மாலைப் புகழ் (வேஸ்பர்) வழிபாடு இடம்பெற்றது.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பாதுகாவலரின் திருவிழா நாளை 20.01.2018 சனிக்கிழமை கொண்டாடப்படவிருக்கின்றது. இதற்கு ஆயத்தமாக கடந்த ஒன்பது நாட்களாக ஆயத்த வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இன்று 19.01.2018 வெள்ளிக்கிழமை மாலைப் புகழ் (வேஸ்பர்) வழிபாடு இடம்பெற்றது. மேலும் அறிய மாலைப் புகழ் (வேஸ்பர்) வழிபாடு இடம்பெற்றது.

சிறிய குருமடத்திற்கான முதலாவது சந்திப்பை மேற்கொண்டார்

மன்னார் மறைமாவட்டத் தின் புதிய ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் இன்று 19-01.2018 வெள்ளிக்கிழமை காலை மன்னார் மடுமாதா சிறிய குருமடத்திற்கான முதலாவது சந்திப்பை மேற்கொண்டார். புதிய ஆயர் அவர்களை மன்னார் மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்பணி.அ.ஞானப்பிரகாசம் ஆடிகளாரும், குருமட மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் வரவேற்றனர். மேலும் அறிய சிறிய குருமடத்திற்கான முதலாவது சந்திப்பை மேற்கொண்டார்

ஜனவரி:19 புனித இக்னேசியஸ் அசுவேடா, சே.ச.

ஜனவரி:19
புனித இக்னேசியஸ் அசுவேடா, சே.ச.

இவர் போர்த்துக்கல் நாட்டினர். 1548ல் கொயிம்பிரா நகரில் இயேசு சபையில் துறவு வாழ்வை தொடங்கினார். இவர் குருப்பட்டம் பெற்றபின் பிறரன்புத் தொண்டுகள் பல புரிந்து வந்தார். பிரான்சிஸ் போர்ஜியா சபைத் தலைவராக தெரிந்தெடுக்ப்பட்ட போது வாக்குரிமையுடன் உரோமை சென்று சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இவர் விரும்பியவாறு இவருக்கு அறிமுகமாகாத பிறேசில் நாட்டுக்கு அனுப்பப்பட்டார். பிறேசில் நாட்டில் பணியாற்ற மேலும் பல மறைபோதகர்கள் தேவை என்று உணர்ந்து இயேசு சபை குருக்கள் 73 பேரை திரட்டிச் சென்றார். 2 கப்பல்களில் பயணத்தை மேற்கொண்டனர். சன்டியாகோ என்ற கப்பலில் அசுவேடோவும் 39 தோழர்களும் சென்றனர். கனேரித் தீவுக்கருகில் கப்பலில் இருந்தவர்களைத் தாக்கினர். அசுவேடா தம் தோழர்களை சாவுக்கு தயாராயிருக்க கேட்டுக் கொண்டார். இவர்கள் ஒருவர் பின் ஒருவராக அடித்து நொறுக்கப்பட்டு கடலில் தள்ளப்பட்டனர். சமையல்காரர் ஒருவர் மட்டும் உயிரோடு விடப்பட்டார். அவர் தான் தம் தோழர்கள் கொல்லப்பட்டதை அறிவித்தார். 1570ம் ஆண்டு ஜீலை மாதம் 15ம் நாள் புனித அவிலா தெரேசாவுக்கு ஒரு காட்சி கிடைத்தது. (கடலில் இவ்விதம் எறியப்பட்டவர்களில் ஒருவர் தெரேசாவின் உறவினர்) இவர்கள் எல்லாரும் ஒளிமயமாக வான்வீடு பறந்து சென்றதை அக்காட்சியில் அவிலா தெரேசா பார்த்தார்.

 

