மன்னார் மறைமாவட்டத்தின் பேராயலத்தின் பாதுகாவலரான தூய செபஸ்தியார் திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் இன்று (11.01.2018) வியாழக்கிழமை ஆரம்பமாகின. இன்று மதியம் 12.00 மணிக்கு பேராலய முன்றலில் பங்கு மக்களும் பணியாளர்களும் ஒன்று கூடியிருக்க திருவிழாவிற்கான தூய செபஸ்தியாரின் கொடியினை பங்குத்தந்தை அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அடிகளார் , ஆன்மிகச் சம்பிரதாய முறைப்படி இறை வேண்டுதலோடு ஆசிர்வதித்து ஏற்றி வைத்தார்.தினமும் மாலையில் திருச் செபமாலை, திருப்பலியோடு இறைவார்த்தைப் பகிர்வு என்பன இடம் பெறும். இம்மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை மாலையில் மாலைப்புகழ் ஆராதனையும், நற்கருணைப் பவனியும் நடைபெறும்.
20ம் திகதி சனிக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் திருவிழாத் திருப்பலி கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும். ஆன்றைய தினம் மாலையில் தூய செபஸ்தியாரின் திருவுருவம் வழமைபோல மன்னார் நகரப் பகுதியைச் சுற்றிப் பவனியாக எடுத்துவரப்படும்.