வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கு ஒளிவிழா

ங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்குமக்களின் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழாக் கலை பண்பாட்டு நிகழ்வுகள் நேற் (26.12.2017 ) செவ்வாய்க்கிழமை மாலை 06.30 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெற்றது. வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்குப் பணியாளர் அருட்பணி.சீ.ஜெயபாலன் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்டத்திற்கான திருத்தூதரக நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலை மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆபேல் றெவல் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அறிய வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கு ஒளிவிழா

மாசற்ற குழந்தைகள் விழா

டிசம்பர் 28

மாசற்ற குழந்தைகள் விழா

ஏரோது மன்னன் பெத்லேகமுக்கு அருகில் 2 வயதும் அதற்குட்பட்டதுமான ஆண் குழந்தைகளை வாளுக்கு இரையாக்கிய அரக்கச் செயலை இந்நாள் நினைவுகூர்கின்றது. இது மத்தேயு நற்செய்தியில் 2வது அதிகாரத்தில் கூறப்படுகிறது. இக்குழங்தைகள் மாசுமறுவற்றவர்கள். இவர்களே கிறிஸ்துவுக்காகச் செந்நீர் சிந்திய முதல் மறைசாட்சிகள். ஏன், அவருக்குப் பதிலாக இவர்கள் இறந்தார்கள். “வான் வீட்டில் அரும்புகள் மலர்ந்தன” என்கிறார் புனித அகுஸ்தின்.

“அன்னையர் அழுது புலம்புகின்றனர். குழந்தைகளைப் புதைக்கும் தந்தையர்கள் கதறுகின்றனர். ஏரோதுவே, நீயோ ஈகை இரக்கமற்றவனாகிவிட்டாய். குழந’தைகளின் பேரிரைச்சலைக் கேட்டும் கூட நீ பின்வாங்கவில்லையே! ஏன் இந்தப் பச்சிளங்குழந்தைகளைக் கொன்றாய் எனில் அச்சம் உன்னைக் கnhல்லுகிறது. வாழ்வின் ஊற்றையே அழிக்க முயன்றாய். வாழ்வின் ஊற்று குழந்தையாகத் தொழுவத்தில் கிடந்தாலும், அவர் உலகம்; கொள்ள இயலாதவர். நீ அறியாத முறையில் தமது திட்டத்தை நிறைவேற்றுகிறார். இக்குழந்தைகள் புரிந்துகொள்ளாவிடினும், கிறிஸ்துவுக்காக மாண்டனர்.

பேச இயலாத பச்சிளங்குழந்தைகளைக் குழந்தை இயேசு தமக்கேற்ற சாட்சினளாக ஆக்கிக் கொள்கிறார். விடுதலை அளிக்க வந்தவர், விடுவிக்கத் தொடங்கிவிட்டார். மீட்பர் மீட்பைத் தருகிறார். பேசத் தெரியாத குழந்தைகள், ஆனாலும் கிறிஸ்துவைப் பறைசாற்றுகின்றனர். “அரியணையில் வீற்றிருப்பவர் முன், அடிபணிந்து, என்றென்றும் வாழ்கின்ற அவரைத் தொழுகின்றனர்.” (திருவெளி 4, 10).

 

 

புனித மாசில்லாக் குழந்தைகள் – மறைச்சாட்சியர் விழா

முதல் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5 – 2: 2

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் இயேசு கிறிஸ்துவிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவர் ஆவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோம் என்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யர் ஆக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும். என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் : திபா 124: 2-3. 4-5. 7-8

பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். பல்லவி

அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்;
பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;
கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். பல்லவி

கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.
ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும் வரை அங்கேயே இரும். ஏனெனில் குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றம் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கு ஏற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். அப்பொழுது “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை” என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.