ஆண்டின் பொதுக்காலம், வாரம் 2 – வெள்ளி

முதல் வாசகம்

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 24: 2-20

அந்நாள்களில் சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்ப்புறம் சென்றார். அவர் சென்றபோது வழியோரத்தில் ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்; அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்கைக்கடன் கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர். தாவீதின் ஆள்கள் அவரிடம், ” `இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன்; உன் விருப்பத்திற்கேற்ப அவனுக்குச் செய்,” என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே!” என்றனர். உடனே தாவீது தவழ்ந்து சென்று சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார். தாவீது சவுலின் தொங்கலை அறுத்தபின் அதற்காக மனம் வருந்தினார். அவர் தம் ஆள்களைப் பார்த்து, “ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர்மேல் கை வைக்கக் கூடாது” என்றார். ஆதலின் தம் ஆள்கள் சவுலைத் தாக்காதவாறு தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார். பின்பு சவுல் எழுந்து குகையை விட்டுத் தம் வழியே சென்றார். அதன் பின் தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின்தொடர்ந்து, “அரசே, என் தலைவரே!” என்று அழைத்தார். சவுல் பின்புறம் திரும்பியபோது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார். பின்பு தாவீது சவுலை நோக்கி, ” “தாவீது உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறான்” என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளை நீர் கேட்கலாமா? இதோ! குகையில் ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று உம் கண்களே கண்டன; உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்; ஆனால், “அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்; என் தலைவருக்கு எதிராக நான் கை ஓங்கக் கூடாது” என்று சொல்லி நான்தான் உம்மைக் காப்பாற்றினேன். என் தந்தையே, பாரும்! என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லை என்பதை நீர் அறிவீர்! நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. உமக்கும் எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக! என் பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்; ஆனால் உமக்கெதிராக என் கை எழாது. முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, “தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்”. ஆதலால் உம்மேல் நான் கைவைக்க மாட்டேன். இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின்தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தெள்ளுப் பூச்சியை அன்றோ? ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்னை விடுவிப்பாராக!” என்றார். தாவீது இவ்வாறு சவுலிடம் பேசி முடித்தபின் சவுல், “என் மகன் தாவீதே! இது உன் குரல்தானா?” என்று சொல்லி உரத்த குரலில் அழுதார். அவர் தாவீதிடம், “நீ என்னிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; ஆனால் நானோ உனக்குத் தீங்கு செய்தேன். ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய். ஏனெனில் ஒருவன் தன் எதிரியைக் கண்டபின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்கு ஈடாக, ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக! இதோ, நீ திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்றும் இப்பொழுது நான் அறிகிறேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 57: 1. 2-3. 5,10

பல்லவி: கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்.

கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்;
நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்;
இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே
எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.பல்லவி

உன்னதரான கடவுளை நோக்கி, எனக்காக யாவையும் செய்து முடிக்கும்
இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன்.
வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்;
என்னை நசுக்குவோரை இழிவுபடுத்துவார்.
கடவுள் தம் பேரன்பையும் வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார். பல்லவி

கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக!
பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!
ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது!
உமது வாக்குப் பிறழாமை முகில்களைத் தொடுகின்றது! பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா. : மாற்கு 3:13-19

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19

இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.
அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் – இவ்விருவருக்கும் `இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் – அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

ஜனவரி: 19 சே.ச. ஜேம்ஸ் பொன்னாடும் , தோழர்களும்

ஜனவரி: 19
சே.ச. ஜேம்ஸ் பொன்னாடும் , தோழர்களும்
(1792)

பிரான்ஸ் நாட்டில் பெரியதோர் புரட்சி தோன்றிய நாட்களில் திருச்சபைக்கு மிகப் பெரிய சோதனைகளும் நெருக்கடிகளும் எழுந்தன. நூளடைவில் திருச்சபையே அழஜக்கப்பட்டது போல் தோன்றியது. பாப்புவின் அதிகாரத்தை புரட்சியாளர்கள் உதறித்தள்ளினர். புரட்சி அரசால் தரப்பட்ட வாக்குறுதியை ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 160 குருக்கள்(இவர்களில் மூவர் ஆயர்கள்) 1792ல் அடிபட்டு அல்லது தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்களில் ஜேம்ஸ் பொன்னாடும் அவரது இரு தோழர்களும் சேசு சபையினர்.

ஆண்டின் பொதுக்காலம், வாரம் 2 – வெள்ளி

முதல் வாசகம்

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 24: 2-20

அந்நாள்களில் சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்ப்புறம் சென்றார். அவர் சென்றபோது வழியோரத்தில் ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்; அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்கைக்கடன் கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர். தாவீதின் ஆள்கள் அவரிடம், ” `இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன்; உன் விருப்பத்திற்கேற்ப அவனுக்குச் செய்,” என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே!” என்றனர். உடனே தாவீது தவழ்ந்து சென்று சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார். தாவீது சவுலின் தொங்கலை அறுத்தபின் அதற்காக மனம் வருந்தினார். அவர் தம் ஆள்களைப் பார்த்து, “ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர்மேல் கை வைக்கக் கூடாது” என்றார். ஆதலின் தம் ஆள்கள் சவுலைத் தாக்காதவாறு தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார். பின்பு சவுல் எழுந்து குகையை விட்டுத் தம் வழியே சென்றார். அதன் பின் தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின்தொடர்ந்து, “அரசே, என் தலைவரே!” என்று அழைத்தார். சவுல் பின்புறம் திரும்பியபோது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார். பின்பு தாவீது சவுலை நோக்கி, ” “தாவீது உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறான்” என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளை நீர் கேட்கலாமா? இதோ! குகையில் ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று உம் கண்களே கண்டன; உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்; ஆனால், “அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்; என் தலைவருக்கு எதிராக நான் கை ஓங்கக் கூடாது” என்று சொல்லி நான்தான் உம்மைக் காப்பாற்றினேன். என் தந்தையே, பாரும்! என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லை என்பதை நீர் அறிவீர்! நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. உமக்கும் எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக! என் பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்; ஆனால் உமக்கெதிராக என் கை எழாது. முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, “தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்”. ஆதலால் உம்மேல் நான் கைவைக்க மாட்டேன். இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின்தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தெள்ளுப் பூச்சியை அன்றோ? ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்னை விடுவிப்பாராக!” என்றார். தாவீது இவ்வாறு சவுலிடம் பேசி முடித்தபின் சவுல், “என் மகன் தாவீதே! இது உன் குரல்தானா?” என்று சொல்லி உரத்த குரலில் அழுதார். அவர் தாவீதிடம், “நீ என்னிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; ஆனால் நானோ உனக்குத் தீங்கு செய்தேன். ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய். ஏனெனில் ஒருவன் தன் எதிரியைக் கண்டபின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்கு ஈடாக, ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக! இதோ, நீ திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்றும் இப்பொழுது நான் அறிகிறேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 57: 1. 2-3. 5,10

