தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை இன்று 25.10.2018 வியாழக்கிழமை மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பேசாலை பங்குத் தந்தை அருட்பணி.ச.தேவறாஜா கொடுதோர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பேசாலை, சிறுத்தோப்பு, கீளியன்குடியிருப்பு, தலைமன்னார் பங்குகள் இணைந்து தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவையை வரவேற்றன: மேலும் அறிய தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை இன்று
Monthly Archives: October 2018
தூய யோசேவாஸ் அற்புத திருச்சிலுவை பேசாலை தூய வெற்றி நாயகி ஆலயம்வருகை
மகா கல்கமுவ என்னும் இடத்திலுள்ள தூய யோசேவாஸ் அற்புத திருச்சிலுவை பேசாலை தூய வெற்றி நாயகி ஆலயம் வருகை Arrival of the Miraculous Cross of St. Joseph Vaz to Our Lady of Victory’s Church, Pesalai25/10/2018
தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை இன்று 25.10.2018 வியாழக்கிழமை மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மன்னார் பேராலயப் பங்கின் அருட்பணி எல்லைக்குள் அமைந்திருக்கின்ற உப்புக்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் தூய யோசேவாஸ் சிற்றாலயத்திற்கான கட்டிடப்பணிகளும், காணியும் ஆசீர்வதிக்கப்பட்டது. மேலும் அறிய
அற்புத சிலுவை இன்று 24.10.2018 மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கை
தூய யோசேவ் வாஸ் அடிகளாரின் அற்புத சிலுவை இன்று 24.10.2018 மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கை வந்தடைந்தது. மாந்தை லூர்து அன்னை திருத்தலத்தின் திருப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை மன்னார்த் தீவின் நுழை வாயிலாக இருக்கும் தள்ளாடி தூய அந்தோனியார் திருவுருவத்திற்கு முன்பாக பேராலயப் பங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அறிய அற்புத சிலுவை இன்று 24.10.2018 மாலை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயப் பங்கை
யோசேவாஸ் அற்புத திருச்சிலுவை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு வருகை
மகா கல்கமுவ என்னும் இடத்திலுள்ள தூய யோசேவாஸ் அற்புத திருச்சிலுவை மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு வருகை Arrival of the Miraculous Cross of St. Joseph Vaz to St. Sebastian’s Cathedral, MANNAR 24/10/2018
தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை இன்று
குருநாகல் மறைமாவட்டத்தின் கல்கமுவ பங்கிலுள்ள மகா கல்கமுவ என்னும் இடத்தில் உள்ள தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை இன்று 23.10.2018 செவ்வாய்க்கிழமை மன்னார் மறைமாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது. இன்று காலை யாழ்ப்பாணம், மறைமாவட்டத்தின் அருட்பணி எல்லைப் பகுதியான முழங்காவில் பங்கு – மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணி எல்லைப் பகுதியான தேவன்பிட்டிப் பங்கு ஆகியவற்றின் மையப் பகுதியில் மன்னார் சந்குப்பிட்டி பிரதான பாதையில் வைத்து யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.ஜோசவ் ஜெபரெட்ணம் அடிகளார் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களிடம் கையளித்தார். மேலும் அறிய தூய யோசேவ் வாஸ்சின் அற்புத சிலுவை இன்று
அற்புத சிலுவை – மன்னார் மறைமாவட்ட நிகழ்ச்சித் திட்டம்.
இலங்கையின் திருத்தூதர் என அழைக்கப்படும் தூய யோசேவ் வாஸ் அடிகள் தமது கையால் நாட்டிய சிலுவைகளில் ஒன்று குருநாகல் மறைமாவட்டத்தின் கல்கமுவ பங்கிலுள்ள மகா கல்கமுவ என்னும் இடத்தில் இருக்கின்றது. இந்தச் சிலுவை வழியாக எண்ணிறைந்த புதுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால் இது தூய யோவேவ் வாஸ்சின் அற்புத சிலுவை என அழைக்கப்படுகின்றது. மேலும் அறிய அற்புத சிலுவை – மன்னார் மறைமாவட்ட நிகழ்ச்சித் திட்டம்.
மறைபரப்புத் தினத்தையொட்டிய நிகழ்வு
நேற்று (21.10.2018 ) ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற உலக மறைபரப்புத் தினத்தை யொட்டிய நிகழ்வுகளில், மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று மாலை சிறப்பான கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும் அறிய மறைபரப்புத் தினத்தையொட்டிய நிகழ்வு
மறைபரப்புத் தினம் மன்னார் மறைமாவட்டத்தின்
கத்தோலிக்க திருச்சபையில் இன்று (21.10.2018) ஞாயிற்றுக் கிழமை உலக மறைபரப்புத் தினம் கடைப்பிடிக்கப்படு கின்றது. கத்தோலிக்க மக்கள் தாம் பெற்ற இறை நம்பிக்கையை வாழவும், ஆழப்படுத்தவும், சவால்களுக்கு மத்தியில் வாழும் ஏனைய கிறிஸ்தவ நம்பிக்கையாளரின் இறை நம்பிக்கையை ஆழப்படுத்தவும், கிறிஸ்துவின் அன்பையும், இரக்கத்தையும் அனைவரும் சுவைக்கவும் இறைவேண்டுதல் செய்வதும், தம்மை முழுமையாக அர்ப்பணிப்பதும்,பொருளுதவி அளிப்பதும் இந்நாளின் மையமாக அமைகின்றது. மேலும் அறிய மறைபரப்புத் தினம் மன்னார் மறைமாவட்டத்தின்
குருத்துவப் பணி வாழ்வின் 50வது ஆண்டின் நன்றி
மன்னார் மறைமாவட்டத்தின் வங்காலை தூய ஆனாள் ஆலயப் பங்கின் நான்காவதும், அமல மரித் தியாகிகள் சபையின் குருவுமாகிய அருட்பணி.இ.செலஸ்ரின் சூசைதாசன் குரூஸ் ( சி.எஸ்.குரூஸ்) அடிகளார் தனது குருத்துவப் பணி வாழ்வின் 50வது ஆண்டின் நன்றித் திருப்பலியை இன்று 20.10.2018 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு வங்காலை தூய ஆனாள் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்தார். மேலும் அறிய குருத்துவப் பணி வாழ்வின் 50வது ஆண்டின் நன்றி