கத்தோலிக்க இளைஞர் ஒன்றித்தின் ஒளிவிழா

மன்னார் மறைமாவட்டக் கத்தோலிக்க இளைஞர் ஒன்றித்தின் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை யொட்டிய ஒளிவிழா கலை பண்பாட்ட நிகழ்வுகள் இன்று (17.12.2017) ஞாயிற்றுக்கிழமை மாந்தையில் அமைந்துள்ள மருதமடுத் திருத்தாயாரின் ஆரம்ப இடமான மாந்தை மாதா திருத்தல முன்றலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட திருத்தூதுப்பணி நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அவர்களும், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுகந்தி செபஸ்ரியன் அவர்களும் கலந்து கொண்டனர். அவர்களோடு பல அருட்பணியாளர்களும், அருட்சகோதரிகளும் பல மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அறிய கத்தோலிக்க இளைஞர் ஒன்றித்தின் ஒளிவிழா