இந்தியாவின் தென் இந்திய மாகாணத்தில் இயங்கும் தூய வின்சென்தியார் மறைபரப்புச் சபையின் மகாண முதல்வர் அருட்பணி.ரொமிசன் அடிகளாரும், அவருடைய ஆலோசகருள் ஒருவருமான அருட்பணி. மேர்லின் அடிகளாரும்; இன்று (04.04.2018) புதன்கிழமை காலை மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களை பணிநிலை விடயமாக மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்து உரையாடினர்.ஏற்கனவே தூய வின்சென்தியார் மறைபரப்புச் சபையின் இலங்கை நாட்டைச் சேர்ந்த இரண்டு அருட்பணியாளர்கள் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கிலும், மடுத்திருப்பதியிலும் உதவிப் பங்குத் தந்தையர்களாகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மன்னார் மறைமாவட்டத்தில் இச்சபை எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடிய சாத்தியமான பணித்திட்டங்கள் குறித்தும் கலந்தரையாடல் இடம்பெற்றது.