மார்ச் :17 புனித பாட்ரிக் ஆயர்லாந்து நாட்டு அப்போஸ்தலர்

மார்ச் :17
புனித பாட்ரிக்
ஆயர்லாந்து நாட்டு அப்போஸ்தலர் – (கி.பி.385-461)

புhட்ரிக் பிரிட்டன் நாட்டில் உயர்குலத்தில் தோன்றியவர். ஆவர்தம் தாய் தூர்ஸ் நகர் மார்ட்டினுக்கு நெருங்கிய உறவினர். இவருக்கு 16 வயது நடக்கும் போது இவரை அயர்லாந்து நாட்டைச் சர்ந்த முரடர் சிலர் தங்களின் தாயகத்திற்கு கடத்திக் கொண்டு போய்விட்டனர். அங்கே ஒரு தலைவனிடம் ஒப்படைக்கப்படவே ஆடு மேய்க்கும் தொழிலுக்க உட்படுத்தப்பட்டார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு தெரியாமல் ஓடி தாயகம் வந்தடைந்தார். அயல் நாட்டில் அகதியாக வாழ்ந்தாலும் ஆன்மீகக் காரியங்களில் முழுக்கவனம் செலுத்தியவர். புpரிட்டனுக்கு திரும்பினாலும் அயர்லாந்து நாட்டினரை கிறிஸ்துவின் ஒளிக்கு கொண்டு வரும் ஆவல் அவரை ஈர்ந்தது. இருப்பினும் 20 ஆண்டுகளுக்கப் பின்னரே இந்த ஆவல் நிறைவேறியது.
கி.பி 430ல் திருத்தந்தை முதலாம் செலஸ்டின் பிரிட்டனைச் சேர்ந்த ஆயர் பலேடியஸ் என்பவரை அயர்லாந்துக்கு மறைபரப்பும் பணிக்கு அனுப்பினார். இங்கே அவருக்கு பெரும் எதிர்ப்பு. எனவே தாயகம் திரும்பி இறந்துவிட்டார்.
இச்சூழலில் பாட்ரிக்குக்கு 43 வயதாகும்போது அவரது கனவில் அயர்லாந்து நாட்டினர் “இளைஞரே, எங்களிடையே வந்து மீண்டும் நடமாட உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறோம்” என்று குரல் கொடுப்பது போல் கண்டார். “இறைவனுக்கு நன்றி, இவ்வாறு இறைவன் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அயர்லாந்துக்கு என்னை அழைக்கிறார், அது போதும்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டாராம்.
பிரிட்டனைச் சேர்ந்த பலேடியஸ் ஆயர் இறந்தபிறகு பாட்ரிக் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு அயர்லாந்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு இந்த முறை ஆயராக போனபொழுது ட்ரூயிட் இனத்து முரடர்கள் அவரை ஏற்றிச் சென்ற கப்பலை விரட்டியடித்தனர். அயர்லாந்தின் வடபகுதிக்கு கப்பல் சென்றடைந்தது. அங்கு டிச்ச என்ற பெயர் கொண்ட நாட்டுத் தலைவனை மனந்திருப்பினார். அவருடன் பலரும் திருமுழுக்குப் பெற்றனர். இதன் விளைவாக சால் என்ற இடத்தில் ஆலயம் எழுப்பினார். சில ஆண்டுகளுக்கப் பின்னர் டாரா என்ற இடத்தில் மலையடிவாரத்தில் பல பகுதித் தலைவர்களும் ஒன்றாக கூடினர். அவர்கள் முன் துணிச்சலாக இறையரசைப் போதித்தார். ட்ரூயிட் குருக்கள் ஆத்திரமடைந்து பல பேய் வித்தைகளால் பாட்ரிக்கை மிரட்டினர். அவரது செபத்தின் வல்லமையினால் ட்ரூயிட் குருக்களின் வித்தை சற்றேனும் பலிக்கவில்லை. இதைக் கண்ணுற்ற அரசன் லேயோகியேர், கிறிஸ்த்தவத்தை மேலும் பரப்ப இசைவு தந்தார்.
இதனால் 7 ஆண்டுகள் கன்னாட் பகுதியில் கிறிஸ்துவின் ஒளியைக் கொடுத்து வந்தார். பின்னர், அல்ஸ்டர், மீச், வெய்ன்ஸ்னர்,லிமெரிக் ஆகிய பகுதிகளில் பல புதுமைகள் ஆற்றி வேத விசுவாசத்தைப் பரப்ப இறைவன் இவருக்கு உறுதுணையாயிருந்தார். இருப்பினும் இவர் பலமுறை சிறையில் தள்ளப்பட்டார். உயிருக்கும் ஆபத்து நேர்ந்தது. ஆனால் இறுதியில் புனிதருக்கு பல வெற்றிகள் கிடைத்தன. ஆயிரக்கணக்கானோர் திருமுழுக்குப் பெற்றனர்.
இவருக்கு மேலும் உதவி செய்ய திருத்தந்தை 3 துணை ஆயர்களை அனுப்பினார். விரைவில் புனிதரின் முயற்சியால் மண்ணின் மைந்தர்கள் பலர் குருத்துவத்தை நாடினர். புல கன்னியர் மடங்களும், துறவற மடங்களும் தோன்றின. சுhல் என்ற இடத்தில் 493ல் புனிதர் இறந்த பொழுது இயர்லாந்து முழுவதிலும் திருச்சபை மிக நேர்த்தியான அடித்தளத்துடன் பொலிவுற்றுத் துலங்கியது. இவ்வாறாக இவரது அயராத உழைப்பினால் இவரை அயர்லாந்து நாட்டின் திருத்தூதர் என்று அழைப்பது மிகப் பொருத்தமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *