நற்கருணை ஆசீர்வாதமும் இரவு 08.30 மணிக்கு மெழுகுதிரி ஒளியுடன் திருச் செபமாலைப் பவனியும்

இலங்கை வாழ் மக்களின் இதயங் கவர்ந்த தாயாக இருக்கும் மடுமாதாவின் ஆவணித் திருவிழாவின் எட்டாம் நாளாகிய இன்று (13.08.2019) செவ்வாய்க்கிழமை மாலையில் நற்கருணை ஆசீர்வாதமும் இரவு 08.30 மணிக்கு மெழுகுதிரி ஒளியுடன் திருச் செபமாலைப் பவனியும் இடம் பெற்றது. இலங்கை வாழ் மக்களின் இதயங் கவர்ந்த தாயாக இருக்கும் மடுமாதாவின் ஆவணித் திருவிழாவின் எட்டாம் நாளாகிய இன்று (13.08.2019) செவ்வாய்க்கிழமை மாலையில் நற்கருணை ஆசீர்வாதமும் இரவு 08.30 மணிக்கு மெழுகுதிரி ஒளியுடன் திருச் செபமாலைப் பவனியும் இடம் பெற்றது.

பெருந்திரளான மக்கள் பல இடர்களையும் தாண்டி இத் திருப்பவனியில் மிகவும் பக்தியோடு பங்கு பற்றி. மடுமாதா கொடுத்த அமைதியையும், ஆறதலையும் பெற்று மகிழ்ந்தனர். இத் திரு நிகழ்வின் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களும், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி நோபேட் அண்றாடி ஆண்டகை அவர்களும், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்திருந்த அருட்பணியாளர்களும், துறவிகளும் இறைமக்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

திருப்பவனியின் இறுதியில் மன்னார் ஆயர் அவர்கள் இலத்தின் மொழியில் இறை ஆசிரை வழங்கி இத் திருநிகழ்வை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *