ஜனவரி:31 புனித தொன்போஸ்கோ

ஜனவரி:31
புனித தொன்போஸ்கோ
சலேசியன் சபை நிறுவுநர்-(கி.பி.1815-1888)

 

இளவயதில் இவர் கண்ட கனவு ஒன்று. இவரது வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில் 15 முறை திரும்ப வந்தது. இதன் மூலம் தேவ அழைத்தலில் மறைந்துள்ள சில பேருண்மைகளை ஆழமாக இவர் உணர்ந்தார். இக்காட்சிகள் இவரது தேவ அழைத்தலின் நாளிலிருந்து இறுதிவரை மரியன்னையின் சிறப்பான சலுகை இவருக்கு கிடைத்ததையும் வெளிக்கொணருகின்றன. திருத்தந்தை 9ம் பத்திநாதர் இவரிடம் இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதக் கேட்டுக் கொண்டார். அதில் ஜான்போஸ்கோ குறிப்பிடுகின்றார். ஒருமுறை வீட்டு முற்றத்தில் சிறுவர் பலரின் நடுவில் நான் நிற்பதாக காட்சி கண்டேன். சிலர் நன்றாக கூடிக்குலாவி கும்மாளம் போட்டு விளையாடுகின்றனர். மற்றவர்கள் பழிச்சொற்களை உதிர்கின்றனர். நான் இந்த தீயவர்களை கடிந்து அடித்துத் தவற்றை நிறுத்தச் சொன்னேன். பின்னர் வெண்ணாடை அணிந்த ஒருவர் இவர்களை கண்காணித்துக் கொள். அடித்துத் துன்புறுத்தி நீ இவர்களை கவரமுடியாது. மாறாக பொறுமை அமைதியான இயல்பு தான் வெல்லும் என்றார். உடனே அழகான ஒரு பெண் தோன்றினார். அப்போது கொடிய விலங்குக் கூட்டம் ஒன்று காணப்பட்டது. இந்த விலங்குகளுக்கு இப்போது நடக்கப் போவது போல் இந்த சிறுவர்களிடமும் நீ நடந்து கொள்ள வேண்டும் என்றார். இவ்வாறு சொன்னபோது விலங்கினங்கள் சாந்தமுள்ள ஆடுகளாக மாறின. மாறி அன்னைமரியுடனும் இயேசுவுடனும் ஆரவாரத்துடன் விளையாடின. மறுநாள் காலையில் தொன்பொஸ்கோ இந்தக் கனவை தன் தாயிடம் கூறினார். ஜியோவான்ன,p ஒருநாள் குருவானவராகப் போகிறாய் என்று கூறினார் தாய். அப்போது புனிதருக்கு வயது 9 மட்டுமே.
இவரது குருத்துவப் பணி முதலில் ட்யூரின் நகரில் தொடங்கியது. தனது 60வது வயதில் ஆயிரக்கணக்காண சிறுவர்களுக்கு ஞானப்பயிற்சிகள் அளித்த பிறகு தமது வாழ்வை திரும்பிப் பார்க்கிறார். ஒருமுறையாவது யாரையும் தண்டித்ததாக நினைவில்லை என்கிறார். சிறுவர்களுடன் பழகும் போது தோழமை, அன்பு, நட்புறவு அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுதல,; பொறுப்புணர்வு ஆகியவற்றைக் கொண்டு தான் கவர்ந்திழுக்க இயலும் என்பது இவரது அசையாத நம்பிக்கை. அடிக்கடி ஒப்பரவு அருட்சாதனத்திலும், திவ்விய நற்கருணையிலும் பங்கு பெற வைப்பது, ஆழமாக மறைக்கல்வி புகட்டுவது, கலை உணர்வை வளர்ப்பது இவைகளையே சலேசியன் சபையின் அனுகுமுறையாக இவர் வைத்துள்ளார்.
இன்று இவரது குருத்துவ துறவற சபையில் 20000க்கும் மேற்ப்பட்டோர் உள்ளனர். உலகின் எல்லாப் பகுதிகளிலும் இவர்களது துறவற சபை பரவியுள்ளது. திருச்சபையின் மிகப் பெரிய துறவற சபைகளில் ஒன்றாகப் பல அரும்பெரும் பணிகளை இன்று ஆற்றி வருகிறது. புனித மேரி மஸெல்லாவுடன் சேர்ந்து பெண்களுக்கும் சலேசிய சபையை இவர் நிறுவியுள்ளார் .பொதுநிலையினரில் இத்துறவிகளுடன் திருப்பணியில் ஒத்துழைப்பவர்களுக்கென 3ம் சபை போன்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *