Category Archives: இன்றைய தூயவர்

இறந்த விசுவாசிகள் நினைவு நாள்

திருத்தந்தை 23ம் அருளப்பர் குறிப்பிடுவதுபோல் இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு, நிலையான மறை யுண்மைகளைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. மறைந்து விடக் கூடியன எவை என்றும், நிலை பெற்றிருக்கக் கூடியன எவை என்றும், நம்மைச் சீர்தூக்கிப் பார்க்க வைக்கிறது. கி.பி. 3-வது நூற்றாண்டின் தொடக்கத்தி லேயே, தெர்தெல்லியன் கூறியுள்ளதுபோல், ஒருவர் இறந்த நாளான்றும், அதன் பிறகு ஆண்டு நிறைவு நாளான்றும், அவருக்காகத் திருப்பலி நிறைவேற்றப் பட்டது. கி.பி. 7-வது நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டில், இறந்த விசுவாசிகளின் நினைவு தூய ஆவியாரின் திரு நாளுக்கு மறுநாள் கொண்டாடப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது. அது கி.பி 11-ஆம் நூற்றாண்டில் நவம்பர் 2-ஆம் நாளாக மாறியது. குளுனியைச் சேர்ந்த மடாதிபர் புனித ஒடில்லோவின் கருத்துப்படி குளுனி துறவற சபையின்; எல்லா மடங்களிலும், அனைத்துப் புனிதர்க ளின் விihவுக்கு அடுத்த நாளில் இறந்த விசுவாசிகள் நினைவு கூரப்படுகின்றனர்.

புனித பெர்நார்து தனது சகோதரர் சற்றயீரஸ் இறந்த சமயம் நிகழ்த்திய மறையுரையிலிருந்து: சாவு ஆதாயம். வாழ்வு ஓர் தண்டனை. புனித பவுல் அடிகளார் கூறவில் லையா. “எனக்கு வாழ்வு என்பது கிறிஸ்து, சாவு ஆதாயம்.” கிறிஸ்து எனக்கு ஆதாயம் என்பது எதைக் குறிக்கிறது? உடலின் சாவையும், அருள்வாழ்வையும் அல்லவா? எனவே அவருடன் இறந்து அவருடன் அருள் வாழ்வு வாழ அழைப்புப் பெற்றுள்ளோம். இதற்காக நாம் தினமும் மரிப்பதற்குக் கற்றுக்கொள்வது அவசியம். இதன் மூலம் கீழ்த்தரமான உடல் இச்சைகளை வெட்டியெறியமுடியும். விண்ணகத்தின் உச்சியிலிருந்து படைப்பை உற்றுநோக்குவதின் மூலம், அவற்றின் கவர்ச்சியை நாம் வெகு தொலைவில் போட்டு ஒதுக்கி விடுகின்றோம். இவ்வாறுதான் நாம் மரணஇருளிலிருந் தும் அதன் தண்டனையிலிருந்தும் தப்பித்துக்கொள்ள இயலும். உடல் இச்சையின் போராட்டத்தை நம் உள் மனதில் உணருகிறோம். இதற்கு என்ன மாற்று மருந்து? இத்தகைய சாவினின்று என்னை மீட்கவல்லவர் யார்? இறைஇயேசுவின் மூலம் இறையருளால் மீட்புப் பெறுவோம்.

எனவே சாவு கிறிஸ்துவின் அருங்கொடை. ஓர் அற்புதமான மருந்து. உடலின் சாவு என்பது மனித இயல்பு. இதன் பொருட்டு நமது உடலின் இச்சைகளி லிருந்து நம்மை அகதிகளாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது கிறிஸ்துவின் பிரிந்து அகதிகளாக மாட்டோம். உடலின் இச்சைகளுக்கு நம்பிக்கையளிக்காமல் இயற் கையின் பசிக்கு அவசியமான உணவு அளித்தாலும், அருளவாழ்வைப் பெரிதெனப் பேணி வாழவேண்டும்.

கிறிஸ்து விரும்பியிராவிடில் அவர் இறந்திருக்க வேண்டிய அவசியமில்லை, தனது கேவலமான சாவைப் புறக்கணிக்க அவர் விரும்பவில்லை. நம்மை மீட்பதற்கு தனது சாவைத் தவிர வேறு வழியைத் தேடிக்கொள்ள விரும்புவதில்லை. ஆதலின் அவரின் சாவு ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வாக அமைந்துள்ளது. அவரது சாவினால் நாம் முத்திரையிடப் பெற்றிருக்கின்றோம். அவரது சாவைத் திருப்பலி வேளையில் அறிக்கையிடு கின்றோம். அவரது சாவு நமது வெற்றிவாகை, அருட் சாதனம். ஆண்டுதோறும் உலகின் மாபெரும் விழா அவரது சாவை நினைவுகூர்தல். இவ்வாறு அவரது சாவு நமது சாவை மீட்டுவிட்டது. இதனால் நாம் சாவைக் குறித்து துயர் அடையலாமா? மனுமகன் சாவினின்று ஓடிவிடவில்லை. நாம் சாவுக்குப் பயந்து பறந்துவிட லாமா? மனுமகன் பறந்துவிடவில்லையே.

