Category Archives: எமது மறைமாவட்ட செய்திகள்

புனித யோசவ்வாஸ் ஆண்டை முன்னிட்டு

புனித யோசவ்வாஸ் ஆண்டை முன்னிட்டு கலையருவி முன்னெ டுக்கும் நிகழ்வுகள்.

இலங்கையில் இவ்வாண்டு கத் தோலிக்க திருச்சபையால் புனித யோசவ்வாஸ் ஆண்டு பிரகனப்படுத்தப் பட் டுள்ளது. இவ் வாண்டுக்குரிய பல்வேறுசெயல் திட்டங்கள் மன்னார் மறைமாவட்டத் திலும் சிறப்பாக முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் ‘கலையருவி’ புனித யோசப்வாஸ் ஆண்டை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு போட்டி நிகழ்வு களை நடாத்தியது.

இப்போட்டிகள் அனைத்தையும்  மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பண மையம் ‘கலையருவி’ இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் திட்டமிட்டு ஒழுங்கமைத்து நடாத்தி வருகின்றார்.

மேலும் அறிய புனித யோசவ்வாஸ் ஆண்டை முன்னிட்டு

தூய யோசேவ் வாஸ் நாட்டுக் கூத்து

தூய யோசேவ் வாஸ் சிறப்பு ஆண்டையொண்டி யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணியாளர்களால் ஆற்றுகை செய்யப்பட்டு வரும் பாசையூரைச் சோந்த கலாபூசணம் திருவாளர் பாலதாஸ் அவர்களால் எழுதப்பட்ட  மறை வளர்த்த மாவீரன் என்னும் தூய யோசேவ் வாஸ் அவர்களின் வாழ்வையும் பணியையும் எடுத்துக் கூறும் நாட்டுக் கூத்து ஜப்பசி மாதம் 29ம் திகதி  வவுனியா இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயத்தின் வளாகத்தில் அமைந்துள்ள தூய யோசேவாஸ் அரங்கில் மேடையேற்றப்பட்டது.

மேலும் அறிய தூய யோசேவ் வாஸ் நாட்டுக் கூத்து

தியாக்கோன்களாக அருட்பொழிவு

மன்னார் மறைமாவட்டத் தைச் சேர்ந்த நான்கு அருட் சகோதரர்கள்  மன்னார் மறை மாவட்ட திருத்தூதுப் பணி நிர்வாகி பேரருட்திரு ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களால் ஜப்பசி மாதம் 28ந்திகதி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் தியாக்கோன்களாக அருட்பொழிவு செய்யப்பட்டார்கள்.

மேலும் அறிய தியாக்கோன்களாக அருட்பொழிவு