மருதமடுத் திருத்தாயாரின் ஆவணி திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள்

இலங்கை வாழ் மக்களால் ஆழமாக அன்பு செய்யப்படுகின்ற மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள மருதமடுத் திருத்தாயாரின் ஆவணி மாதத்(அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா) திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் இன்று 06.08.2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின. மேலும் அறிய மருதமடுத் திருத்தாயாரின் ஆவணி திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள்

பெரியகட்டு தூய அந்தோனியார் திருவிழா

செட்டிகுளம் பங்கின் அருட்பணி எல்லைக்குள் அமைந்துள்ள பெரியகட்டு தூய அந்தோனியார் திருவிழா இன்று 05.08.2018 ஞாயிற்றுக் கிழமை காலையில் நடைபெற்றது. முதன் முதலாக இத்திருத்தலத்திற்கு அருட்பணிக்காக வருகை தந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ அவர்களை: அருட்பணியாளர்கள், துறவிகள், இறைமக்கள் பாரம்பரிய முறையில் வரவேற்றதோடு, ஆயர் அவர்கள் பாடசாலை மாணவர்களின் மேலைநாட்டு இசைக்கருவிகளின் மகிழ்வொலியோடு அழைத்து வரப்பட்டார். இதன் பின் திருப்பலி ஆரம்பமாகியது. மேலும் அறிய பெரியகட்டு தூய அந்தோனியார் திருவிழா

நிலையான அர்ப்பணத் திருப்பொழிவு.

மன்னார் மறைமாவட்டத்தின் முருங்கன் பங்கைச் சேர்ந்த திரு, திருமதி மிக்கேல் பிலிப் ,சுசீலா பேணடேற் ஆகியோரின் மகன் அருட்சகோதரர் பேணாட் ஷா பிரான்சிஸ்கன் சிறிய துறவற சபையில் இணைந்து தனது முதல் அர்ப்பணத்தை 24.05.2014 அன்று எடுத்துக் கொண்டார். அதன் பின் ஆழ் நிலைப் பயிற்சியின்பின் இன்று 02.08.2018 வியாழக்கிழமை தனது நிலையான அர்ப்;பணத்தை எடுத்துக் கொண்டார். மேலும் அறிய நிலையான அர்ப்பணத் திருப்பொழிவு.