மே:20 – புனித சியென்னா பெர்னர்தீன்

மே:20
புனித சியென்னா பெர்னர்தீன்
குரு – (கி.பி.1380-1444)

இவர் பிரான்சிஸ்கன் துறவற சபையை சீர்திருத்தியவர். இவருடைய நாள்களில் இவரே இத்தாலி நாட்டிலேயே புகழ் வாய்ந்த மறைபேச்சாளர். இவருக்கு 20 வயது ஆனபோது, தமக்கொத்த இளைஞர்களை சேர்த்துக் கொண்டார். இவர்களின் ஒத்துழைப்பினால் சியென்னா நகரில் ஒரு மருத்துவ மனையின் முழுப் பொறுப்பை ஏற்றார். ஆங்கே நாள்தோறும் குறைந்தது 20 பேர்களாவது பிளேக் நோய்க்க பலியானார்கள். ஆவர்களிடையே இவர் தொண்டு புரிந்தார்.

ஈராண்டுகளுக்குப் பின் பிரான்ஸ்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். குரப்பட்டம் பெற்றபின் 12 ஆண்டளவாக தனிமையாக ஜெபத்தில் நாள்களைக் கழித்தார். புpன்னர் பல இடங்களுக்கும் கால்நடையாகவே சென்று, பல மணிநேரம் மறையுரையாற்றினார். சீர்திருத்தம் பெற்ற சபைக்கு தலைவரானார். நூளடைவில் பாப்புவின் அதிகாரம் பெற்று இப்பதவியிலிருந்து விலகினார். மீண்டும் மறையுரையாற்றத் தொடங்கினார். ஊத்தமமனஸ்தாபம், திருப்பாடுகள், புண்ணியங்கள் மற்றும் அவரது சூழ்நிலையில் தாண்டவமாடிய கொடுமைகள் ஆகியவைகளைப் பற்றி மறையுரையாற்றினார். இயேசுவின் திருப்பெயர் என்று சொல்லும் புண்ணிய முயற்சியையும், தாய்மாமரி, தூய வளனார் பக்தியையும் ஏராளமாகப் பரப்பி வந்தார். ஐர்ளு என்பது இயேசு என்னும் திருப்பெயரின் சுரக்கம். இந்த 3 எழுத்துக்களையம் அழகாக ஓர் ஏட்டில் வரைந்து கொள்வார். புpன்னர் அதை மக்கள் மீது வைத்து அவர்களை மந்திரிப்பது இவரது வழக்கம்.

இவரது உருக்கமான மறையுரையைக் கேட்க சில வேளைகளில் 30,000 பேர் கூட ஆலயத்திற்கு வெளியிலும் பேச வேண்டுமென்றும், அவர்களின் குற்றங்களை பொதுநிலையினர் பொது இடங்களில் பேசித் திரியக் கூடாதென்றும் இவர் அறிவுரை தந்துள்ளார். ஐர்ளு என்ற இயேசுவின் பெயருக்கு இவர் காட்டிய சிறப்பு பக்தி விரைவில் மக்களிடம் பரவியது. இந்தச்சின்னம் ஆலயங்களிலும் வீடுகளிலும் பொது இடங்களிலும் வரையப்பட்டு வணக்கம் காட்டப்பட்டது.
மும்முறை இவரைப்பற்றி திருத்தந்தையிடம் குற்றஞ்சாட்டினர். ஆனால் இவரது புனிதம் இந்தக் குற்றச்சாட்டுக்களின் நடுவே முந்திய நிலையைவிட மிகவும் கூடியது. சீர்திருத்தம் பெற்ற இவரது சபையில் தொடக்கத்தில் 300பேர் இருந்தனர். இது ஆல் போல் தழைத்து இவரது இறுதி நாள்களில் 4000 பேராக பொலிவுடன் விளங்கியது. இறைமகன் விண்ணேற்ப்பு அடைந்த நாளன்று கி.பி.1444ல் இவரும் விண்ணகம் சென்றார்.