ஞாயிறு திருவழிபாட்டுக் குறிப்புக்கள்.

பொதுக்காலம் காலம் முப்பத்திரெண்டாம்  ஞாயிறு.

2017.11.12.

முன்னுரை.

கடவுளே! உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.

அன்புமிக்க சகோதரரே! சகோதரிகளே! நமக்குத் துணை யாக இருந்து தம் ஆறுதலின் நிழலில் நமக்கு அடைக் கலம் தரும் இறைத்தந்தையின் திருப்பெயரில் வாழ்த்துக் கள் கூறி, ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி ரெண்டாம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றுச் செபிக்க வந்திருக்கும் உங்கள் அனை வரையும் அன்போடு வரவேற்கின்றோம்.

நம்முடைய தேடல்கள், சிந்தனை, சொல் அனைத்தும் ஞானத்தை மையப்படுத்தியதாக இருக்க வேண் டும். இங்கு ஞானம் என்பது கடவுளைக் குறித்து நிற்கின் றது. அவர் ஒளியாகவும், வழியாகவும், வாழ்வாகவும் இருக்கின்றார். அவர் மீது அன்பு கொள்வோரும், அவரை ஆவலோடும், பெருவிருப் போடும் தேடிச் செல்வோரும், அவர்மீது தம் மனத்தைச் செலுத்துவோரும், கடவுளின் அறிவுரைகளைக் கடைப்பிடித்து விழிப்போடு வாழ்வோ ரும் பெற்றுக் கொள்ளும் அருள் ஆசீர்வாதங்களை இன்றைய இறைவார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்தி நிற்கின்றன.

தூய யோசேவ் வாஸ் அடிகளாரின் தூய பணியையும், சாட்சிய வாழ்வையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் நாமும்: அவர் எவ்வாறு கிறிஸ்துவாகிய ஞானத்தைக் கண்டு பிடித்து அதன் ஒளியில் வாழ்ந்து முன்மாதிரிகை காட்டினாரோ, அவ்வாறே நாமும் கிறஸ்துவை நம் வாழ்வில் முதன்மைப்படுத்தி வாழ நம்மை அர்ப்பணித்த வர்களாய் இறைவரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் அர்தமுடன் பங்கேற்போம்.

முதல் வாசகம்.

ஞானத்தைத் தேடுவோர், அதைக் கண்டடைவர்.

சாலமோனின் ஞான  நூலிருந்து வாசகம். 6:12-16

ஞானம் ஒளிமிக்கது: மங்காதது. அதன்பால் அன்பு கூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடு வோர் கண்டடைவர்.தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும்.

வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடையமாட் டார்கள்; ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப் பதை அவர்கள் காண்பார்கள். அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன்பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர்.

தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது: அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டு கிறது: அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர் களை எதிர்கொள்கிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப்பாடல். திபா. 63: 1-7

பல்லவி:  என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது

கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது: நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. பல்லவி

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது: என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி

நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன். ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். பல்லவி

இரண்டாம் வாசகம்.

இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4:13-18

சகோதர சகோதரிகளே!

இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர் களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படி யானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோ ரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவரு டைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக் குக் கூறுவது இதுவே ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.

கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினி ன்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டு போகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர் கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தை களைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. மத்.24:42,44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்: ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்.

விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.  25:1-13

இயேசு தம் சீடர்களுக்குச் சொன்ன உவமையாவது: “ விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்; மணமகனை எதிர் கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார் கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்க ளோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதி யுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண் ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கி விட்டனர்.

நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர் கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மண மகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்கு களை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன் மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன் உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதி உடை யவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே வணிகரிடம் போய் நீங்களே  நல்லது’ என்றார்கள்.

அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக் குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. ஆற்றலையும் மாட்சியையும் கொண்டிருக்கும் தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் ஞானமும், வல்லமையுமாகிய கிறிஸ்துவின் பாதச் சுவடுகளைப் பக்குவமாய்ப் பின்பற்றி, எப்போதும் அனைத்திலும் விழிப்போடும், விவேகத்தோடும் பணியாற்றுவதற்கு வேண்டிய வல்லமையை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2. உயிரினும் மேலான பேரன்பு உடையவரான தந்தையே இறைவா! உமது மக்களாகிய நாங்களும் அனைத்திற் கும் மேலாக கிறிஸ்துவின் பாதச் சுவடுகளைப் பக்குவமாய்ப் பின்பற்றி, எப்போதும் அனைத்திலும் விழிப்போடும், விவேகத்தோடும் வாழவேண்டிய மனப் பக்குவத்தை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3. இறந்தோரை உயிhத்தெழச் செய்யும் அன்புத் தந்தையே இறைவா! இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு இறந்துபோன அனைவருக்கும், யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும், வேதனைப் படும் ஆன்மாக்களுக்கும் முடிவில்லா அமைதியை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. ஞானமும், வல்லமையும் உடையவரான தந்தையே இறைவா! எமது இளைஞர்கள் அனைவரும்: உம்மையே நோக்கவும், உம்மையே தேடவும், நாடவும், உமக்காக தாகமுற்றிருக்கவும், உம்மையே சிந்திக் கவும், உம்மையே புகழவும் அவர்களுக்கு வல்ல மையை அளித்து, அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடு கின்றோம்.
  5. சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

https://arudkadal.com/wp-content/uploads/2017/11/32ndOrdiSunda2017.pdf