மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அமைந்துள்ள தூய மரிய வியான்னி தியான இல்லத்தில் நடைபெற்ற மன்னார் மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்தத் தியானம் வெள்ளிக்கிழமை 20.04.2018 மாலையில் நிறைவடைந்தது.இந்தியா தமிழ் நாடு இரட்சணிய அருட்பணியாளர் சபையைச் சேர்ந்த அருட்பணி. இக்னேசியஸ் குமார் அடிகளார் இத் தியானத்தை மிகவும் ஆன்மிகச் செழுமையோடு வழங்கினார். இறுதி நாள் நிகழ்வுகள் மன்னார் ஆயர் அவர்களின் திருப்பலியோடு நிறைவுற்றது.