உண்மையாகவே, இறைவன் படைப்பின் தொடக்கத்தில் சாவை உண்டுபண்ணவில்லை. ஆனால் என்றைக்கு அருவருப்புக்குரிய பாவம் மனிதனில் புகுந்து அதன் பொருட்டு, கண்ணீரும், இரத்த வியர்வையும் அவனுடன் ஒட்டிக்கொண்டதோ அன்று தான் சாவை ஓர் மாற்று மருந்தாகத் தோற்றுவித்தார். இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் ஆயாசங்களுக்கு ஓர் முற்றுப்புள்ளி தேவை. இவ்வாறு தான் மன்னன் தாவீது பாடி இருக் கிறார். “ஆண்டவரிடம் நான் கேட்டவரம் ஒன்று. எனது வாழ்நாளெல்லாம் அவரது இல்லத்தில் இடம்பெற்று வாழவேண்டும். அங்கு எனது ஆண்டவரின் அழகு Nhபனத்தைக் கண்டுகளிக்க வேண்டும்.

புனிதர் அனைவரின் பெருவிழா

 

புனித பெர்னார்து தந்த மறையுரையிலிருந்து ஒரு பகுதி

“ இந்த திருநாள் என்ன பயன்? பூவுலகில் புனிதர் அனை வருக்கும் வணக்கம் காட்டுகிறோம். எதற்காக? அவர் களை இறைவன் பெருமையில் உயர்ததிவிட்டாரே! நாம் தரும் வணக்கம் அவர்களுக்குத் தேவையில்லை, நாம் எழுப்பும் புகழ்ப்பாக்களும் தேவையற்றவை. அவர்களை நினைவுகூரும்போது பயன் பயன் பெற வேண்டியவர்கள் நாம்தாம். அவர்களை நினைத்தாலே, அவர்களிடம் சென்று என்றும் நான் அவர்களுடன் உறவுகொள்ள விரும்புகின்றேன் என்று அறுதியிட்டுக் கூறுவேன். அவர்களுடன் நாம் தோழமை கொண்டாட வேண்டும்.

வாழ்வோர் நாட்டிலுள்ள புனிதர்களுடன் தோழமை கொள்ளும் தகுதி பெறவேண்டும் என்பது நமது முதல் குறிக்கோளாய் இருக்கட்டும். சகோதரர்களே, நமது அக்கறையின்மையை விட்டொழிப்போம். மறுவுலகில் உள்ளவற்றைப் பற்றியே சிந்தனையாய் இருப்பதற்காகக் கிறிஸ்துவுடன் உயிர்தெழுவோம். அவர்களின் மகிழ்ச்சி யில் நாமும் பங்கடைய வேண்டும் மேலம் புனிதர்களின் பரிந்துரையை நாம் மேலான முறையில் விரும்ப வேண்டும். ஏனெனில் நாம் நமது மன்றாட்டினால் பெற முடியாத நன்மைகளை அவர்களின் மன்றாட்டிய் பயனாகப் பெறலாம்.

“இதன் பின்னணியல் மறைசாட்சிகளையும், புனிதர்களை யும் பற்றிச்சற்றுச் சிந்திப்போம். சான்றாக, கி.பி. 153-ஆம் ஆண்டில் ஆயர் புனித போலிக்கார்ப் மறைசாட்சி முடி பெற்றார். இதை (வானகத்தில் அவரது) பிறந்த நாளாகத் தொடக்கக் கிறிஸ்தவர்கள் கொண்டாடினார். எவ்வா றெனில் இப்புனிதருடைய எலும்புகளை விலையுர்ந்த மாணிக்கக்கல்லுக்கு மேலானதாகவும், பொள்ளைவிட மிக மேலானதாகவும் மதித்து, ஒன்று சேர்த்து ஒரு புனித மான இடத்தில் வைத்தனர். இங்கேதான் ஆண்டவரின் பெயரால் ஆர்ப்பரிப்போடும், அக்களிப்போடும் அவர்கள் ஒன்றாகக் கூடிவந்து புனிதரின் பிறந்த நாளைக் கொண் டாடினர். நமக்கு முன் சென்ற இவர்களின் வானகப் பிறப்பு நாளைக் கொண்டாடும்போது நாமும் வீரர்களாகச் சாட்சி பகர நம்மைத் தயாரித்துக்கொள்கிறோம்.