பல்லவி: கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்.

கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்;
நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்;
இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே
எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.பல்லவி

உன்னதரான கடவுளை நோக்கி, எனக்காக யாவையும் செய்து முடிக்கும்
இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன்.
வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்;
என்னை நசுக்குவோரை இழிவுபடுத்துவார்.
கடவுள் தம் பேரன்பையும் வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார். பல்லவி

கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக!
பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!
ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது!
உமது வாக்குப் பிறழாமை முகில்களைத் தொடுகின்றது! பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா. : மாற்கு 3:13-19

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19

இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.
அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் – இவ்விருவருக்கும் `இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் – அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

ஜனவரி:19 ஜேம்ஸ் சேல்ஸ் தோழர்கள்

ஜனவரி:19

ஜேம்ஸ் சேல்ஸ் தோழர்கள்
இயேசு சபை மறைசாட்சிகள்-(1556)

ஜேம்ஸ் சேல்ஸ் பிரான்ஸ் நாட்டினர். வெர்ட்யூ என்ற இடத்தில் 16 வயதில் இயேசு சபை இளந்துறவு மடத்தில் சேர்ந்தார். 10 ஆண்டுகளுக்குப்பின் குருவானார். நுற்கருணையில் வாழும் நாதரிடம் தனிப்பெரும் பக்தி கொண்டிருந்தார். மறைபரப்பு நாடுகளுக்குச் சென்று பணியாற்ற விரும்பி விண்ணப்பித்தார். “இந்தியத்தீவுகளில் கிடைக்கக்கூடிய ஞான அறுவடை பிரான்சிலேயே கிடைக்கும்” என்றார் இயேசு சபைத்தலைவர் அக்வாவீவா.பிரான்சில் திருமறைக்கல்வி கற்றுத்தரும் பொறுப்பினை இவர் ஏற்றாhர். இக்காலத்தில் ஒருமுறை அப்பென்னாஸ் என்ற இடத்தில் திருவருகைக்காலத்தின் சிறப்பு மறையுரை ஆற்ற அனுப்பப்பெற்றார்.

வுpல்லியம் சால்ட்முஸ் சே.ச. ஜேம்சுக்கு தோழராக அனுப்பப்பட்டார். இவர் இயேசு சபையில் துணைச் சகோதரராக பணியாற்றினார். செபத்தில் முழு நம்பிக்கை கொண்டவர். “மனித உடையில் தேவ தூதர்” என்று இவரை அழைத்தனர். இவருடைய சிறப்பு மறையுரையின் மூலம் பாவிகள் பலர் மனந்திரும்பினர். கால்வின் சபையைச் சார்ந்தவர்கள் பலர் மனந்திரும்பினர். ஒருமுறை ஒரே மேடையில் கால்வின் சபைப் போதகரும் ஜேம்சும் மறையுண்மைகளைப்பற்றி பேசத் திட்டமிடப்பட்டது. கால்வின் சபைப் பாதிரியார் குறித்த நாளில் வரவில்லை. இதைப் பற்றி கத்தோலிக்கர் ஏளனம் செய்தனர். இதனால் இருசாராருக்குமிடையே மனத்தாங்கல் விரிவடைந்தது. சினமடைந்த கால்வின் சபையினர் சிலர் ஆயுதம் தாங்கிய வீரர்களுடன் ஜேம்ஸ் இருந்த இடத்திற்குச் சென்று அவரைத் தாக்கினார்கள். ஜேம்சும் வில்லியமும் சிறைப்படுத்தப்பட்டனர். கத்தோலிக்க கொள்கைகள் பற்றிக் கடும் கருத்து மோதல் நடந்தது. பசிக்கு உணவும் பருக நீரும் கொடுக்காமல் துன்புறுத்தினர். வுpரைவில் இவர்கள் கியூகனாட் என்ற படைத்லைவனிடம் கையளிக்கப்பட்டனர். கொலைத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. பொது இடம் ஒன்றிற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். ஜேம்ஸை துப்பாக்கியால் சுட்டு பின்னர் அடித்துக் கொண்டனர். இவரை காப்பாற்ற முயன்று இவரை கட்டித் தழுவினார் துணைச் சகோதரர் வில்லியம். ஆவரை 18 முறை கத்தியால் குத்திக் கொன்றனர்.