திருக்குடும்பத் திருவிழா.

2018.12.30

முன்னுரை.

என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது: என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம்மிடம் மிகுந்த அன்பு கொண்டுள்ள தந்தையாம் இறைவனின் திருப்பெயரால் நல் வாழ்த்துக்கள் கூறி இன்றைய திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். இன்று நாம் திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். நம்மை அழைத்து, அர்ச்சித்து குடும்பமாக ஒன்றிணைக்கும் நம் ஆண்டவரின் சந்நிதானத்தில்  ஒன்று கூடியுள்ளோம்.

குடும்பம் : இறைவனின் மாபெரும் கொடை, இறையன்பின் இனிய வெளிப்பாடு, இறைவனோடு இணைந்து பணியாற்ற நமக்குக் கொடுக்கப்படும் ஓர் அழைப்பு.உண்மையான செப வாழ்வும், இறைவனின் வார்த்தைகளை வாழ்வாக்குவதுமே குடும்ப வாழ்வை மகிழ்ச்சியுள்ளதாக்கும். அன்பு, பொறுமை, மன்னிப்பு, தூய வாழ்வு, புரிந்துணர்வு என்பவையே குடும்ப வாழ்வுக்கு உறுதியூட்டுபவையாகும். இவையே இன்றைய இறைவர்த்தைகள் ஊடாக நாம் பெற்றுக்கொள்ளும் இறைச் செய்தியாகும்.

எனவே நாம் நம்முடைய குடும்ப வாழ்வைச் சீர்தூக்கிப்பார்த்து, இறைவனுக்குகந்த குடும்பங்களாய் வாழவும், பிரிந்திருக்கும் குடும்பங்கள் ஒன்று சேரவும், குடும்பங்களுள் அமைதி நிலவவும் அருள் வேண்டிச ;செபிப்பதோடு, இன்று தங்கள் சபையின் திருவிழாவைக் கொண்டாடும் திருக்குடும்பச் சபை அருட்சகோதரிகளுக்காகவும் மன்றாடுவோம்.

முதல் வாசகம்

அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.

சாமுவேல் முதல்  நூலிலிருந்து வாசகம். 1:20-22,24-28

உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுத்தார், நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன் என்று சொல்லி, அவர் அவனுக்குச் சாமுவேல்; என்று பெயரிட்டார்.

எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனைiயும் செலுத்தச் சென்றார்கள், ஆனால், அன்னா செல்லவில்லை, அவர் தம் கணவரிடம், பையன் பால் குடி மறந்ததும் அவனை எடுத்து;ச செல்வேன், அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான் ; என்று சொன்னார்.

அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக் கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார், அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான், அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள், பின் அவர் கூறியது: ;என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன், நான் ஆண்டவரிடம் வி;ண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார், ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன், அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன், அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்,

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்       திபா: 84:1-2,4-5,8-9

பல்லவி:  ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறு பெற்றோர்!

படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது! என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது: என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.பல்லவி

உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்: அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர் பேறு பெற்றோர்: அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.பல்லவி

படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்! யாக்கோபின் கடவுளே! எனக்குச் செவிசாய்த்தருளும்!  எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்!பல்லவி

இரண்டாம் வாசகம்.

நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். 

யோவான் எழுதிய முதல்  திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-2, 21-24

அன்பார்ந்தவர்களே,

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்: கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்: ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்: ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்: அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணை;ந்திருக்கிறார்: கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   திப.16:14

அல்லேலூயா, அல்லேலூயா ! உம் திருமகனின் வார்த்தைகளை மனத்தில் இருத்தும்படி, ஆண்டவர், எங்கள் இதயத்தைத் திறந்தருளும் . அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

போதகர்கள் நடுவில் அமர்ந்திருந்த இயேசுவை அவருடைய பெற்றோர் கண்டு கொள்கின்றர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:41-52

ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்: இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார்.  இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது: பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர்.  ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்: அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள்.  அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.  அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ;மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே ; என்றார். அவர் அவர்களிடம் ;நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? ; என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்.  அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. அன்புத் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம் கிறிஸ்து அருளும் அமைதி அவர்கள் உள்ளங்களை நெறிப்படுத்தி! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அவர்களுக்குள் நிறைவாகக் குடிகொண்டு, அவர்கள் சிறப்பான நற்செய்தியின் தூதுவர்களாய் வாழ வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. அருள் வளங்களின் ஊற்றே இறைவா! குடும்பங்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நாங்கள் ஒவ்வொரு வரும் பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் எங் களை அணிசெய்து;. ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொண்டு. ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் நீர் எங்களை மன்னித்தது போல நாங்களும் மன்னித்து நற்செயல்களில் ஆர்வமுள்ள உமக்குரிய தூய குடும்பங்களாக வாழவு வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. அன்புத் தந்தையே இறைவா! நீர் எமக்களித்த பெற்றோருக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். நாங்கள் எங்கள் பெற்றோரை மதித்து, அவர்களைப் புண்படுத்தாது, அவர்களை மேன்மைப்படுத்தி வாழ வேண்டிய அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.
  4.  என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே! பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், கண்ணீரோடும் வாழும் அனைத்து குடும்பங்கள் மீதும் மன மிரங்கி அவர்கள் உண்மையான மனமாற்றம் பெற்று, கணவன், மனைவி ஆகியோர் ஒப்புரவாகி ஆதிக் கிறீஸ்தவ வாழ்வை வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
    சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்     Holyfamilyfeast

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *