பெரியகட்டு தூய அந்தோனியார் திருவிழா

செட்டிகுளம் பங்கின் அருட்பணி எல்லைக்குள் அமைந்துள்ள பெரியகட்டு தூய அந்தோனியார் திருவிழா இன்று 05.08.2018 ஞாயிற்றுக் கிழமை காலையில் நடைபெற்றது. முதன் முதலாக இத்திருத்தலத்திற்கு அருட்பணிக்காக வருகை தந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ அவர்களை: அருட்பணியாளர்கள், துறவிகள், இறைமக்கள் பாரம்பரிய முறையில் வரவேற்றதோடு, ஆயர் அவர்கள் பாடசாலை மாணவர்களின் மேலைநாட்டு இசைக்கருவிகளின் மகிழ்வொலியோடு அழைத்து வரப்பட்டார். இதன் பின் திருப்பலி ஆரம்பமாகியது. மேலும் அறிய பெரியகட்டு தூய அந்தோனியார் திருவிழா