38வது ஆண்டு நிறைவு விழா

மன்னார் மறைமாவட்டம் உதயமாகி 38வது ஆண்டு நிறைவு விழா மன்னார் தோட்டவெளி மறைசாட்சியர்களின் தூய அரசி திருத்தலத்தில் இன்று 26.01.2019 காலை 07.15 மணிக்கு ஆரம்பமாகியது. இன்றைய திருவிழாவுக்கு திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்கள் வருகை தந்து சிறப்புத் திருப்பலி ஒப்புக் கொடுத்துச் செபித்தார். மேலும் அறிய 38வது ஆண்டு நிறைவு விழா

தூய செபஸ்தியார் திருவுருவப் பவனி

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத் திருவிழா 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் அன்று மாலை தூய செபஸ்தியார் திருவுருவப் பவனி அலங்கரிக்கப்பட்ட தேரில் மன்னார் நகரத்தின் பல வீதிகளுடாக எடுத்துவரப்பட்டது. பெருந்திரளான மக்கள் இப்பவனியில் பங்கேற்றனர். பவனி முடிவில் பேராலயத்தில் தூய செபஸ்தியாரின் திருவுருவ ஆசீர் வழங்கப்பட்டது. மேலும் அறிய தூய செபஸ்தியார் திருவுருவப் பவனி