மார்ச்:23
புனித மாங்கிரோவேகா துரிபியுஸ்
ஆயர் – (கி.பி.1538-1606)
இவர் ஸ்பெயின் நாட்டில் மயோர்கா நகரில் பிறந்தவர். அறிவுக் கூர்மை உடையவர். சலமான்கா பல்கழைக்கழகத்தில் சட்டக்கலை வல்லுனர் பட்டம் பெற்றிருந்தார். தென் அமெரிக்காவில் பெரு மாநிலத்தின் பாதுகாவலர் புனித சூசையப்பர் என்றாலும், தென் அமெரிக்கா முழுவதிலும் இப்புனிதர் நாட்டின் பாதுகாவலராகவே போற்றப்படுகிறார். புனித லீமாரோஸ் இவரின் தோழமையைப் பெற்றிருந்ததாகவும், இவரிடம் உறுதிப்பூசுதல் பெற்றதாகவும் குறிப்பு ஒன்று கூறுகிறது.