வங்காலை புனித ஆனாள் ஆலயத் திருவிழா நேற்று (26.07.2019) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. நேற்றக்காலை இத் திருவிழாத் திருப்பலியைத் தலைமையேற்று ஒப்பக் கொடுக்க வந்திருந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களை ஆலய நுழைவாயிலில் வைத்து பங்கு மக்கள் வரவேற்றனர். வங்காலை புனித ஆனாள் ம.ம.வி. மாணவர்களின் தமிழர் பண்பாட்டு இசைக் கருவிகளின் மகிழ்வொலியோடு ஆயயரும் ஏனை திருவழிபாட்டுப் பரதிநிதிகளும் அழைததுவரப்பட்டனர்.
வங்காலை புனித ஆனாள் ஆலயத் திருவிழா நேற்று (26.07.2019) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. நேற்றக்காலை இத் திருவிழாத் திருப்பலியைத் தலைமையேற்று ஒப்பக் கொடுக்க வந்திருந்த மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை அவர்களை ஆலய நுழைவாயிலில் வைத்து பங்கு மக்கள் வரவேற்றனர். வங்காலை புனித ஆனாள் ம.ம.வி. மாணவர்களின் தமிழர் பண்பாட்டு இசைக் கருவிகளின் மகிழ்வொலியோடு ஆயயரும் ஏனை திருவழிபாட்டுப் பரதிநிதிகளும் அழைததுவரப்பட்டனர்.
தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார் மறையுரையுரையை வழங்கினார்.
இறுதியில் அன்னைனயின்; திருவுருவப் பவனி இடம் பெற்றது. தங்களின் நெய்தல் நிலப் பிற்புலத்திலே அழகிய தேரினை வடிவமைத்து தங்கள் பாதுகாவலியாம் புனித ஆனாள் அன்னையைப் பவனியாக எடுத்து வந்தனர். பல அருட்பணியாளர்களும், அருட்சகோதரிகளும் இறைமக்களும் இவ் வழிபாட்டில் கலந்து செபித்தனர். பங்குத் தந்தை அருட்பணி.ச.மாக்கஸ்அடிகளார் பங்கு மக்களோடு இணைந்து அனைத்தையும் மிகவும் ஆன்மிக வளத்தோடு ஆயத்தப்படுத்தி நெறிப்படுத்தியிருந்தார்.