தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை இன்று

குருநாகல் மறைமாவட்டத்தின் கல்கமுவ பங்கிலுள்ள மகா கல்கமுவ என்னும் இடத்தில் உள்ள தூய யோசேவ்  வாஸ்சின் அற்புத சிலுவை இன்று 23.10.2018 செவ்வாய்க்கிழமை மன்னார் மறைமாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது. இன்று காலை யாழ்ப்பாணம், மறைமாவட்டத்தின் அருட்பணி எல்லைப் பகுதியான முழங்காவில் பங்கு – மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணி எல்லைப் பகுதியான தேவன்பிட்டிப் பங்கு ஆகியவற்றின் மையப் பகுதியில் மன்னார் சந்குப்பிட்டி பிரதான பாதையில் வைத்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.ஜோசவ் ஜெபரெட்ணம் அடிகளார் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களிடம் கையளித்தார். மேலும் அறிய தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை இன்று

அற்புத சிலுவை – மன்னார் மறைமாவட்ட நிகழ்ச்சித் திட்டம்.

இலங்கையின் திருத்தூதர் என அழைக்கப்படும் தூய யோசேவ் வாஸ் அடிகள் தமது கையால் நாட்டிய சிலுவைகளில் ஒன்று குருநாகல் மறைமாவட்டத்தின் கல்கமுவ பங்கிலுள்ள மகா கல்கமுவ என்னும் இடத்தில் இருக்கின்றது. இந்தச் சிலுவை வழியாக எண்ணிறைந்த புதுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால் இது தூய யோவேவ் வாஸ்சின் அற்புத சிலுவை என அழைக்கப்படுகின்றது. மேலும் அறிய அற்புத சிலுவை – மன்னார் மறைமாவட்ட நிகழ்ச்சித் திட்டம்.