புனித லூசியா (பிரகாசியம்மாள்)

டிசம்பர் 13

புனித லூசியா (பிரகாசியம்மாள்)

இவர் கி.பி 304ஆம் ஆண்டில் சிராக்யுஸ் நகரில் மறைசாட்சியாக மாண்டவர். தியோக்ளீசியன் காலத்தில் இஃது நிகழ்திருக்கலாம். திருச்சபை முழுவதிலும் இவரது பக்தி விரைவில் பரவியது. தொடக்கத்திருச்சபையிலிருந்தே இந்தப் பக்திக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. உரோமை திருவழிபாட்டு முறையில் அமைந்துள்ளவை என்று சொல்லப்படும் “பூசையின் மாறாத செபங்களின் தொகுப்பில்” இவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கி.பி 1204ம் ஆண்டிலிருந்து அவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு புனிதமாகக் கருதப்பட்டு வருகிறது.

தகந்த ஆதாரம் இல்லாவிடினும் சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. லூசியாவின் தாய் இரத்தப் பெருக்கினால் வேதனைப்பட்டார். இதனால் தாயும் மகளுமாகக் கட்டோனியாவுக்குத் திருப்பயணம் சென்றனர். புனித ஆகத்தாவின் ஆலயம் அங்குள்ளது. இருவரும் அங்கு உருக்கமாக மன்றாடினர். லூசியாவுக்கு அன்றிரவு கனவில் ஆகத்தா தோன்றினார். “உன் தாய்க்குத் தேவையான உடல் நலனைப் பெற்றுக் கொடுக்க உன் மன்றாட்டே போதுமானதாய் இருக்கும்போது, என்னிடம் ஏன் கேட்கிறாய்? உன் மகற்பென்னும் லீலிமலரைக் கொணடு இறைவனுக்கேற்ற இல்லிடம் தயாரித்துள்ளாய். உனது விசுவாசமே உனக்கு இப்போது உதவுவதற்குப் போதுமானது” என்றார். தாயும் நலம் அடைந்தார்.

பின்னர், தம் உடைகளைஏழைகளுக்கு தானமளிக்க லூசியா அத்தலத்திலேயே தாயிடம் விடைபெற்றார். மீண்டும் சிராக்யுசுக்குத் திரும்பினர். வாக்களித்ததுபோல் உடைமைகளைப் பகிர்ந்தளித்தார். இளைஞன் ஒருவன் ஏற்கனவே இவரை மணந்துகொள்ள முயற்சிகள் பல செய்திருந்தான். இவரது கற்பின் வாக்குறுதியைக் கேட்டுக் கலங்கினான். பழிவாங்கும் எண்ணத்துடன், “இவர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்” என்று உயர் அலுவலரிடம் குற்றம் சாட்டினான்.

“உன்னை அடித்து நொறுக்கும் உனக்குப் பேசுவதற்குக்கூட நா ஏழாது” என்றான். “இறையடியாள் நான். சரியான  சொற்களைச் சரியான  நேரத்தில் சொல்லத் த}ய ஆவியார் துணை நிற்பார். ஏனெனில் தூய வாழ்வு வாழ்வோர்  யாவரும் தூய ஆவியின் ஆலயங்கள்” என்றார்.  “விலை மகளிர் நடுவே உன்னைத் தள்ளுவார்கள்.  அப்போது தூய ஆவி பறந்துவிடுவார்” என்றான். “எனது விருப்பத்திற்கு மாறாக நடக்கும் ஒவ்வொரு செயலுக்கம் எனக்கு இரு மடங்கு வெற்றி உண்டு புரிந்து கொள்” என்றார்.

ஆவேசமடைந்தான் அலுவலன். ஆனால் அவரையோ அசைக்க இயலவில்லை. அவர்மேல் காய்ச்சிய தார் எண்ணையை ஊற்றினார். அவருக்குத் தீங்கிழைக்கவில்லை. மேலும் ஆத்திரம் அடைந்தவர்களாய் அவரது தொண்டையில் ஒரு வாளைப் பாய்ச்சினார்கள். இவ்வாறு மறைசாட்சி முடிபெற்று நம் மங்கை தூய வாயிலை அடைந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *