ஜனவரி:26
புனித திமொத்தேயு
மறை ஆயர், வேதசாட்சி-(கி.பி.97)
திமொத்தேயுவின் தந்தை புற இனத்தவராகவும், தாய் யூதகுலத்தைச் சார்ந்தர்களுமாயிருந்தார்கள். புனித பவுல் பல இடங்களிலும் சென்று போதித்த போது திமொத்தேயுவும் அவர் தம் தாயாரும் பாட்டியும் அவரிடத்தில் திருமுழுக்குப் பெற்றார்கள். திமொத்தேயுவின் பக்தியையும் அறிவினையும் அறிந்த திருத்தூதர்கள் அவரைத் தம் துணைவராகத் தெரிந்து கொண்டனர். புனித பவுல் அவரைத் திருச்சபைக்காக வேதனைகளை அனுபவிக்கும் கிறிஸ்தவர்களிடம் அனுப்புவார். சில வேளைகளில் வேதத்தில் தத்தளிக்கும் விசுவாசிகளிடம் அனுப்புவார். பவுலின் வழியிலேயே திமொத்தேயு நடந்து கொண்டபடியால் எபேசு நகருக்கு ஆயராக நியமனம் பெற்றார். பவுல் சிறையில் வைக்கப்பட்டபொழுது திமொத்தேயுவுக்கு மெய்மறை பற்றி இரு திருமடல்கள் எழுதியனுப்பினார். திமொத்தேயு எண்ணற்ற புண்ணியங்களையும் தவச் செயல்களையும் செய்து வேதத்துக்காக தடிகளால் அடிக்கப்பட்டு வேதசாட்சி முடிபெற்றார்.