கி.பி. 8-ஆவது நூற்றுண்டில், புனித உருவங்கள், சுரூபங் கள் போன்ற இவற்றை உடைத்தெறிய வேண்டும் என்று குழப்பம் எழுப்பியவர் “ஜக்கனோக்ளாஸ்டஸ்” என்று பெயர் பெற்றனர். கி.பி. 787-ஆம் ஆண்டு நிசெயாவில் கூடிய 2-வது பொதுச்சங்கத்தின் மூலம் இவ்வெழுச்சிக்கு முற்றுப்புள்ளி இடப்பட்டது. இப்புனித உருவங்களை நாம் பார்க்கும்போது, இவைகள் எந்த ஆள்களைக் குறிக்கின்ற னவோ அவர்களை நினைவுபடுத்துகின்றன. அவர்களை நினைத்துக்கொள்வதனால், அவர்களைப்பின்பற்ற முயலுகிறோம். அவர்களுக்கு வணக்கம் காட்டுகிறோம்.

“கத்தோலிக்க மரபின்படி புனிதர்களுக்குக் காட்டும் வணக்கம் வெறும் மரியாதை மட்டுமன்று அவல்லது வேளா வேளைகளில் எழுப்பும் சிறுசிறு மன்றாட்டு மட்டுமன்று. ஆழ்ந்த அடிப்படையிலமைந்த ஞான உறவாகும். அவர்கள் நமக்கு தந்துள்ள விலைமதிக்கப் பெறாத முன்மாதிகையும், பாடமும் நமக்கு மகிழ்ச்சியூட் டும், ஊக்குவிக்கும் உதவிகளாகும்” எனத் திருத்தந்தை 23-ஆம் ஜான் கூறிச்சென்றார்.

“கிறிஸ்துவைப் பற்றுதலுடன் பின்பற்றியவர்களை, அதாவது புனிதர்களை, நாம் பார்க்கும்போது விரவிருக் கும் அழியாத வான் வீட்டை நாம் தேடுவதற்கு ஒரு புதிய எழுச்சியைக் கொடுக்கிறது. இவ்வுக மேடு பள்ளங்களி டையே உறுதியானதும் பாதுகாப்புள்ளதுமான நேர் பாதை யைக் காட்டி அவரவர்களின் வாழ்க்கை நிலைமைக் கேற்ப, கிறிஸ்துவுடன் ஒருங்கிணைந்து வாழ, அதாவது புனிதத்தில் வளர்ச்சியடைய, வழிகாட்டிகளாக அமை கின்றார்கள்”.

“எனவே, இந்தத் திருச்சங்கம் வான்வீட்டில் பெருமை பெற்று இன்புறும் நம் சகோதரர்களுடன் நாம் கொண்டி ருக்க வேண்டிய தோழமையைக் குறித்து நம் முன்னோர் களின் வணக்கத்துக்குரிய விசுவாசத்தை ஆழ்ந்த பற்று தலுடன் ஏற்றுக்கொள்கிறது”.

இதன் பொருட்டு, புனிதர்களிடம் நாம்  காண்ப்பிக்க வேண்டிய பக்தி எதில் அடங்கியுள்ளது எனில், அவர் களின் நல்வாழ்வின் முன்மாதிரிகையைக் கற்றுக் கொள்வதில், அவர்களுடன் தோழமை கொள்வதிலும், அவர்கள் நமக்காகப் பரிந்துரைப்பதைப் பெற்றுக் கொள்ளப் பேராவல் கொள்வதிலும் அடங்கியுள்ளது.

இத்தகைய விசுவாச ஒளியில் நாம் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது புனிதர்களுடன் நாம் அடைய விரும்பும் தோழமை இறைவனுக்கு நாம் செலுத்தவேண்டிய ஆராத னையை எவ்வகையிலும் குறைக்காமல், மிக மேலாக வலுப்படுத்தப்படுகிறது என்பதை விசுவாசிகளுக்குக் கற்றுத்தருவார்களாக (சங்க ஏடுகள் : திருச்சபை எண் 50 – 31).

கி.பி. 4-ஆம் நூற்றூண்டில் மே 13-இல் எடெஸ்ஸா நகரில் ஆண்டு தோறும் “உலக முழுவதிலும் அறந்த மறைசாட் சிகளின் திருநாள்” கொண்டாடப்பட்டதாகக் குறிப்பிடுகின் றார் புனித எஃப்ரேம். அந்தியோக்நகரில் இதே வேளை யில் இத்திருநாள் தூய ஆவியாரின் திருநாளுக்கு அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில் “அனைத்துப் புனிதர்களின் ஞாயிறு என்ற பெயரில் கொண்டாடப்பட்டதாகப் புனித ஸான் கிறிசோஸ்தம் குறிப்பிடுகின்றார். பைசன்றைன் ரீதியில் இவ்வாறுதான் கொண்டபடப்பட்தாகப் புனித ஜான் கிறிஸ்தாஸ்தம் குறிப்பிடுகின்றார். பைசன்றைன் ரீதியில் இன்றுவரை இவ்வாறுதான் கொண்டாடப்படு கிறது.