அன்னை மரியா ஆலயத்தில் காணிக்கை

அன்னை மரியா ஆலயத்தில் காணிக்கை

ஜெருசலேமில் யு}தர்களின் ஆலயம் இருந்து மறைந்த அதே இடத்திற்கருகில் புனித மரியாவின் பெயரால் எழுதப்பட்ட ஆலயம் திருநிலைப்படுத்தப்பட்டதை இத்தினத்தில் நினைவு கூர்கின்றோம். கீழைத் திருச் சபையும் மேலைத் திருச்சபையும் ஒருகிணைந்து, மரியா சிறுகுழந்தையாக இருந்தபோது, இவரைப் பெற்றோர் இறைவனிடம் ஆலயத்திற்குக் கொண்டுவந்து அர்ப் பணித்தனர் என்ற சம்பவத்தை தொன்றுதொட்டு நினை வுகூர்கின்றன. 6வது நூற்றாண்டிலேயே இந்தத் திருநாள் தொடங்கப்பட்டுள்ளது. 16வது நூற்றாண்டு முதல் திருச் சபை முழுவதிலும் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த அன்னா, யாவேயி டம் தனது விண்ணப்பத்தைத் தெரிவித்து வந்தார். அது கேட்கப்பட்டு யாவே மரியாவைக் கொடுத்துள்ளார். பெற் றோர் இறைவனிடம் தந்த இந்த வாக்குறுதியை நிறை வேற்றிய சம்பவமாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் மரியாவின் அமல உற்பவம், அடுத்து மரியா வின் பிறப்பு-அமல உற்பவத்தின்போது மரியாவின் மீது இறைவன் பொழிந்த அருள்மாரி, அவரது குழந்தைப் பருவத்திலும், பின்னர் வாழ்நாள் முழுவதும் அவரை முழுமையாக ஆட்கொண்டது என்பதனையும் புரிந்து கொள்வது தான் முக்கியம்.

இன்னும், மனிதர்களால் எழுதப்பட்ட ஆலயத்திலும் மிக மேலான ஆலயமாக மரியா காட்சியளிக்கின்றார். இவ் வாலயத்தில் இறைவன் வாழ்ந்தார். ஒவ்வொரு கணமும் புனிதப்படுத்தினார். இவ்வாறு மீட்பரின் பணியில் பங் கேற்கும் விதத்தில் உருவாக்கினார். இதே போல் அவரின் பிள்ளைகளாகிய நாமும் தேவனின் ஆலயங்கள், ஆல யங்களாகவே திகழ வேண்டும் என்ற கடமையை உணர வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *