பொதுக்காலம் இருபத்திநான்காம் ஞாயிறு

2018.09.16

முன்னுரை.

ஆண்டவர் என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்: என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நாம் மன்றாடும் நாளில் நமக்குச் செவி சாய்க்கும் விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் இருபத்திநான்காம் ஞாயிறு.

நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே அது உயிரற்றதாயிருக்கும்: என்னும் செய்தியே இன்று நமக்கு முன் வைக்கப்படும் அழைப்பாக இருக்கின்றது. இறைவனை அன்பு செய்கின்றோம், அவரை விசுவசிக்கின்றோம் என்று சொல்லுகின்றவர்கள்;, அவருடைய கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும், இறைவனுடைய சித்தத்திற்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும், தாழ்ச்சியுடையோராய் இருக்க வேண்டும், உயர்வு – தாழ்வு மனப்பான்மையோடு வாழக்கூடாது. இவைகளை இன்றைய இறைவார்த்தைகள் வலியுறுத்திக் கூறுகின்றன.

எனவே நாமும் இறைவார்த்தையை முழுமையாக ஏற்றுக்கொண்டு, நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன், இறைச் சித்தத்திற்கு என்றும் பணிந்திருப்பேன், ஒற்றுமையிலும், உறவிலும் இறைவனைச் சந்திப்பேன் என்னும் செயலோடு கூடிய உறுதிப்பாட்டுடன் வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.

முதல் வாசகம்

அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்பு வித்தேன்.:

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 50:5-9

ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்: நான் கிளர்ந்தெழவில்லை: விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்: நான் அவமானம் அடையேன்: என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்: இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன். நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்: என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்: என்மீது குற்றஞ்சாட்;டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்: நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்?

.இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா. 116:1-6,8-9

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்

ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்: ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார். அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார்.பல்லவி:

சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன: பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக் கொண்டன: துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன. நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்: ‘ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்’ என்று கெஞ்சினேன்.பல்லவி:

ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்: நம் கடவுள் இரக்கம் உள்ளவர். எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்: நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார்.பல்லவி:

என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்: என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார். உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.பல்லவி:

இரண்டாம் வாசகம்.

நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 2:14-18

என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, ;நலமே சென்று வாருங்கள்: குளிர் காய்ந்து கொள்ளுங்கள்: பசியாற்றிக் கொள்ளுங்கள்: ; என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.

ஆனால்,  ;ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன ; என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்: செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி. கலாத்தியர். 6:17

அல்லேலூயா, நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்..அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மானிடமகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 27-35

அக்காலத்தில்

இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊருகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.  வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ;நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ; என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் அவரிடம், ;சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ; என்றார்கள்.

ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ; என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ;நீர் மெசியா ; என்று உரைத்தார். தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் ; என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சென்னார்.

பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார். ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், ;என் கண் முன் நில்லாதே, சாத்தானே.  ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் ; என்று கடிந்துகொண்டார்.

பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, ; என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவார்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

  1. அருளும் நீதியும் கொண்டவரான தந்தையே இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும், தமது விசுவாச வாழ்வை: முன்மாதிரிகை, பொறுப்புணர்வு, தாழ்மை, இறைசித்தத்திற்குப் பணிந்த வாழுதல் ஆகிய பண்புகளால் எடுத்துக்காட்டி வாழுவதற்கு வேண்டிய அருளை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  2. இரக்கத்தின் தந்தையே இறைவா! முன்மாதிரிகை, பொறுப்புணர்வு, தாழ்மை, இறைசித்தத்திற்குப் பணிந்த வாழுதல் ஆகிய பண்புளை எம்மிலே வளர்த்து, உமக்கு உவப்புடைய  வாழ்வு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  3. அன்புத் தந்தையே இறைவா!  இலத்திரனியல்  பொருட்களை உற்பத்தி செய்கின்றவாகளும், பயன்படுத்துகின்றவர்களும், ஓழுக்கத்தையும், நற் சமூக விழுமியங்களையும் மனத்திற் கொண்டு செயற்படும் நல்மனத்தை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

  4. பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்ற தந்தையே! உலகில் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் வன்முறையாளர்கள், மற்றும் தலைவர்கள் உண்மையினதும், நீதியினதும் வழிக்குத் திரும்பி அமைதியை ஏற்படுத்துவோராகச் செயற்பட அவர்களை மாற்றியமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்  2018Sunday24thordinary

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *