திருவருகைக்காலம் முதல் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 15

யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி: இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.

வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து `புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம்; அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’ என்பார்கள்.

ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப் பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

(முதல் ஆண்டு வாசகத் தொகுப்பின்படி, மேற்கண்டுள்ள வாசகம் திருவருகைக் கால முதல் ஞாயிற்றுக் கிழமையில் வாசிக்கப்பட்டால், பின்வரும் வாசகத்தைப் பயன்படுத்தலாம்.)

நாட்டில் விளையும் நற்கனிகள் இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 4: 2-6

ஆண்டவர் வரும் நாளில் அவரால் துளிர்க்கும் தளிர், அழகும் மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்; நாட்டில் விளையும் நற்கனிவகைகள், இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.

அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும், எருசலேமில் தப்பி வாழ்வோரும் `புனிதர்’ எனப் பெயர் பெறுவர்; உயிர் பிழைப்பதற்கென்று எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும் `புனிதர்’ எனப்படுவர்.

என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் தூய்மைப்படுத்துவார்; நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத் தணலையொத்த அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி அதனைத் தூய்மைப்படுத்துவார்.

சீயோன் மலையின் முழுப் பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தை யும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒரு விதான மண்டபம் இருக்கும். அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்: திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி

எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!” பல்லவி

 “உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: திபா 80: 3

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.  

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11

அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக்கிடக்கிறான்” என்றார்.

இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்.

நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் `செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் `வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.

இதைக் கேட்டு, இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

புனித ஜான் டாமசின்

புனித ஜான் டாமசின்

மறைவல்லுநர் – (கி.பி – 650 – 753)

அரேபியா நாட்டில், தமாஸ்கஸ், முஸ்லிம் ஆட்சியிலிருந்தது. ஜானின் தந்தை ஆழமான விசுவாசமுள்ள கிறிஸ்தவராயினும் அரசாங்க கருவூலத்தின் பொறுப்பாளராகப் பணிபுரிந்தார்! இவருடைய திறமையால் ஏராளமான கிறிஸ்தவ அடிமைகளை மீட்க முடிந்தது. அப்படி கி.பி 699ல் மீட்க்கப்பட்டவருள் ஒருவர் சிசிலியா நகரைச் சார்ந்த துறவி ஆவார். கோஸ்மாஸ் என்ற பெயருடைய இவர் மிகவும் அறிவுக்கூர்மை வாய்ந்தவர். இவர்தான் இளைய ஜானுக்கு ஆசிரியராக அமைந்தார். மறையியல் உட்பட எல்லாவிதமான கல்வியையும் திறம்படக் கற்றுத் தந்தார். கோஸ்மாஸ் என்பவர் கணிதத்தில் பித்தாகோரசு;கு நிகராகவும் புநழஅநவசல ல் யூக்ளிட் என்ற தத்துவ ஞானிக்கு நிகராகவும் திகழ்ந்தாராம். இப்படிப்புக்களின் இறுதியில் காலிஃபின் அரச அவையில் ஜான் பொறுப்புள்ள பணியாற்றி வந்தார். இச்சூழலில் கொன்ஸ்டான்டைன் மன்னன் லியோ கி.பி 726ல் சுரூப வணக்கம் கூடாது என்று கட்டளை பிறப்பித்தான். இவ்வழக்கம் காலங்காலமாகத் திருச்சபையில் இருப்பதையும், இதில் தவறு எதுவும் இல்லையென்றம் ஜான் சுட்டிக் காட்டி வன்மையாகச் சாடினார். எனவே அரசன் சினமுற்றான்.

பின்னர் அரச அவைப் பொறுப்பிலிருந்து விலகி, யெருசலேமுக்கு அருகில் இருந்த புகழ்பெற்ற புனித சேபாஸ் என்ற துறவியிடம் சென்று அவரின் சீடரானார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் குருவாகத் திருநிலைப்படுத்தப் பெற்றார். குருப்பணியாற்றும்போது, இவரது வியத்தகு போதிக்கும் திறமைம் மறைநூல்கள் எழுதிய முறையும் அனைவருடைய மதிப்பையும் ஈதர்த்தன. கிரேக்க மறைத்த தந்தையர்களின் வரிசையில் கடைசியாக இவர் இடம் பிடித்துவிட்டார்.

“ஞானத்தின் ஊற்று” என்ற இவருடைய நூல், இதற்கு முந்திய திருச்சபையின் பாரம்பரியம், மறை இயலில் மிகத் தெளிவாகக் கற்றுக் கொடுத்து வந்தவர்களிடையே நிலவிய கருத்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியமதக மதிக்கப்பட்டது. இந்நூல் “மறை இயல் தொகுப்பு” ளுரஅஅய வுhநழடழபiஉய என்று Nhற்றப்பெற்று வநடதது. திருவழிபாட்டுப் பாடலுக்கும் இவர் மிகுந்த சிறப்பிடம் கொடுத்தார். அனைத்திற்கும் மேலாக திவ்விய நற்கருயையைப் பற்றித் தெளிவான கருத்துக்களைக் கொடுத்துள்ளார். “மனிதாவதாரம்” என்பதும் இவரது கவனத்தை ஆழமாக ஈர்த்துள்ளது.

மரியன்னை விண்ணகம் எடுத்துக்கொண்டது பற்றி இவர் எழுதியவையும் மிகப் புகழ் வாய்ந்தவை. “இந்த மறை பொருளுக்கு என்ன பெயரிடலாம்? சாவு என அழைப்போமா? இல்லை. ஏனெனில் மனிதாவதாரம் எடுத்த இறைவன் ஒரு கன்னியிடமிருந்து தோன்றினார். எனவே தம் தாய் இவ்வுலகைவிட்டுப்பிரியும் போது, அவரது உடலை அழியாது காத்துக்கொண்டார். மேலும் உடல்கள் அனைத்தும் உயிர்தெழும் இறுதிநாள் வரை காத்திராமல், இறைவன் அவரை உடனே விண்ணகத்திற்கு எடுத்துச் சென்றார். அஙகு அவரைப் பெருமைப்படுத்தத் திருவுள்ளம் கொண்டார். “எனவே ஓ, கன்னித்தாயே, பாவ மாசற்ற, மிகவும் தூய்மையான உமது உடல், மண்ணிற்குள் புதைக்கப்பட்ட நிலையில்லாமல், வானக அரசு உரிமைக்கு உமது மகனின் விருப்பத்தினால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றீர். உண்மையில் நீரே அரசி, நீரே இறைவனின் தாய்.