புனித முடியப்பர்

டிசம்பர் 26

புனித முடியப்பர்  முதல் மறைசாட்சி (கி.பி 36)

ஸ்தேபான் அருளும் ஆற்றலும் நிறைந்தவராய் மக்களிடையே மாபெரும் அருங்றிகளைச் செய்து வந்தார். அப்போது சிலர் ஸ்தேபானோடு வாதம் செய்யக் கிளம்பினர். ஆனால் அவரது ஞானத்தையும் அவர் வழியாகப் பேசிய தூய ஆவியையும் அவர்கள் எதிர்த்து நிற்க முடியவில்லை. அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்திற்கு இழுத்து வந்தனர். பொய்ச்சாட்சி கொண்டு வந்து நிறுத்தினர். சங்கத்தில் அமர்ந்திருந்தோர் அனைவரும் அவரை உற்றுநோக்கிய போது, அவரது முகம் வானதூதரின் முகத்தைப்போல் இருப்பதைக் கண்டனர். “இப்போது நீங்கள் அந்த அறத்தின் வடிவைக் காட்டிக் கொடுத்துக் கொலை செய்தீர்கள். நீங்கள் திருச்சட்டத்தைப் பெற்றிருந்தும் அதைப் பின்பற்றவில்லை” என்றார். இதைக் கேட்டவர்கள் உள்ளத்தில் சினம் பொங்க அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தனர்.

ஸ்தேபானோ தூய ஆவியினால் நிறைந்தவராய் வானத்தை உற்று நோக்கினார். அப்போது கடவுளின் மாட்சிமையையும் அவரது வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, “இதோ வானம் திறந்துள்ளதையும் மனுமகன் கடவுளின் வலப்பக்கம் நிற்பதையும் காண்கிறேன்” என்றார். அதைக் கேட்டு அவர்கள் எல்லோரும் பெருங்கூக்குரலுடன் காதை மூடிக்கொண்டனர். ஒருமிக்க அவர்மேல் பாய்ந்து அவரை நகருக்கு வெளியே தள்ளி அவரைக் கல்லால் எறியத் தொடங்கினர். சாட்சிகள் தங்கள் லோடைகளைச் சவுல் என்னம் இளைஞனிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கல் எறிகையில், ஸ்தேபானோ” ஆண்டவராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக்கொண்டார். பிறகு முழங்காலிட்டு உரத்த குரலில், “ஆண்டவரே இப்பாவத்தை அவர்கள் மேல் சுமத்தாதீர்” என்று சொல்லி உயிர் துறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *