
புனித யோசேவ்வாஸ்- இலங்கையின் திருத்தூதர் பெருவிழா.
2026.01.18.
முன்னுரை.
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள் தோறும் அறிவியுங்கள்.
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தம் மக்களுக்கு ஆறுதல் அளிக்கின்றவரும், மீட்பு வழங்குகின்றவரும், மாட்சியையும் புகழ்ச்சியையும், ஆற்றலையும் எழிலை யும் தம் திருமுன் கொண்டுள்ளவரான நம் இறைத் தந்தையின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இலங்கையின் திருத்தூதரான புனித யோசேவ்வாஸ் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
இன்று நாம் கொண்டாடும் இலங்கையின் திருத்தூதராக போற்றப்படும் புனித யோசேவ்வாஸ் அவர்களின் பெரு விழாவில், இவருடைய தியாக வாழ்வையும், பணியார் வத்தையும், நற்செய்தி அறிவிப்பில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டையும் நினைவுகூருகிறோம். அவர் தன்னு டைய பணி வாழ்வில், தாழ்மையையும் துன்பத்தையும் தேர்ந்தெடுத்தவர்.
17-ஆம் நூற்றாண்டில் இலங்கையில் கத்தோலிக்க இறைநம்பிக்கை சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, கத்தோலிக்கர் துன்புறுத்தப்பட்ட காலத்தில், கோவா விலிருந்து எல்லாவித ஆபத்துகளையும் பொருட் படுத்தாமல், இலங்கைக்கு வந்து, பல சவால்களின் மத்தியில் திருச்சடங்குகளை நடத்தினார். நோயாளிக ளுக்கு ஆறுதலாய் இருந்தார், கத்தோலிக்க இறை நம்பிக்கையாளர்களைத் தேடிச் சென்றார், கத்தோலிக்க இறைநம்பிக்கை சிதைந்து போகாமல் இருக்க தன் வாழ்வையே அர்ப்பணித்தார்.
புனித யோசேவ்வாஸ் நமக்கு வாழ்ந்து காட்டிய வாழ்க்கைப்பாடம்: இறை நம்பிக்கை என்பது வசதியில் அல்ல, தியாகத்தில் வெளிப்படும் என்பதே. எனவே இத் திருப்பலியில், புனித யோசேவ்வாஸ் அடிகளாரின்; தாழ்மை, துணிச்சல், தியாகம் ஆகியவற்றை நம் வாழ்விலும் நடைமுறைப்படுத்த அருள் வேண்டுவோம். அவரது பரிந்துரையால், நாமும் இன்றைய உலகில் உண்மையான கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ, இயேசு கிறிஸ்துவை நம் மீட்பராக ஏற்று விசுவசித்து அவர் காட்டும் வழியில் நடக்க வேண்டும் அருள் வரம் கேட்டுத்; தொடரும் பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம். (வாசகநூல் 3, பக்கம்582, இல.05)
மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
இறைவாக்கினர் எசாயா நூலிருந்து வாசகம். 52:7-10
நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத் தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலை யைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங் கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!
இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்ற னர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.
பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணு லகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல். திபா. 96: 1-3, 6-8,10 (வாசகநூல் 3, பக்கம்590, இல.05)
பல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்.
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;. ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள் தோறும் அறிவியுங்கள்.பல்லவி:
பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங் கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத் தகு செயல்களை அறிவியுங்கள். மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன. ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன.பல்லவி:
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவரு க்குச் சாற்றுங்கள். ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். வேற்றினத்தாரிடையே கூறுங்கள்;பல்லவி:
‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது. அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.பல்லவி:
இரண்டாம் வாசகம். (வாசகநூல் 3, பக்கம்586, இல.02)
தூய ஆவியார் கண்காணிப்பாளராக ஏற்படுத்தி யுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 20:17-18,28-32,36
சகோதரர் சகோதரிகளே,
பவுல் மிலேத்துவிலிருந்து எபேசுக்கு ஆளனுப்பி, திருச்சபையின் மூப்பர்களை வரவழைத்தார். அவர்கள் வந்ததும் அவர்களிடம் அவர் கூறியது:
தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்கு தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள். உங்களை விட்டு நான் சென்ற பின்பு கொடிய ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத் தெரியம். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும். உங்களிடமிருந்து சிலர் தோன்றி சீடர்களையும் தம்மிடம் திசைதிருப்புமளவுக்கு உண்மையைத் திரித்துக் கூறுவர்.
எனவே, விழிப்பாயிருங்கள்; மூன்று ஆண்டு காலமாக அல்லும் பகலும் இடைவிடாது கண்ணீரோடு நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தி வந்ததை நீங்கள் நினைவிற் கொள்ளுங்கள். இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்; அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ் வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்கு முரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்லது.
இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள் படியிட்டு அவர்களெல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டி னார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. மத்.28:9,10 (வாசகநூல் 3, பக்கம்603, இல.02)
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்: உலகமுடிவு வரை எந்நாழும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா.
நற்செய்தி வாசகம். (வாசகநூல் 3, பக்கம்607, இல.06)
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற் செய்தியைப் பறைசாற்றுங்கள்;.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 16:15-20
அக்காலத்தில்
இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங் கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.
இவ்வாறு அவர்களோடு பேசியபின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந் தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தி யைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர் களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்.
- மக்களுக்கு ஆறுதல் அளிக்கின்றவரும், மீட்பு வழங்குகின்றவருமான தந்தையே இறைவா!
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் உமது அருள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்களாக, புனித யோசேவ்வாஸ் போல் தாழ்மையிலும் துணிச்சலிலும், துன்பங்களிடையிலும் இறை நம்பிக்கையிலும்; உறுதியாக இருந்து நற்செய்தியை அறிவிக்கும் உண்மையான சாட்சியாக விளங்கவும் இறைமக்களை நிறை உண்மையை நோக்கி வழிநடாத்திடவும் தேவையான வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள் ளும் தந்தையே இறைவா!
உமது பிள்ளைகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும், புனித யோசேவ்வாஸ் அடிகளரின் வாழ்வைப் பினபற்றி, இறை நம்பிக்கையிலும், நற்செய்தி அறிவிப்புப் பணியிலும் உறுதியாக நிலைத்திருந்து, இயேசு கிறிஸ்துவை எம் மீட்பராக ஏற்று விசுவசித்து அவர் காட்டும் வழியில் நடக்க எமக்கு அருள்; தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- பேரன்புடையவரான தந்தையே இறைவா!
உமது பிள்ளைகளாகிய நாங்கள், இறைவாக்குகளைப் புறக்கணியாது எமது பாவ வாழ்வை உணர்ந்து, மனமாற்றத்திற்கான வழிகளைக் கண்டடைந்து, இரக்கமுடையோராகவும், ஒளியின் மக்களாகவும் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- ஒளியான தந்தையே இறைவா!
எமது சிறுவர்களும், இளைஞர்களும் உமது ஒளியின் வழியில் நடந்து, தங்களது சக்தியையும், ஆற்றலையும் உமது பணிக்காகப் பயன்படுத்தும் இலட்சியப் பிடிப்பை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Feast of St.Joseph Vaz 2026








