
கிறிஸ்து பிறப்பு பெருவிழா. ( காலைத்திருப்பலி)
2025.12.25
முன்னுரை.
நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள்!
அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! நேர்மையாள ருக்கென ஒளியையும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியையும் விதைக்கின்ற நம் இறைத் தந்தையின் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி, நம் மீட்பரும் ஆண்டவருமான இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பு விழாப் பெருமகிழ்ச்சித் திருப்பலியில் கலந்து செபிக்க வந்திரு க்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின் றோம்.
இயற்கை அளித்த அவலங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு: தம் இரக்கத்தை முன்னிட்டு கடவுள் நம்மை மீட்டார். ‘ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்’ என்றும் ‘தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட வன்’ என்றும், இனி ‘கைவிடப்படாத நகர்’ என்றும் பெயர் பெறுவாய். என்னும் இறைவனின் வாக்குறுதிகள் பெரும் ஆறுதல் தரும் செய்தியாக இருக்கின்றன. அவர்களுக் குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது என்னும் இறைவாக்கும், நமக்குத் தரப்படுகின்ற இறைவனின் வாக்குறுதிகள் நிறைவேறியே தீரும் என்ற உண்மையை அழுத்திக் கூறுகின்றன. ஆண்டவர் நம்மை ஆட்சி செய்கின்றபோதுதான் நாம் முழுமை யான விடுதலையைப் பெற்றுக் கொள்ளுகின்றோம், இறைவன் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை என்பவைகள்தான் இன்றைய முக்கிய இறைச் செய்தி யாக இருக்கின்றன.
இச் செய்திகளை நம் மனத்தில் இருத்திக்கொண்டு, இவ்வுலகில் வாழும் நாம்; இறை நம்பிக்கையோடு கடவுளுக்கு உகந்ததோர் வாழ்க்கை வாழவும், எப்பொ ழுதும் இயேசுவை அயலவரிலும், அருட்சாதனங்களிலும் கண்டு செயல்படுகின்றவர்களாகவும், குறிப்பாக வெள் ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவரின் நல் வாழ்வுக் காகவும் வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் செபிப் போம்.
முதல் வாசகம்
இதோ, உன் மீட்பர் வருகின்றார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 62:11-12
உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறை சாற்றியது: “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ, உன் மீட்பு வருகின்றது, அவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது; அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது.”‘புனித மக்களினம்’ என்றும் ‘ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்’ என்றும் அவர்கள் அழைக் கப்படுவார்கள்; நீயோ, ‘தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்’ என்றும் இனி ‘கைவிடப்படாத நகர்’ என்றும் பெயர் பெறுவாய்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்பாடல் திபா. 97: 1,6.11-12
பல்லவி: பேரொளி இன்று நம்மேல் ஒளிரும்: ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்துள்ளார்.
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன அனைத்து மக்களினங் களும் அவரது மாட்சியைக் காண்கின்றன.பல்லவி:
நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க் கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன. நேர்மையா ளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய் மையை நினைந்து அவரைப் புகழுங்கள்.பல்லவி:
இரண்டாம் வாசகம்.
கடவுள் தம் இரக்கத்தை முன்னிட்டு நம்மை மீட்டார்.
திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 4-7
நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப் பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக். 2:14
அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
இடையர்கள் மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும்; கண்டார்கள்:
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 15-20
வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறி வித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்; என்று சொல்லிக்கொண்டு, விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தை யைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.
அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித் துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்ட வாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது..
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மன்றாட்டுக்கள்.
- நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் மீட் பளிக்கும் தந்தையே இறைவா!
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவரும் என்றும் உமக்கு உகந்தோராயும், நேர்மையாளராயும், நேரிய உள்ளமுடையோராயும், வாழ்வதற்குத் தேவையான அருள் வரங்களை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2.ஒளியையும் மகிழ்ச்சியையும் விதைக்கின்ற தந்தையே இறைவா!
உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள், உமக்கு உகந்ததோர் வாழ்க்கை வாழவும், எப்பொழுதும் இயேசுவை அயலவரிலும், அருட்சாதனங்களிலும் கண்டு செயல்படுகின்றவர்களாகவும் வாழவேண்டிய மனப்பக்குவத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3.இரக்கத்தின் அரியணையில் அமர்ந்திருக்கும்; தந்தையே இறைவா!
வன்முறையும், சுயநலமும், அநீதியும், போதைப் பொருள் பயன்பாடும் எம் மண்ணிலிருந்து அகன்று போகவும், எம் மக்கள் நிம்மதியாக வாழவும் நீர் அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- எம்மேல் பரிவிரக்கம் கொண்டுள்ள தந்தையே இறைவா!
இவ்வாண்டின் இறுதிப்பகுதியிலே இயற்கை விட்டுச் சென்ற பல கசப்பானதும் கடினமானதும், வேதனை நிறைந்ததுமான அனுபவங்களைக் சந்தித்து வெறுமை யோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவரையும் நீரே அரவணைத்து, அவர்கள் புதிய ஆற்றலோடும், நம் பிக்கையோடும் வாழ்வதற்கு வேண்டிய மனப்பக்கு வத்தை அவர்கள் அனைவருக்கும் அளித்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5.எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!
இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம் களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர்மீதும் மனமிரங்கி, அவர் களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Christmas Morning 2025

