ஜனவரி:20
புனித செபஸ்தியார்
மறைசாட்சியர்-(கி.பி.257-288)
இவர் பிரான்ஸ் நாட்டினர். இத்தாலி நாட்டில் கல்விப் பயிற்சி பெற்றார். இவரது நாட்களில் கிறிஸ்தவர்கள் வதைக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். இத்தகைய சூழ்நிலையிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இவர் பரிவிரக்கம் காட்டினார். ஊக்கம் அளித்தார். இதற்காகவே படையிற் சேர்ந்தார். தமது திறமையால் படையில் பதவி உயர்வு பெற்றார். இவர் காலத்தில் வேதத்திற்காக சிறைபட்டுக்கிடந்த மார்க்கஸ், மார்சலீனஸ் என்ற இருவரும் தம் பெற்றோரின் தூண்டுதலால் வேதத்தை மறுதலிக்கக் கூடும் என்ற சூழ்நிலையை புனிதர் உணர்ந்தார். உடனே இவர் இவ்விருவரையும் அனுகி விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். இதன் காரணமாக அவர்கள் தங்கள் குருதியை சிந்தும் அளவுக்கு விசுவாசத்தில் நிலைத்திருந்தார்கள். இத்தையக தொண்டுகளைப் பற்றி கேள்வியுற்ற மன்னன் இவரை ஒரு மரத்தில் கட்டி அம்புகளால் எய்து கொல்லக் கட்டளையிட்டான். இவ் வேதனைக்குப் பின் அவர் இறந்திருப்பாரென விட்டுச் சென்றனர். இறை அருளால் இவர் பிழைத்துக் கொண்டார். பிறகு அரசனை மீண்டும் அனுகினார். குpறிஸ்தவர்களை வதைக்கக் கூடாதென்றார். அப்போது மன்னன் இவரை தடியால் அடித்து கொல்லக் கட்டளையிட்டான். இவ்வாறு இவர் கிறிஸ்துவிற்கு தம் குருதியால் சான்று பகர்ந்து உயிர் நீத்தார்.