புனித ஜான் டாமசின்

புனித ஜான் டாமசின்

மறைவல்லுநர் – (கி.பி – 650 – 753)

அரேபியா நாட்டில், தமாஸ்கஸ், முஸ்லிம் ஆட்சியிலிருந்தது. ஜானின் தந்தை ஆழமான விசுவாசமுள்ள கிறிஸ்தவராயினும் அரசாங்க கருவூலத்தின் பொறுப்பாளராகப் பணிபுரிந்தார்! இவருடைய திறமையால் ஏராளமான கிறிஸ்தவ அடிமைகளை மீட்க முடிந்தது. அப்படி கி.பி 699ல் மீட்க்கப்பட்டவருள் ஒருவர் சிசிலியா நகரைச் சார்ந்த துறவி ஆவார். கோஸ்மாஸ் என்ற பெயருடைய இவர் மிகவும் அறிவுக்கூர்மை வாய்ந்தவர். இவர்தான் இளைய ஜானுக்கு ஆசிரியராக அமைந்தார். மறையியல் உட்பட எல்லாவிதமான கல்வியையும் திறம்படக் கற்றுத் தந்தார். கோஸ்மாஸ் என்பவர் கணிதத்தில் பித்தாகோரசு;கு நிகராகவும் புநழஅநவசல ல் யூக்ளிட் என்ற தத்துவ ஞானிக்கு நிகராகவும் திகழ்ந்தாராம். இப்படிப்புக்களின் இறுதியில் காலிஃபின் அரச அவையில் ஜான் பொறுப்புள்ள பணியாற்றி வந்தார். இச்சூழலில் கொன்ஸ்டான்டைன் மன்னன் லியோ கி.பி 726ல் சுரூப வணக்கம் கூடாது என்று கட்டளை பிறப்பித்தான். இவ்வழக்கம் காலங்காலமாகத் திருச்சபையில் இருப்பதையும், இதில் தவறு எதுவும் இல்லையென்றம் ஜான் சுட்டிக் காட்டி வன்மையாகச் சாடினார். எனவே அரசன் சினமுற்றான்.

பின்னர் அரச அவைப் பொறுப்பிலிருந்து விலகி, யெருசலேமுக்கு அருகில் இருந்த புகழ்பெற்ற புனித சேபாஸ் என்ற துறவியிடம் சென்று அவரின் சீடரானார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் குருவாகத் திருநிலைப்படுத்தப் பெற்றார். குருப்பணியாற்றும்போது, இவரது வியத்தகு போதிக்கும் திறமைம் மறைநூல்கள் எழுதிய முறையும் அனைவருடைய மதிப்பையும் ஈதர்த்தன. கிரேக்க மறைத்த தந்தையர்களின் வரிசையில் கடைசியாக இவர் இடம் பிடித்துவிட்டார்.

“ஞானத்தின் ஊற்று” என்ற இவருடைய நூல், இதற்கு முந்திய திருச்சபையின் பாரம்பரியம், மறை இயலில் மிகத் தெளிவாகக் கற்றுக் கொடுத்து வந்தவர்களிடையே நிலவிய கருத்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியமதக மதிக்கப்பட்டது. இந்நூல் “மறை இயல் தொகுப்பு” ளுரஅஅய வுhநழடழபiஉய என்று Nhற்றப்பெற்று வநடதது. திருவழிபாட்டுப் பாடலுக்கும் இவர் மிகுந்த சிறப்பிடம் கொடுத்தார். அனைத்திற்கும் மேலாக திவ்விய நற்கருயையைப் பற்றித் தெளிவான கருத்துக்களைக் கொடுத்துள்ளார். “மனிதாவதாரம்” என்பதும் இவரது கவனத்தை ஆழமாக ஈர்த்துள்ளது.

மரியன்னை விண்ணகம் எடுத்துக்கொண்டது பற்றி இவர் எழுதியவையும் மிகப் புகழ் வாய்ந்தவை. “இந்த மறை பொருளுக்கு என்ன பெயரிடலாம்? சாவு என அழைப்போமா? இல்லை. ஏனெனில் மனிதாவதாரம் எடுத்த இறைவன் ஒரு கன்னியிடமிருந்து தோன்றினார். எனவே தம் தாய் இவ்வுலகைவிட்டுப்பிரியும் போது, அவரது உடலை அழியாது காத்துக்கொண்டார். மேலும் உடல்கள் அனைத்தும் உயிர்தெழும் இறுதிநாள் வரை காத்திராமல், இறைவன் அவரை உடனே விண்ணகத்திற்கு எடுத்துச் சென்றார். அஙகு அவரைப் பெருமைப்படுத்தத் திருவுள்ளம் கொண்டார். “எனவே ஓ, கன்னித்தாயே, பாவ மாசற்ற, மிகவும் தூய்மையான உமது உடல், மண்ணிற்குள் புதைக்கப்பட்ட நிலையில்லாமல், வானக அரசு உரிமைக்கு உமது மகனின் விருப்பத்தினால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றீர். உண்மையில் நீரே அரசி, நீரே இறைவனின் தாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *