Category Archives: எமது மறைமாவட்ட செய்திகள்

தூய எண்ணெய் புனிதப்படுத்தும் திருச் சடங்கு

தூய வாரத்தின் திங்கட் கிழமை மாலையில் வழமையாக மன்னார் மறைமாவட்டத்தில் நடைபெறும் திருவருட்சாதனங்க ளுக்குப் பயன்படுத்தப் படும் தூய எண்ணெய் புனிதப்படுத்தும் திருச் சடங்கும், குருக்களுக்கான குருத்துவ அர்ப்பண வாக்குறுதிகளைப் புதுப்பிக்கும் திரு நிகழ்வும் நேற்று (26.03.2018) திங்கட்கிழமை மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. மேலும் அறிய தூய எண்ணெய் புனிதப்படுத்தும் திருச் சடங்கு

பேரால பங்கின் பெரிய சிலுவைப்பாதை

வழமையாக நடைபெறும் தவக்காலம் 6ம் வெள்ளி மன்னார் தூய செபஸ்தியார் பேரால பங்கின் பெரிய சிலுவைப்பாதை கடந்த 23.03.2018 வெள்ளிக்கிழமை மேலும் அறிய பேரால பங்கின் பெரிய சிலுவைப்பாதை

தூய கர்த்தர் ஆலயத்தில் தவக்காலத்தின் 6ம் வெள்ளிக்கிழமை தவக்காலச் சிறப்பு வழிபாடுகள்

நீண்டதொரு விசுவாச, ஆன்மிகப் பாராம்பரியங்களைக் கொண்ட மன்னார், பரப்புக்கடந்தான் தூய கர்த்தர் ஆலயத்தில் வருடாந்தம் தவக்காலத்தின் 6ம் வெள்ளிக்கிழமை நடைபெறும் தவக்காலச் சிறப்பு வழிபாடுகள் இன்று (23.03.2018) வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் நடைபெற்று வருகின்றன. மேலும் அறிய தூய கர்த்தர் ஆலயத்தில் தவக்காலத்தின் 6ம் வெள்ளிக்கிழமை தவக்காலச் சிறப்பு வழிபாடுகள்

துறவியர்களின் ஒன்றியம் ஆயரை வரவேற்று மதிப்பளித்தனர்.

மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றும் ஆண், பெண் துறவியர்களின் ஒன்றியம் இன்று (08.03.2018) வியாழக்கிழமை மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையை தமது மாதாந்த ஒன்று கூடலின் போது வரவேற்று மதிப்பளித்தனர். மேலும் அறிய துறவியர்களின் ஒன்றியம் ஆயரை வரவேற்று மதிப்பளித்தனர்.

மறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம்

சிலாவத்துறைப் பங்கிலுள்ள மறையாசிரியர்க ளுக்கான இரண்டு நாள் தவக்காலத் தியானம் முள்ளிக்குளம் தூய பரலோக அன்னை ஆலயத்தில் 28.02.2018 புதன் கிழமை மாலை தொடக்கம் 01.03.2018 வியாழக்கிழமை மாலை வரை நடைபெற்றது. மேலும் அறிய மறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம்

சிரேஸ்ட பிரஜைகளுக்கான தவக்காலத் தியானம்

மன்னார் மறைமாவட்ட சிரேஸ்ட பிரஜைகளுக்கான தவக்காலத் தியானம் இன்று 28.02.2018 புதன் கிழமை காலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலய இயேசுவே ஆண்டவர் வழிபாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மேலும் அறிய சிரேஸ்ட பிரஜைகளுக்கான தவக்காலத் தியானம்

இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குச் சமூகம் மகத்தான வரவேற்பளித்தது.

மன்னார் மறை மாவட்டத்தின் வவுனியா மறைக் கோட்டத்தின் தலைமை ஆலயமாக உள்ள வவுனியா இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குச் சமூகம் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு கடந்த 18.02.2018 ஞாயிற்றுக் கிழமை மகத்தான வரவேற்பளித்தது. மேலும் அறிய இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயப் பங்குச் சமூகம் மகத்தான வரவேற்பளித்தது.

தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரை

தமிழ்த்தூது அருட்பணி சேவியர் தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரை, மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையமான கலையருவியின் ஏற்பாட்டில் இன்று 18.02.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலய கேட்போர் மண்டபத்திலே நடைபெற்றது. மேலும் அறிய தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரை

மாந்தை தூய லூர்து அன்னை திருத்தலப் பெருவிழா

மருதமடுத் திருத்தாயாரின் தொடக்ககால இருப்பிடமும் , வரலாற்றச் சிறப்புமிக்கதுமான மாந்தை தூய லூர்து அன்னை திருத்தலப் பெருவிழா, இன்று (17.02.2018) சனிக்கிழமை  காலை பல ஆயிரம் இறைமக்கள் ஒன்று கூடி நிற்க மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலும் அறிய மாந்தை தூய லூர்து அன்னை திருத்தலப் பெருவிழா

சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மன்னார் மறைசாட்சிகளின்  மண்ணில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மருதமடுத் திருத்தாயாரின் ஆரம்ப இடமாகிய மாந்தையில் அமைந்துள்ள மாந்தை மாதா பெருவிழா நாளை (17.02.2018) சனிக்கிழமை  நடைபெறவுள்ள நிலையில், இன்று (16.02.2018) வெள்ளிக்கிழமை இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும் அறிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.