கள்: சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர்  ஒளி உதித்துள்ளது. ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்:

அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! வியத்தகு ஆலோசகராகவும்;, வலிமைமிகு இறைவனாகவும் என்று முள தந்தையாகவும், அமைதியின் அரசராகவும் நம் மத்தியில் பிரசன்னமாகியருக்கும் நம் இறைத் தந்தை யின்  இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி  நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாட பெருமகிழ்ச்சியுடன் வந்திருக் கும் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

இவ்வாண்டின் இறுதிப்பகுதியிலே இயற்கை நமக்கு பல கசப்பானதும் கடினமானதும், வேதனை நிறைந்தது மான அனுபவங்களைக் கொடுத்திருக்கின்றது. இவற்றி லிருந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் நமது முயற்சிகள் தொடர்கின்றன. இழந்து போன உறவுகள், தொலைந்து போன இலட்சியங்கள், மீளவும் தளிர்விடும் சுயநல வேர்கள், பாதை மாறிப்போன பயணங்கள், எதிர்பார்ப்புக்களில் ஏமாற்றம் என்னும் வேதனைக் களங்களை கண்டு மனம்வாடிப் போயிருக் கும் நமக்கு கடவுள் நம்மோடு என்னும் வாக்குறுதியோடு கூடிய இன்றைய இறைவார்த்தைகள் மீளவும் ஒரு புத்தூக்கத்தைத் தருவதாக அமைந்துள்ளன. 

நம்முடைய எண்ணங்கள் கடவுளுடைய எண்ணங்கள் அல்ல என்னும் விசுவாச உறுதியோடு, நாம் இறைப் பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப் பற்றுடனும் வாழும்போது இறைவனுடைய வாக்குறுதி கள் நிறைவேறியே தீரும் என்பது இன்றைய இறைச் செய்தியாக நமக்குத்  தரப்படுகின்றது. இதுவே நமக்கு மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகத் தரப்படுகி ன்றது. இதனாலேயே இயேசுவின் பிறப்பு நமக்கெல்லாம் சிறப்புமிக்க ஒன்றாக அமைகின்றது.

எனவே கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டா டும் நாமும் விசுவாசத்தில், இறை நம்பிக்கையில் தளர்ந்து விடாது, இறைவன்,  இயல்பு வாழ்வை மீளவும் தருவார் என்னும் நம்பிக்கையில் உறுதியாய் இருப் போம். இவ் விழாக் காலத்தில் வீணடிக்கப்படும் பணம், பொருள், நேரம் அத்தனையையும், வறியோர், வெள்ளத் தால் பாதிக்கப்பட்டோர், வாழ்வடையப் பயன்படுத்து வோம். இறைப் பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும், நேர் மையுடனும், இறைப்பற்றுடனும் வாழும் மனநிலையை உருவாக்குவோம். அதனையே இயேசுவுக்கு காணிக்கை யாகக் கொடுத்து மகிழ்வோம்.

முதல் வாசகம்

ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்:

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 9: 2-4, 6-7

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண் டார்கள்: சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப் போர்மேல் சுடர்  ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்: அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்: அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அக மகிழ்கிறார்கள்: கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பது போல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்: அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்: அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித் தெறிந்தீர்.

ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர்  தோள்மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ வியத் தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்  என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது: தாவீதின் அரி யணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலை நாட்டு வார்: இன்றுமுதல் என்றென்றும் நீதி யோடும் நேர்மை யோடும் ஆட்சிபுரிந்து அதை நிலை பெயராது உறுதிப் படுத்துவார்: படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 96: 1-3, 11-13

பல்லவி: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார், அவரே ஆண்டவராகிய மெசியா.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: உல கெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங் கள்: ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்: அவர் பெயரை வாழ்த்துங்கள்:பல்லவி:

அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்: அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.பல்லவி:

விண்ணுலகம் மகிழ்வதாக: மண்ணுலகம் களிகூர்வ தாக: கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்: அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.பல்லவி:

ஏனெனில் அவர் வருகின்றார்: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்: நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். ல்லவி:

இரண்டாம் வாசகம்.

மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப் பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய  திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11 -14

மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப் பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப் பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம் மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர் நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப் போகிறது. அவர் நம்மை எல்லா நெறி கேடுகளிலிருந் தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத் தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   லூக்.2:10-11

அல்லேலூயா, அல்லேலூயா! பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்தி ருக்கிறார்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்:

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14

அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடு மாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இரு ந்தபோது முதன் முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிரு ந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார்.  மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்.  விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.  எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடை யர்கள் தங்கி இரவெல்லாம் தங் கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவரு டைய தூதர் அவர்கள் முன் வந்து நின்றபோது ஆண்ட வரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது: மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர் களிடம், அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்: இதுவே உங்களுக்கு அடையாளம்  என்றார்.

உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, ; உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! ; என்று கடவுளைப்  புகழ்ந்தது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.

  1. மீட்கின்றவரும் தூய்மைப்படுத்துகின்றவருமான தந்தையே இறைவா!
    எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் தம்மைச் சூழ்ந்திருக்கும் தீமைகளை இனங்கண்டு  இறைப் பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டு டனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் சாட்சிய வாழ்வு வாழ அவர்களுக்குத் தேவையான அருள் வரங்களை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. வியத்தகு ஆலோசகரான தந்தையே இறைவா! உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், எம்மைச் சூழ்ந்திருக்கும் தீமைகளை இனங்கண்டு இறைப் பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களை யும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் சாட்சிய வாழ்வு வாழத் தேவை யான ஞானத்தை அளித்துக் வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  3. இரக்கத்தின் அரியணையில் அமர்ந்திருக்கும்; தந்தையே இறைவா!
    வன்முறையும், சுயநலமும், அநீதியும், போதைப் பொருள் பயன்பாடும் எம் மண்ணிலிருந்து அகன்றுபோகவும், எம் மக்கள் நிம்மதியாக வாழவும் நீர் அருள்கூர்ந்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. எம்மேல் பரிவிரக்கம் கொண்டுள்ள தந்தையே இறைவா!
    இவ்வாண்டின் இறுதிப்பகுதியிலே இயற்கை விட்டுச் சென்ற பல கசப்பானதும் கடினமானதும், வேதனை நிறைந்ததுமான அனுபவங்களைக் சந்தித்து வெறு மையோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவரையும் நீரே அரவணைத்து, அவர்கள் புதுய ஆற்றலோடும், நம்பிக்கையோடும் வாழ்வதற்கு வேண்டிய மனப் பக்குவத்தை  அவர்கள் அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.

  5. எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!
    இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் விரக்தியோடு இருப்போர், நோயுற்றிருப்போர், சிறை களிலும், வதை முகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத் தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர்மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
    சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Christmas Night 2025

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு.

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு.

2025.12.21.

முன்னுரை.

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை. நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார். ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! மாட்சிமிகு மன்னராக எழுந்தருளும் நம் இறை த்தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத் திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம் திருவருகைக்கால நான்காம் ஞாயிறு தினத் திருப்பலியைக்  கொண்டாடுகின்றோம்.

கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர். பொய்த் தெய்வங்களை நோக் கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர், ஆண்டவரிடம் ஆசி பெறுவார். தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார், அத்தோடு ஆண்டவரின் புனித இல்லத்தில் நுழையக் கூடியவரும், அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவரும் அவர்களே என்பதே இன்று நமக்கு வழங்கப்படும் இறைச் செய்தியாகும்.

இதனை நம் உள்ளத்தில் ஆழப் பதித்தவர்களாக கறை படாத  ஆன்மிக வாழ்வு வாழவும், இறை மகிமைக்காக உழைக்கவும் அருள் வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.

அத்தோடு அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்பவும், இறந்தவர்கள் நித்திய இளைப்பாற்றி அடையவும், நமது நாடு மீண்டும் நல்ல நிலையில் கட்டி எழுப்பப்படவும் இறைவனிடம் மன்றாடிச் செபிப்போம்.

முதல் வாசகம்.

இதோ கன்னிப் பெண் கருத்தாங்குவார்.

இறைவாக்கினர் எசாயா  நூலிருந்து வாசகம். 7:10-14

அந்நாள்களில்

ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது:  ‘உம் கடவு ளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும். அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்று மாறு கேட்டுக்கொள்ளும்” என்றார். அதற்கு ஆகாசு, நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன். என்றார்.

அதற்கு எசாயா: ‘தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள். மனித ரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கி றீர்களோ? ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர் இம்மானு வேல். என்று பெயரிடுவார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 24: 1-6

பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார் மாட்சிமிகு மன்னர் அவரே.

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை. நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார். ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே.பல்லவி:

ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர். பொய்த் தெய்வ ங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்.பல்லவி:

இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார். தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே. யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

 தாவீதின் மரபினரான இயேசு கிறிஸ்து கடவுளின் மகன்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தி லிருந்து வாசகம் 1:1-7

சகோதரர் சகோதரிகளே,

கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனை வருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத் தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய் திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப் பட்டவனுமாகிய பவுல் எழுதுவது:

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசுக் கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக் கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்க ளித்திருந்தார். இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற் றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர். தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலை நாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டோம். பிற இனத்தவராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி;. மத்.1:23

அல்லேலூயா, அல்லேலூயா! ‘இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல், அதாவது கடவுள் நம்முடன் இருக்கிறார் எனப் பெயரிடுவர்” அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?”;.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  1:18-24

அக்காலத்தில்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்:

அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சி க்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக் கும்  போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ‘யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களு டைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.

 ‘இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற் றெடுப்பார். அக்குழந்தைக்கு இம் மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார். என்பது பொருள்.யோசேப்பு தூக்கத்திலிரு ந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. இறைவாக்கினரின் தந்தையே இறைவா!

உமது பலிப்பீடத்தில் பணிபுரியும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்களாகவும். புகழ், உலக ஆசைகள், சுயநலம் போன்ற பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்களாகவும் வாழ்வதற்கு வேண்டிய வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. மாட்சி மிகு மன்னரே இறைவா!

நாங்கள் ஒவ்வொருவரும் கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்களாய்: பொய்த் தெய்வங்களான பகைமை, பிரிவினை, தீமை போன்றவற்றை  நோக்கித் எம் உள்ளத்தை திருப்பாதும், உமது பொறுமையைச் சோதிக்காதும் உம்மீது விசுவாசம் கொண்டு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.

  1. அன்புத் தந்தையே இறைவா!

இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு அவருக்குக் கீழ்ப்படியுமாறு அவர் பெயர் விளங்க அவர் வழியாகவே பல்வேறு பணிகள் செய்வதற்குரிய பல்வேறு வகையான அருட்கொடைகளையும், ஆற்றல்களையும் பெற்றுக்கொண்ட நாங்கள் அவற்றை தூய உள்ளத்தோடு இறைபணிக்காய்ப் பயன்படுத்தி  வாழ   எமக்கு அருள் தந்து எம்மை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. எமக்கு வாழ்வு அளிக்கின்ற தந்தையே இறைவா!

இயற்கையின் சீற்றத்தாலும், வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டு வேதனையுறும் அனைவரையும் ஆசீர்வதித்து, புதிய நம்பிக்கை வாழ்வை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் 4th Sunday of Advent 2025