புனித வியாழன் -ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி.

முன்னுரை.

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன். ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! நம்மீது அருள் கூர்ந்து, நம்மை வாழ்விக்கும்  நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று தூய வியாழன். நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து: நற்கருணையையும், பணிக்குருத்துவத்தையும்  ஏற்படுத்தி நாம் அனைவரும் பிரதி பலன் எதிர்பாராது தாழ்ச்சியோடு பணி செய்யவேண்டும் என்பதை செயலில் காட்டிய நாளை நினைவு இன்று நாம் கூருகின்றோம்.

நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் என்னும் இயேசுவின் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு: நற்கருணை, பணிக்குருத்துவம் இவற்றின் வழி யாக இயேசு நமக்கு விட்டுச் செல்லும்: தாழ்மை, பொறுமை, அன்பு, சேவை, பிறர் நலம் போன்ற நற் பண்புகளை நாமும் செயலில் வாழ ஆற்றல் கேட்டும், நமது திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவி கள் ஆகியோருக்காகவும் மன்றாடி இத் திருப்பலியில் இணைந்து கொள்ளுவோம்.

முதல் வாசகம்.

பாஸ்கா இராவுணவு பற்றிய விதிமுறைகள்.

விடுதலைப் பயண  நூலிலிருந்து வாசகம்.  12:12:1-8, 11-14

அந்நாள்களில்

எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங் களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்.

அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடா கவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள் வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண் டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.

நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது ஆண்டவரின் பாஸ்கா. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின் மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையா ளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது.

இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல். திபா. 116: 12-13.15-18

பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல், அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்வதே.

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக் காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய் வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.பல்லவி:

ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண் மையாகவே உம் ஊழியன். நான் உம் பணியாள். உம் அடியாளின் மகன். என் கட்டுகளை நீர் அவிழ் த்துவிட்டீர்.பல்லவி:

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன். ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவே ற்றுவேன். பல்லவி:

இரண்டாம் வாசகம்.

அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கின்றீர் கள். 

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எமுதிய முதல்;; திருமுகத்திலிருந்து வாசகம். 11: 23- 26.

சகோதரர் சகோதரிகளே!

ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளு க்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, ‘இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யு ங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, ‘இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார்.

ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவரு டைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வசனம். யோவா. 13:34

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்| என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கி றேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங் கள், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்.

இயேசு தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

யோவான் எமுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்: 13:1-15

அக்காலத்தில்.

பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண் டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத் தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத் தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கி னார்.

சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், ‘ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகி றீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ‘நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரி யாது. பின்னரே புரிந்து கொள்வாய்” என்றார். பேதுரு அவரிடம், ‘நீர் என் காலடிகளைக் கழுவ விடவே மாட்N;டன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, ‘நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார். அப்போது சீமோன் பேதுரு, ‘அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்றார். இயேசு அவரி டம், ‘குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை” என்றார். தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை| என்றார்.

அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்து கொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: ‘நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் போதகர்| என்றும் ஆண்டவர்| என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ் வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகரு மான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய கால டிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங் களுக்கு முன்மாதிரி காட்டினேன்.” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. கட்டுக்களை அவிழ்த்துவிடுகின்ற தந்தையே இறைவா! இயேசுக்கிறிஸ்துவின் பணிக்குருத்துவத்தில் பங்கேற்றுப் பணி புரிய அழைக்கப்பட்டிருக்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனை வரும் தாழ்மையோடும், தூய்மையோடும், அர்ப்பணத்தோடும் பணிபுரியத் தடையாக இருக்கும் தடை களை உடைத்து, அவர்கள் கிறிஸ்து விட்டுச் சென்ற பணியை ஆற்றுவதற்கு வேண்டிய வல்லமையை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  2.  வார்த்தையும், வாழ்வும், வழியுமான தந்தையே இறைவா! இறைமக்கள் சமுதாயமாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும், கிறிஸ்துவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தாழ்மை, தூய்மை, அர்ப்பணம் ஆகியவற்றை எமது வாழ்வில் கடைப்பிடித்துப் பணியாற்றுவதன் வழியாக அனைவருக்கும் ஆறு தலாகவும், மகிழ்ச்சியின் கருவிகளாகவும் செயற்பட எமக்கு வேண்டிய நல்லுள்ளத்தைத் தந்தருள வேண்டுமெ ன்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  3.  ஆற்றலின் ஊற்றான தந்தையே இறைவா! நற்கருணையை உட்கொள்ளுகின்ற நாங்கள் ஒவ் வொரு வரும், மனித மாண்பை மதித்து உறவின் சமூகமாகவும், பகிர்ந்து வாழும் சமூகமாகவும், இறை வார்த்தையை வாசித்து வாழ்வாக்கும் சமூகமாகவும் வாழ்ந்திடுவதற்கு வேண்டிய அருள் வரங்களைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4.  விடுதலையின் அண்டவரே தந்தையே இறைவா! பணயக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள் ளோர், சிறகளிலும், வதை முகாம்களிலிருந்தும் வேதனைப் படுவோர் அனைவரையும் இந்த நாளில் சந்திந்தருளும். தூய பவுலடியாரைச் சிறையில் சந்தித்து, அவருக்கு விடுதலையும், தேறுதலும், நம் பிக்கையும், வல்லமையும் கொடுத்ததுபோல்: இவர்களுக்கும் விடுதலையும், தேறுதலும், நம்பிக்கை யும், வல்லமையும் கொடுத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்   Maundythursday2019

திரு எண்ணெய்கள் புனிதப்படுத்தி அர்ச்சிக்கும் திருப்பலி

திருவருட் சாதனங்களின் அர்ச்சிப்புக்குப் பயன்படும் திரு எண்ணெய்கள் புனிதப்படுத்தி அர்ச்சிக்கும் திருப்பலி நேற்று மாலை ( 15.04.2019) மாலை 05.00 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ தலைமையில் நடைபெற்றது. மேலும் அறிய திரு எண்ணெய்கள் புனிதப்படுத்தி அர்ச்சிக்கும் திருப்பலி