மன்னார் மறைமாவட்ட சிரேஸ்ட பிரஜைகளுக்கான தவக்காலத் தியானம் இன்று 28.02.2018 புதன் கிழமை காலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலய இயேசுவே ஆண்டவர் வழிபாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.அருட்பணி.றொக்கசன் குரூஸ், அருட்பணி.றஜனிகாந் ஆகியோர் இத் தவக்காலத் தியானத்தை வழங்கினார்கள். மன்னார் மறைமாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் சமாசத்தின் இலக்குனர் அருட்பண.அல்பன் இராஜசிங்கம் அடிகளார் இத் தியானத்தை ஒழுங்கு படுத்தியிருந்தார்.
இத் தியான வேளையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் ஆண்டகை அவர்கள் வருகை தந்த சிரேஸ்ட பிரஜைகளை ஊக்கப் படுத்தி ஆசீர் வழங்கினார். பெருந்தொகையான மன்னார் மறைமாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் இத் தியானத்தில் பங்கேற்றனர்.