வாழ்க்கைப் பெற்றான் கண்டல் தூய நீக்கிலார் ஆலயத்தை அர்சித்துப் புனிதப்படுத்தினார்.

அளவக்கைப் பங்கின் துணை ஆலயமான வாழ்க்கைப் பெற்றான் கண்டல் தூய நீக்கிலார் ஆலயப் பங்குச் சமூகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ( 17.06.2018) மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு வரவேற்ப்பளித்ததோடு, புதிதாக அமைக்கப்பட்ட தூய நீக்கிலார் ஆலயத்தையும் மன்னார் ஆயர் அவர்கள் ஆசீர்வாதித்து, திருச்சபையின் திரு வழிபாட்டு திருமரபிற்கேற்ப ஆரம்ப வழிபாடுகளை முன்னெடுத்து, ஆலயம், திருப்பீடம், நற்கருணைப் பேழை ஆகியவற்றை முறைப்படி அர்சித்துப் புனிதப்படுத்தினார்.

நேற்று மாலை 05.00 மணிக்கு முருங்கன் நானாட்டான் பிரதான விதியிலிருந்து வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்திற்குச் செல்லும் நுழைவாயியிலிருந்து, வாழ்க்கைப் பெற்றான் கிராமம் வரை உந்துரளி அணிவகுப்போடு ஆயர் அவர்கள் ஆலய முன்றல் வரை அழைத்து வரப்பட்டு அங்கு மரபு ரீதியான வரவேற்ப்பளிக்கப்பட்டது. நானாட்டான் மகாவித்தியாலய இசைக்குழவின் மேலைநாட்டு மகிழ்வொலியோடு ஆயர் அவர்கள் மதிப்பளித்து வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆயர் அவர்கள் புதிய ஆலயத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தும் திரு நிகழ்வை முறைப்படி முன்னெடுத்துச் சென்றார். பங்குத் தந்தை அருட்பணி.லீ.சுரெந்திரன் றெவல் அடிகளார் ஆலய இறைமக்கள் சமூகத்தோடும், பணியாற்றும் துறவிகளோடு இணைந்தும் புதிய ஆலய அமைப்புப் பணியையும், இத் திருநிகழ்வையும் மிகவும் சிறப்பாகச் செய்து முடித்திருந்தார்.

இந் நிகழ்வில் பெருந்தொiயான இறைமக்களும், அரச, அரச சார்பற்ற பணியக முதன்மைப் பணியார்களும், குருக்கள் துறவியரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *