Category Archives: Uncategorized

அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாருக்கு தேசிய மட்ட சாதனையாளர் விருது!

அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாருக்கு தேசிய மட்ட சாதனையாளர் விருது!

மன்னார் மறை மாவ ட்டத்தில் ‘மன்னா’ என்ற மாதாந்த கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரிய ராகக் கடந்த 15 வருடங் களுக்கு மேலாகப் பணி யாற்றிவரும் அருட் திரு.  தமிழ் நேசன் அடிகளாருக்கு ஊடகத் துறைக்கான தேசிய மட்ட சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாருக்கு தேசிய மட்ட சாதனையாளர் விருது!

தூய யோசேவ் வாஸ் அடிகளார் பற்றிய கண்காட்சி.

      Un-thiru-yazhil

தூய யோசேவ் வாஸ் ஆண்டை சிறப்புக்கும் நோக்குடன் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின் திருச்சபை வளர்ச்சிக்குழுவும், கலைபண்பாட்டுக் குழுவும் இணைந்து பங்குத் தந்தை அருட்பணி ச.ஜொ.பெப்பி சோசை அடிகளாரின் வழிகாட்டுதலின் கீழ் தூய யோசேவ் வாஸ் அடிகளாரின் வாழ்வும் பணியும் பற்றிய கண்காட்சியொன்றினை 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணி தொடக்கம் மாலை 07.00 மணிவரை தூய செபஸ்தியார் ஆலய இயேசுவே ஆண்டவர் திருவழிபாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது.

மேலும் அறிய தூய யோசேவ் வாஸ் அடிகளார் பற்றிய கண்காட்சி.

திருச்சிலுவையின் மகிமை விழா.

திருச்சிலுவையின் மகிமை விழா.

மன்னார் மறைமாவட்டத்தில்;, மன்னார் நகரின் வடக்குப் பக்கமாக கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள விசுவாசச் சிறப்புமிக்க குருசுக் கோயில் என அழைக்கப்படும் திருச்சிலுவை ஆலய விழா நேற்றைய தினம் (14.09.2017) வியாழக்கிழமை ஆன்மிகச் செழுமையோடு கொண்டாடப்பட்டது. மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றி, மக்களின் சிறப்புக் கருத்துக்களுக்காகச் செபித்தார். மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கு மக்களும், பள்ளிமுனை தூய லூசியா ஆலயப் பங்கு மக்களும் இணைந்து இத்திருவிழாத் திருப்பலிக்கான ஆன்மிகப் பணிகளை முன்னெடுத்துச் சென்றனர். இந்த இரண்டு ஆலயத்திற்குப் பொறுப்பான அருட்பணியாளர்களும் இணைந்து அனைத்துப் பணிகளையும் செய்தனர். பல இறைமக்கள் இத் திருவிழாத் திருப்பலியில் பங்கேற்று இறைவனுக்கு நன்றி செலுத்தியதோடு அருள் நலன்களையும் பெற்றுச் சென்றனர்.

மேலும் அறிய திருச்சிலுவையின் மகிமை விழா.

அருள்பணி டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள் விடுதலை

டந்த 18 மாத ங்களாக இஸ் லாம் தீவிர வாதிகளால் கடத்திவைக் கப்பட்டிருந்த, இந்திய அருள் பணி டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள், தான் விடுதலை செய்யப்பட்ட மறுநாளே, வத்திக்கானில்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து ஆசீர் பெற்றார்.

மேலும் அறிய அருள்பணி டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள் விடுதலை

கிறிஸ்தவ விசுவாசத்தைவிட்டு

இயேசு கிறிஸ்துவே நம் மகிழ்வு என்பதையும், அவரின் அன்பு மாறாதது மற்றும், குறையாதது என்பதையும், நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

கிறிஸ்தவ விசுவாசத்தைவிட்டு விலகியிருப்பவர்களுக்காகச் செபிப்போம் என்ற தலைப்பில், தனது ஜூலை மாதச் செபக் கருத்து பற்றி, காணொளி வழியாகப் பேசியுள்ள திருத்தந்தை, ஒரு கிறிஸ்தவர், கவலையாக இருக்கின்றார் என்றால், அவர், இயேசுவிடமிருந்து விலகியிருக்கின்றார் என்று அர்த்தம் எனக் கூறியுள்ளார்.

மேலும் அறிய கிறிஸ்தவ விசுவாசத்தைவிட்டு