மறைமாவட்டத்திற்கான இணையதளம்

இன்று 06ந் திகதி (06.11.2017) திங்கட் கிழமை எமது மறைமாவட்டத் திற்கான இணைய தளமான  www.arudkadal.com மன்னார் மறைமா வட்ட அப்போஸ்த லிக்க பரிபாலகர் பேரருட்திரு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் சம்பிரதாயபூர்வமாக இயக்கிவைக்கப்பட்டது. மேலும் அறிய மறைமாவட்டத்திற்கான இணையதளம்

இரு புதிய தபால் தலைகள் வெளியீடு

புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்கள் பிறந்ததன் 450ம் ஆண்டையும், மார்ட்டின் லூத்தர் அவர்களால் உருவாக்கப்பட்ட சீர்திருத்தத்தின் 500ம் ஆண்டு நிறைவையும் சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 23ம் திகதி, வத்திக்கான் தபால் துறை, இரு புதிய தபால் வில்லைகளை வெளியிடும் என்று, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளதது.

மேலும் அறிய இரு புதிய தபால் தலைகள் வெளியீடு

எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது

இறந்தோர் உயிர்ப்பில் நாம் அறிக்கையிடும் விசுவாசம், நம்மை நம்பிக்கையுள்ள மனிதர்களாக ஆக்குகின்றது என்று, திருஅவையில் இறந்த கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களின் நினைவுத் திருப்பலியை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், இவ்வெள்ளி முற்பகல் 11.30 மணிக்கு நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  கூறினார்.

மேலும் அறிய எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது

இளைஞர் ஒன்றிய மாதாந்த ஒன்றுகூடல்

இளைஞர் ஒன்றிய மாதாந்த ஒன்றுகூடல்

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியப் பங்குப் பிரதிநிதிகளுக்கான மாதாந்த ஒன்றுகூடல் 04.11.2017 சனிக்கிழமை மாலை தொடக்கம் 05.11.2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை அடம்பன் பங்கின் நெடுங்கண்டல் தூய அந்தோனியார் ஆலயத்தில் இடம் பெற்றது. ஆன்மிகத்திலும், சமூக வளர்ச்சியிலுமான திருவழிபாடும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

மேலும் அறிய இளைஞர் ஒன்றிய மாதாந்த ஒன்றுகூடல்

மன்னார் ஆயர் இல்லத்தில் திருகோணமலை மறைமாவட்ட சிறிய குருமடமாணவர்கள்

மன்னார் ஆயர் இல்லத்தில் திருகோணமலை மறைமாவட்ட சிறிய குருமடமாணவர்கள்

இம்மாதம் 03ந் திகதி (03.11.2017) வெள்ளிக்கிழமை திருகோணமலை மறைமாவட்ட சிறிய குருமட இயக்குனரும், மாணவர்களும், உதவியாளர்களும்

மேலும் அறிய மன்னார் ஆயர் இல்லத்தில் திருகோணமலை மறைமாவட்ட சிறிய குருமடமாணவர்கள்

அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாருக்கு தேசிய மட்ட சாதனையாளர் விருது!

அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாருக்கு தேசிய மட்ட சாதனையாளர் விருது!

மன்னார் மறை மாவ ட்டத்தில் ‘மன்னா’ என்ற மாதாந்த கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரிய ராகக் கடந்த 15 வருடங் களுக்கு மேலாகப் பணி யாற்றிவரும் அருட் திரு.  தமிழ் நேசன் அடிகளாருக்கு ஊடகத் துறைக்கான தேசிய மட்ட சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாருக்கு தேசிய மட்ட சாதனையாளர் விருது!

புனித யோசவ்வாஸ் ஆண்டை முன்னிட்டு

புனித யோசவ்வாஸ் ஆண்டை முன்னிட்டு கலையருவி முன்னெ டுக்கும் நிகழ்வுகள்.

இலங்கையில் இவ்வாண்டு கத் தோலிக்க திருச்சபையால் புனித யோசவ்வாஸ் ஆண்டு பிரகனப்படுத்தப் பட் டுள்ளது. இவ் வாண்டுக்குரிய பல்வேறுசெயல் திட்டங்கள் மன்னார் மறைமாவட்டத் திலும் சிறப்பாக முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் ‘கலையருவி’ புனித யோசப்வாஸ் ஆண்டை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு போட்டி நிகழ்வு களை நடாத்தியது.

இப்போட்டிகள் அனைத்தையும்  மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பண மையம் ‘கலையருவி’ இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் திட்டமிட்டு ஒழுங்கமைத்து நடாத்தி வருகின்றார்.

மேலும் அறிய புனித யோசவ்வாஸ் ஆண்டை முன்னிட்டு

பொதுக்காலம் 31ம் வாரம் திங்கட்கிழமை

முதல் வாசகம்

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 29-36

சகோதரர் சகோதரிகளே, கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக்கொண்டீர்கள். அது போல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர் களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக்கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது. ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படி யாமைக்கு உட்படுத்தினார். கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல் முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! “ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம் மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?” அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்  : திபா 69: 29-30. 32-33. 35-36
பல்லவி: உமது பேரன்பின் பெருக்கினால் கடவுளே, எனக்குப் பதில் தாரும்.

எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!  கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். பல்லவி

எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத் திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. பல்லவி

கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங் களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்.நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள்.ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்புகூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி  யோவா 8: 31b-32
அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மை யில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

அக்காலத்தில் தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரி களையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்க லாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்று மில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.