Let us Pray for the Beatification of Martyrs of Mannar. கிறிஸ்துவுக்காக தம் இன்னுயிர் ஈந்த நம் இறை விசுவாசிகள் மறைசாட்சிகள் என்னும் பேறு பெறச் செபிப்போம்.
The Official Webpage of the Diocese of Mannar மன்னார் மறைமாவட்டத்தின் இணையதளம்.

தூய யோசேவ் வாஸ் நாட்டுக் கூத்து

தூய யோசேவ் வாஸ் சிறப்பு ஆண்டையொண்டி யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணியாளர்களால் ஆற்றுகை செய்யப்பட்டு வரும் பாசையூரைச் சோந்த கலாபூசணம் திருவாளர் பாலதாஸ் அவர்களால் எழுதப்பட்ட  மறை வளர்த்த மாவீரன் என்னும் தூய யோசேவ் வாஸ் அவர்களின் வாழ்வையும் பணியையும் எடுத்துக் கூறும் நாட்டுக் கூத்து ஜப்பசி மாதம் 29ம் திகதி  வவுனியா இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயத்தின் வளாகத்தில் அமைந்துள்ள தூய யோசேவாஸ் அரங்கில் மேடையேற்றப்பட்டது.

மேலும் அறிய தூய யோசேவ் வாஸ் நாட்டுக் கூத்து

தியாக்கோன்களாக அருட்பொழிவு

மன்னார் மறைமாவட்டத் தைச் சேர்ந்த நான்கு அருட் சகோதரர்கள்  மன்னார் மறை மாவட்ட திருத்தூதுப் பணி நிர்வாகி பேரருட்திரு ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் ஜப்பசி மாதம் 28ந்திகதி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் தியாக்கோன்களாக அருட்பொழிவு செய்யப்பட்டார்கள்.

மேலும் அறிய தியாக்கோன்களாக அருட்பொழிவு

தூய யோசேவ் வாஸ் அடிகளார் பற்றிய கண்காட்சி.

      Un-thiru-yazhil

தூய யோசேவ் வாஸ் ஆண்டை சிறப்புக்கும் நோக்குடன் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கின் திருச்சபை வளர்ச்சிக்குழுவும், கலைபண்பாட்டுக் குழுவும் இணைந்து பங்குத் தந்தை அருட்பணி ச.ஜொ.பெப்பி சோசை அடிகளாரின் வழிகாட்டுதலின் கீழ் தூய யோசேவ் வாஸ் அடிகளாரின் வாழ்வும் பணியும் பற்றிய கண்காட்சியொன்றினை 01.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணி தொடக்கம் மாலை 07.00 மணிவரை தூய செபஸ்தியார் ஆலய இயேசுவே ஆண்டவர் திருவழிபாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது.

மேலும் அறிய தூய யோசேவ் வாஸ் அடிகளார் பற்றிய கண்காட்சி.

உறுதிப்பூசுதல் வழங்கும் திருநிகழ்வு

மன்னார் மறைமாவட்டத்தின், மன்னார் தூய செபஸ்தியார் போராலயப் பங்கில் 136 இளம் வயதினருக்கான உறுதிப்பூசுதல் வழங்கும் திருநிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (24.09.2017) மிகவும் பக்தி அருட்சியோடு நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையில் உள்ள இறைமக்களுக்கு ஒவ்வொரு பருவத்திலும் திருவருட்சாதனங்கள் வழங்கப்படுகின்றன. அவ் வகையில், கத்தோலிக்க திருச்சபையின் இளம் வயதினரின் கிறிஸ்தவ வாழ்வின் முதிர்ச்சியை நோக்கிய பயணத்திலே, அவர்களைக் கத்தோலிக்க விசுவாச, ஆன்மிக, சமூக ஈடுபாட்டு அருள்நிலைப் பண்புகளிலே ஆழுமை செறிந்தவர்களாக உருவாக்க மேற்கொள்ளப்படும் அருட்பணிச் செயலாக்கத்தில் இவ் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனமும் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

மேலும் அறிய உறுதிப்பூசுதல் வழங்கும் திருநிகழ்வு

திருச்சிலுவையின் மகிமை விழா.

திருச்சிலுவையின் மகிமை விழா.

மன்னார் மறைமாவட்டத்தில்;, மன்னார் நகரின் வடக்குப் பக்கமாக கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள விசுவாசச் சிறப்புமிக்க குருசுக் கோயில் என அழைக்கப்படும் திருச்சிலுவை ஆலய விழா நேற்றைய தினம் (14.09.2017) வியாழக்கிழமை ஆன்மிகச் செழுமையோடு கொண்டாடப்பட்டது. மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றி, மக்களின் சிறப்புக் கருத்துக்களுக்காகச் செபித்தார். மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கு மக்களும், பள்ளிமுனை தூய லூசியா ஆலயப் பங்கு மக்களும் இணைந்து இத்திருவிழாத் திருப்பலிக்கான ஆன்மிகப் பணிகளை முன்னெடுத்துச் சென்றனர். இந்த இரண்டு ஆலயத்திற்குப் பொறுப்பான அருட்பணியாளர்களும் இணைந்து அனைத்துப் பணிகளையும் செய்தனர். பல இறைமக்கள் இத் திருவிழாத் திருப்பலியில் பங்கேற்று இறைவனுக்கு நன்றி செலுத்தியதோடு அருள் நலன்களையும் பெற்றுச் சென்றனர்.

மேலும் அறிய திருச்சிலுவையின் மகிமை விழா.

அருள்பணி டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள் விடுதலை

டந்த 18 மாத ங்களாக இஸ் லாம் தீவிர வாதிகளால் கடத்திவைக் கப்பட்டிருந்த, இந்திய அருள் பணி டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள், தான் விடுதலை செய்யப்பட்ட மறுநாளே, வத்திக்கானில்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து ஆசீர் பெற்றார்.

மேலும் அறிய அருள்பணி டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள் விடுதலை

சிலுவையின் அடியில் நம் அனைவரையும்

ன்னை மரியா சிலுவையின் அடியில் நம் அனைவரையும் மற்றும் திரு அவையை யும் பெற்றெடுத்தார், வியாகுல அன்னை பற்றிய பேருண்மை, சிந்திக்கவேண்டியதைவிட  தியானிக்க வேண்டி யதாகும் என்று, இவ்வெள்ளி காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் அறிய சிலுவையின் அடியில் நம் அனைவரையும்

கிறிஸ்தவ விசுவாசத்தைவிட்டு

இயேசு கிறிஸ்துவே நம் மகிழ்வு என்பதையும், அவரின் அன்பு மாறாதது மற்றும், குறையாதது என்பதையும், நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

கிறிஸ்தவ விசுவாசத்தைவிட்டு விலகியிருப்பவர்களுக்காகச் செபிப்போம் என்ற தலைப்பில், தனது ஜூலை மாதச் செபக் கருத்து பற்றி, காணொளி வழியாகப் பேசியுள்ள திருத்தந்தை, ஒரு கிறிஸ்தவர், கவலையாக இருக்கின்றார் என்றால், அவர், இயேசுவிடமிருந்து விலகியிருக்கின்றார் என்று அர்த்தம் எனக் கூறியுள்ளார்.

மேலும் அறிய கிறிஸ்தவ விசுவாசத்தைவிட்டு

நம் எதிர்நோக்கின் ஊற்று’

கிறிஸ்தவ எதிர் நோக்கு குறித்த தன் மறைக்கல்வி உரைத்தொடரில் இப்புதனன்று, லூக்கா நற்செய்தி 11ம் பிரிவின் முதல் பகுதியில் காணப்படும், இயேசு கற்பித்த ‘வானகத்திலுள்ள எம்

தந்தாய்’ என்ற செபம் முதலில் வாசிக்கப்பட,  ‘இறைவனின் தந்தைப்பேறே, நம் எதிர்நோக்கின் ஊற்று’ என்ற தலைப்பில் உரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் அறிய நம் எதிர்நோக்கின் ஊற்று’