பாஸ்க்காக் காலம் 5ம் ஞாயிறு

பாஸ்க்காக் காலம் 5ம் ஞாயிறு

2026.05.03

முன்னுரை.

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின் றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! தமது பேரன்பால் பூவுலகை நிரப்புகின்றவரும், சாவினின்று காக்கின் றவரும், பஞ்சத்திலும் வாழ்விக்கின்றவருமான நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி  இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். பாஸ்க்காக் காலம் ஐந்தாம் ஞாயிறு தினமாகிய இன்று வழியும் உண்மையும் வாழ்வுமான நம் ஆண்டவர் இயேசுவின் சந்நிதானத்தில்  ஒன்று கூடியுள்ளோம்.

கலக்கத்தோடும், கண்ணீரோடும், ஏக்கத்தோடும், இழப்புக்களோடும் வாழுகின்றவர்களுக்கு: மாபெரும் நம்பிக்கைச் செய்தியொன்று கொடுக்கப்படுகின்றது. நான் சொல்வதை நம்புங்கள்: நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின் றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். என்பதே அச்செய்தியாகும். அத்தோடு நாம் அனைவரும் ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படவும், ஆவிக்கு ரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருக்கவேண்டுமெனவும் இறைவன் விரும்பு கின்றார்.

ஆகவே நாம் அனைவரும் இறைவனில் எப்பொழும் நம்பிக்கை கொண்டு வாழுவோம். அவரில் மகிழு வோம். அவர் விரும்புவதை நிறைவேற்றுவோம், அவர் மக்களாய் வாழ இத் திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.

முதல் வாசகம்

தூய ஆவி நிறைந்த எழுவரைத் தெரிந்தெடுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 6:1-7

அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி  பேசுவோர் தங்களு டைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப் படவி ல்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.

எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து,  நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறைஅல்ல. ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்த வர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந் தெடுங் கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப் போம். நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம் என்று கூறினர்.

திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக ;கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கா னோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிர்கொலா என்பவர் களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டி னர்.

கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப்   பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம் பிக்கை கொண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்            திபா: 33:1-2,4-5, 18-19

பல்லவி: ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்: நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்: பல்லவி:

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி:

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண் ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர்,

திருத்தூதர் பேதுரு எழுதிய  முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2:4-9

அன்பிற்குரியவர்களே,

உயிருள்ள கல்லாகிய அவரை அணுகுங்கள்.  மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரி ந்து கொள்ளப்பட்ட உயர்மதிப்புள்ள கல் அதுவே. நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக! ஏனெனில், இதோ, சீயோனில் நான் ஒரு மூலைக்கல் நாட்டுகிறேன்.  அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலையுயர்ந்த மூலைக்கல்.  அதில் நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்; என்று மறைநூலில் காணக்கிடக்கிறது.

நம்பிக்கை கொண்ட உங்களுக்கு அது உயர்மதிப்புள்ளதாக விளங்கும்.  நம்பிக்கை இல்லாதவர்களைப் பொறுத்தமட்டில், கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மையான மூலைக் கல்லாயிற்று. மற்றும் அது, இடறுதற் கல்லாகவும் தடுக்கி விழச்செய்யும் கற்பாறையாகவும் இருக்கும்.  அவர்கள் வார்த்தையை ஏற்கா ததால் தடுக்கி விழுகிறார்கள்: இதற்கென்றே அவர் கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்: அவரது உரிமைச் சொத்தான மக்கள்.  எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழை த்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   யோவா 14:6

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:1-12

அக்காலத்தில்;

இயேசு, தம் சீடரை நோக்கிக் கூறியது,  ;நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத் தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில்,  ;உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் ; என்று கொல்லியிருப் பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத் துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும் ; என்றார்.

தோமா அவரிடம்,  ;ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப் படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?  என்றார். இயேசு அவரிடம்,  வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங் கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையம் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிரு க்கிறீர்கள ; என்றார்.

அப்போது பிலிப்பு, அவரிடம்,  ;ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்: அதுவே போதும்  என்றார். இயேசு அவரிடம் கூறியது:  பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்க ளோடு இருந்தும் நீ என்னை அறி ந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க,  தந்தையை எங்களுக்குக் காட்டும் ; என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவ தில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்து கொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்: தந்தை என்னுள் இருக்கிறார்.

நான் சொல்வதை நம்புங்கள்: என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டா வது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்ப வரும் செய்வார்: ஏன், அவற் றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தை யிடம் போகிறேன் என உறுதியாக உங்க ளுக்குச் சொல்கிறேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

1.ஆசீரும் அருளும் நிறைந்த அன்புத் தந்தையே இறைவா!

உமது பிரதிநிதிகளாக இருக்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படவும், மக்களுக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் : அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றவர்களாகவும், நல்ல வழிகாட்டிகளாகவும், ஆவிக்குரிய பலிகளை ஒப்புக் கொடுக்கின்றவர்களாகவும்  இருந்து பணியாற்ற வேண்டிய பலத்தையும் உடல் நலத்தையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள சமூக  உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது சமூகத்திற்காக  உம்மிடம் இரந்து வருகின்றோம். இன்றைய நாட்களில் சமூக உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து நாம் அனைவரும்  ஒரே உள்ளமும் , ஒரே மனமும் உடையவர்களாச் செயற்பட்டு இறையரசின் கருவிகளாகவும் , சமாதானத்தின் தூதுவர்களாகவும் , உமது சாட்சிகளாகவும் செயற்பட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும்  எம் இளைஞர்கள்   உமது வார்த்தைக்கு மட்டுமே என்றும் பணிந்து உமது சாட்சிகளாய் வாழவும், அனைவரும் ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படவும், ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருக்கவும் அவர்களுக்கு அருள் தந்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் 5thsundayofeaster2026

 

 

 

 

 

 

 

 

பாஸ்காக் காலம் 3ம் ஞாயிறு.

பாஸ்காக் காலம் 3ம் ஞாயிறு.

2026.04.19

முன்னுரை.

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்: உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு: உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த் துக்கள் கூறி பாஸ்காக் காலம் மூன்றாம் ஞாயிறு தினத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்கள் ஒவ்வொருவரையும், அன்புடனம், மகிழ்வுடனும் வரவேற்று நிற்கின்றோம். நாம் அனைவருமே இன்று உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தில் விசுவாசத்தோடும், வேண்டுதல்களோடும்; ஒன்று கூடியுள்ளோம்.

இயேசுவின் பிரசன்னம் எப்பொழும் ஆறுதலையும், அமைதியையும் தருகின்றது. ஆனால் ஒன்று பட்ட ஒரு சமூகத்தின் மத்தியில்தான் கிறிஸ்து தரும் இந்த ஆறுதலையும், அமைதியையும் அனுப விக்க முடியும். ஏனெனில் நாம்  ;தந்தையே ; என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறார். இந்தப் பேருண்மைகளை மனத்தில் ஆழப் பதித்தவர்களாக ‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்:  அவர் என் வலப்பக்கம் உள்ளார்:  எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகைகொள் கின்றது: என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும் என்னும் விசுவாச உறுதியோடு தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

மரணம் இயேசுவைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 2:14,22-33

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபொழுது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்:  ;யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.  எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள்.

இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்.கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்லசெயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக்காண்பித்தார். இது நீ;ங்கள் அறிந்ததே. கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார்.  நீ;ங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார்.  ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. தாவீது அவரைக்குறித்துக் கூறியது:

‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்:  அவர் என் வலப்பக்கம் உள்ளார்:  எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகைகொள்கின்றது: என் நா மகிழ்ச்சி யால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுக்குழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச்செய்வீர்: உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.’

;;சகோதர சகோதரிகளே, நமது குல முதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்க மாட்டீர்கள்.  அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார்.  அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணை யில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிடடுக் கூறியதை அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, ‘அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்: அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்’ என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிhத் தெழச் செய்தார்.  இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர் கடவுளின் வலதுப்பக்கத்;துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளி னார்.  நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்            திபா: 16:1-2, 5, 7-11

பல்லவி: ஆண்டவரே வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்

இறைவா, என்னைக் காத்தருளும்: உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்ட வரிடம் ‘நீரே என் தலைவர்: உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து: அவரே என் கிண்ணம்: எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே:பல்லவி:

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்: இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்: அவர் என் வலப்பக்கம் உள்ளார்: எனவே, நான் அசைவுறேன்.பல்லவி:

என் இதயம் அக்களிக்கின்றது: என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது: என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்: உம் அன்பனைப் படு குழியைக் காண விடமாட்டீர்.பல்லவி:

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்: உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு: உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும்..

திருத்தூதர் பேதுரு எழுதிய  முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-21

அன்பார்ந்தவர்களே,

நீங்கள் ;தந்தையே ; என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறார்.  ஆகையால் இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள். உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத் தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரி யும்.  அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல: மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும். உலகம் தோன்று முன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப் பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்.  இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார்.  இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   திபா 118:24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே: இன்று அக்களிப்போம்: அகமகிழ்வோம். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்று விட்டீர்கள். ஆனால் கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24:13-35

அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலை யிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர்.  அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச் சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, ;வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? ; என்று கேட்டார்.  அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.

அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ;எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ! ; என்றார். அதற்கு அவர் அவர்களிடம், ;என்ன நிகழ்ந்தது? ; என்று கேட்டார்.  அவர்கள் அவரிடம், ;நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம்.  அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார்  என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்.  ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சி யாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.  இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்: அவர்கள் விடியற்காலையில்  கல்லறைக்குச் சென்றார் கள்: அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்க ளுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர்.  ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை ; என்றார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, ;அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! ; என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல் களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.

அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள்.  அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். அவர்கள் அவரிடம், ;எங்களோடு தங்கும்: ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று: பொழுதும் போயிற்று ; என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்க வைத்தார்கள்.  அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன.  அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்.  உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ;வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ; என்று பேசிக் கொண்டார்கள்.

அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.  அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், ;ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார்.  அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார் ; என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக் கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. அமைதியின் ஊற்றே இறைவா!

உம்முடைய சீடர்களுக்கு நீர் கொடுத்த அமைதியின் வாழ்த்தை எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவர்மீதும் பொழிந்து: அவர்கள் இறைமக்களை அமைதியிலும், உண்மையிலும், உறவிலும், சமூக ஒன்றிப்பிலும் வழி நடாத்திச் செல்ல வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. தக்க வேளையில் துணைநிற்கும் தேவனே இறைவா!

எம்முடைய விசுவாச வாழ்விற்கெதிரான அச்சுறுத்தல்கள் அதிகமாகி வரும் இந்நாட்களில், நாங்கள் ஒவ்வொருவரும்: ‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்:  அவர் என் வலப்பக்கம் உள்ளார்:  எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகைகொள்கின்றது: என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது.  என்னும் பேருண்மையை ஆழமாக உணர்ந்து உறுதியோடு வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. சமாதானத்தின் தேவனே இறைவா!

இயேசு தம் சீடருக்கு வழங்கிய அதே சமாதானத்தை நாங்கள் ஒவ்வொருவரும், மற்றும் உலக மக்கள் ஒவ்வொருவரும் பெற்று மகிழ்ந்திடவும் அனைத்துக் குடும்பங்களிலும் சமாதானம் ஒற்றமை வளர்ந்தோங்கிடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  1. அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின் றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Easter 3rd Sunday 2026

 

 

 

 

பாஸ்காக் காலம் 2ம் ஞாயிறு.

பாஸ்காக் காலம் 2ம் ஞாயிறு.

2026.04.12

முன்னுரை.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று பாஸ்காக் காலம் இரண்டாம்;; ஞாயிறு. உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தில் விசுவாசத்தோடும், வேண்டுதல்களோடும்; நாம்;  ஒன்று கூடியுள்ளோம். மாபெரும் செயல் புரிந்துள்ளவரும், என்றென்றும் பேரன்பு உடையவரும், நம் இறைவனும், நம்மீது நம்பிக்கையின் சுடராய் ஒளிர்ந்துள்ளவருமான இயேசுவின் இனிய நாமத்தில இன்ப வாழ்த்துக்கள் கூறி பாஸ்காக் கால இரண்டாம் ஞாயிறு மற்றும் இறை இரக்கப் பெருவிழாவைக் கொண்டாட வந்திருக்கும் உங்கள் அனைவரையும்; அன்போடு வரவேற்கின்றோம்.

இறை நம்பிக்கையின்  பலன்கள் என்ன? இறைவன் எப்போது, எங்கே பிரசன்னமாகின்றார்? போன்ற வினாக்களுக்கான தெளிவான பதில்களை இன்றைய இறைவார்த்தைகள் நமக்குத் தருகின்றன. அதாவது நம்பிக்கையின் பலன், இறைவனுடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதைக் காணும் பாக்கியமாகும். அது இறைவனுடைய இரக்கமாக நம்மிடம் வந்து சேருகின்றது.  அத்தோடு, ஒன்றாக வாழும் சமூகத்தில் இறைவனுடைய பிரசன்னம் என்றும் இருக்கும் என்பது இன்று நமக்குத் தரப்படும் அடுத்த செய்தியாகும்.

இயேசுவின் உயிர்ப்பினில் மனிதர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் மன அமைதியும் பிறக்கின்றது. பாவத்தின் விளைவாக மனித குலம் சந்திக்கும் எந்தத் தடைகளும் இயேசுவின் உயிர்ப்பினால் தகர்க்கப்படுகின்றது. உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று தம் சீடரை வாழ்த்தி, பலப்படுத்திய இயேசு நமக்கும் அதே அற்புதமான ஆசீர்வாதத்தைத் தருகின்றார். அத்தோடு நாம் உடலிலும், ஆன்மாவிலும் நலம் பெற  தூய ஆவியைப் பொழிந்து பாவமன்னிப்பு என் னும் அருட்சாதனத்திற்கான பணியையும், அனுமதியையும் அவருடைய பணியைத் தொடர்ந்தாற்றுகின்றவர்களுக்கு வழங்குகின்றார். இதன் வழியாக நாம் நம்பிக்கை கொண்டு ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்வதோடு நம் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறோம்;. இந்தப் பேருண்மைகளை மனத்தில் ஆழப் பதித்தவர்களாகத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்

நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்: எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந் தனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 2:42-47

அக்காலத்தில்

திருமுழுக்குப் பெற்றவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்.  மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. திருத்தூதர் வழியாகப் பல அருஞ் செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்: எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்:  பேருவகையோடும் எளிய உள் ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். அவர்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்: எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்:  ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல்            திபா: 118:2-4,13-15,22-24

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என் ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவ ருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! பல்லவி

அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்: ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண் டவரே என் ஆற்றல: என் பாடல்: என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது: ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. பல்லவி

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண் களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே: இன்று அக்களிப்போம்: அகமகிழ் வோம். பல்லவி

இரண்டாம் வாசகம்.

இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார்.  இவ்வாறு குன்றா எதிர் நோக் குடன் நாம் வாழ்கிறோம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய  முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார்.  இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள் ளது. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள்.  இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.

இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது.  அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கை யும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்.  இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். நீங்கள் அவரைப் பார்த்ததில்லை: எனினும் அவர்மீது அன்பு செலுத்து கிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை: எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி   யோவா 20:29

அல்லேலூயா, அல்லேலூயா! தோமா என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் என்கிறார் ஆண்டவர்! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று,  ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி,  ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன் ; என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி,  ;தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ; என்றார்.

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம்,  ;ஆண்டவரைக் கண்டோம் ; என்றார்கள். தோமா அவர்களிடம்,  ;அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ; என்றார்.

எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று,  ;உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ; என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம்,  ;இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ; என்றார்.

தோமா அவரைப் பார்த்து,  ;நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்! என்றார். இயேசு அவரிடம்,  ;நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்; என்றார்.

வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

நம்பிக்கையாளர் இறைவேண்டல்கள்

1.மாபெரும் செயல் புரியும் தந்தையே இறைவா!

எங்கள் திருத்தந்தை,ஆயர்கள், குருக்கள், மற்றும் துறவறத்தார் அனைவரும், என்றும் உண்மையான இறை நம்பிக்கையால்  நிறைந்து, தங்கள் உண்மையான நம்பிக்கை வாழ்க்கையால் திருஅவையை வழி நடாத்திச் செல்ல தூய ஆவியின் அருள்வரங்களால் அவர்களை நிரப்பியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.பேரன்பு உடையவரான தந்தையே இறைவா! 

எம்முடைய நம்பிக்கை வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள  அடையாளங்களையும், அற்புதங்களையும் தேடியலையாது, உம்முடைய வாக்குறுதிகள் நிறைவேறம் என்பதை உணர்ந்து காத்திருந்து செயற்படும் தெளிவான பார்வையைத் தர  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.இரக்கத்தோடு அனைவரையும் அரவணைக்கும் தந்தையே இறைவா!

பாவமன்னிப்பையும், ஒப்புரவு அருட்சாதனத்தைப் பற்றியும் பலர் கொண்டிருக்கும் தவறான, தெளிவற்ற தெளிவற்ற பார்வை எம்மில் மாறிட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.அனைத்தின் மீதும் அதிகாரம் கொண்ட தெய்வமே இறைவா!

உலகில் இன்று பெருகிவரும் அடக்குமுறை, வன்முறை, அநீதி, சமத்துவமின்மை போன்ற தீமைகளை அழித்து  உலகில் நிலையான அமைதி நிலைபெறச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும் Easter 2nd Sunday 2026