வேளாங்கன்னியின் திருவுருவம் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த மாத நடுப்பகுதி யில் வவுனியா வேப்பங் குளம் பங்கின் எல்லைக் குள் அமையும் உக்கிளான் குளம் என்னும் இடத்தில் நிறுவப்பட்டிருந்த, பல ஆண்டுகள் வரலாற் றைக் கொண்ட தூய அன்னை வேளாங் கன்னியின் திருவுவம் இனந் தெரியாதோரல் சேதமாக்கப்பட்டிருந்தது.

மேலும் அறிய வேளாங்கன்னியின் திருவுருவம் திறந்து வைக்கப்பட்டது.

பாராட்டி ஊக்குவிக்கும் நிகழ்வு

இவ் ஆண்டு நடைபெற்ற 5ம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையில் மன்னார் தூய சவேரியார் ஆண்கள்  கல்லூரி தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவன்  செல்வன் அன்ரோனியோ குபேரகுமார்  நயோலன் அபிஷேக்  191 மதிப்பெண்களைப் பெற்று, மன்னார் மாவட்ட மட்டத்திலும், வன்னிப் பிரிவிலும் முதல் நிலை மாணவன் என்ற நிலையையும், வடமாகாண பிரிவில் மூன்றாம் நிலை மாணவன்  என்ற நிலையையும் எட்டியுள்ளார். இம் மாணவனைப் பாராட்டி,பிரான்ஸ் நாட்டில் வாழும்  மன்னார் அபிவிருத்தி அமைப்பு  ஊக்குவிப்புப் பரிசொன்றை வழங்கியுள்ளது. இது மன்னார் பேராலயப் பங்குப் பணியாளர் அருட்பணி ச.ஜொ. பெப்பி சோசை மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய பாராட்டி ஊக்குவிக்கும் நிகழ்வு

லாத்தரன் பேராலய

இப்பேராலயம் மன்னன் கொன்ஸ்தான்தைன் என்பவ ரால் எழுப்பப்பட்டது. மன்னருக்குத் திருத்தந்தை சில்வெஸ்டர் திருமுழுக்குக் கொடுத்த அதே இடத்தில் இவ்வாலயத்தைக் கட்டி எழுப்பினார்கள். ஏறத்தாழ ஓரா யிரம் ஆண்டுகளாகத் திருத்தந்தையர்கள் இவ்வாலயத்தி ற்கு அருகில் தங்கினார்கள். அவிஞான் நகருக்குச் சென்று திருத்தந்தையர்கள் தங்கிய நாள் முதல், இவ்வாலயத் தின் தீயினால் பாதிக்கப்பட்டது. இப்போது உள்ள இதே பெயர் கொண்ட பேராலயம் கி.பி. 16-வது 17-வது நூற்றாண்டுகளில் முழுமையடைந்தது.

உலகிலுள்ள ஆலயங்களுக்கெல்லாம் தாய் ஆலயமாக இப்பேராலயம் காலங்காலமாகக் கருதப்படுகிறது. காரணம், இது திருத்தந்தைக்கே உரிய பேராலயம். கி.பி. 4-ம் நூற்றாண்டு முதல் 16-ம் நூற்றாண்டு வரை இப் பேராலயம் 5 பொதுச்சங்கங்கள் நடைபெற்றுள்ளன. 20 ஆயர் பேரவைகளும் நடைபெற்றுள்ளன. 12-ஆம் நூற்றாண்டு முதல் “மீட்பரின் பேராலயம்” என்று அழைக்கப்பட்ட பெயர் மாறி இப்போது புனித திருமுழுக்கு யோவான் பெயராலும், இப்பேராலயம் அழைக்கப்படுகிறது.

இங்குதான் புனித பேதுரு, பவுல் இவர்களின் தலைகள் வெள்ளிப் பாதத்ரங்களில் புனிதமாக வைக்கப்பட்டுள் ளன. மேலும் புடென்ஸ் என்பவரின் இல்லத்தில் புனித பேதுரு திருப்பலி நிகழ்த்தப் பயன்படுத்திய இரா உணவின் போது, ஆண்டவர் பயன்படுத்திய புனித மேசையும் இங்குதான் வைக்கப்பட்டுள்ளது.

பொதுக்காலம் 31ம் வாரம் – வியாழக் கிழமை-இலாத்திரான் பேராலய அர்ச்சிப்பு

முதல் வாசகம்.

நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம். 47:1-2,8-9,12

அந்நாள்களில்

ஒரு மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது.

அவர் என்னிடம் உரைத்தது: “இத் தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண் ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்.  திபா.46.1-8

ல்லவி : ஆற்றின் கால்வாய்கள் உன்னதரான ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.

கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. பல்லவி

ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. பல்லவி

படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! பல்லவி

இரண்டாம் வாசகம்.

நீங்கள் கடவுளுடைய கோவில்

திருத்தூதர்  பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திருந்து வாசகம். 3:9-11,16-17

சகோதரர் சகோதரிகளே!

நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம். கடவுள் எனக்கு அளித்த அருளின் படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித் தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.

நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக் குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித் தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்தொலி. 2குறி:7.16

அல்லேலூயா, அல்லேலூயா. எனது பெயர் என்றென்றும் போற்றப்படுமாறு இக்கோவிலை நான் தெரிந்தெடுத்துத் திருநிலைப்படுத்தியுள்ளேன்; என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 2:13-22

அக்காலத்தில்
யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்த தால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரை யும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்.

அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடு களையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்ல றைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார். அவர் புறா விற்பவர்களிடம்,

“இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்”என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள்.  “உம் இல்லத் தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்” என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.

யூதர்கள் அவரைப் பார்த்து, “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையா ளம் என்ன?” என்று கேட்டார்கள்.இயேசு மறுமொழியாக அவர்களிடம்,  “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்”

என்றார். அப்போது யூதர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?” என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.

அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவரு டைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி