ஆட்காளிவெளிப் பங்கின் எல்லைக்குள் அமைந்துள்ள சாளம்பன் என்னும் இடத்திற்குப் போகும் வழியில் இருக்கும் சந்தியில் பல் ஆண்டுகாலமாக நிறுவப்பட்டிருந்த அன்னை மரியாவின் திருவுருவக் கூட்டினுடை கண்ணாடிகள் கடந்த திங்கட் கிழமை இரவு இனந் தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மன்னார், வவுனியா போன்ற இடங்களில் கத்தோலிக்க மக்களின் தூய சின்னங்கள் அடிக்கடி சேதமாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது
.