திருவிழிப்பு செப வழிபாடு நடைபெற்றது.

நாளை 20.05.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தூய ஆவியாரின் பெருவிழாவிற்கான ஆயத்தமாக 18.05.2018 வெள்ளிக்கிழமை இரவு 09.00 மணி தொடக்கம் 19.05.2018 சனிக்கிழமை அதிகாலை 05.00 மணி வரை மாந்தை தூய லூர்து அன்னை திருத்தலத்தில் மறைமாவட்ட ரீதியிலான திருவிழிப்பு செப வழிபாடு நடைபெற்றது.பல மக்கள் இவ் வழிபாட்டில் பங்கேற்றுப் பயனடைந்தனர். அவ்வழிபாட்டில் அருட்பணி. றஜனிகாந் அடிகளார் பாடக்கலை முன்னெடுத்துச் செல்ல அருட்பணி நியூட்டன் அடிகளார் இறை புகழ்ச்சியையும், அருட்பணியாளர்கள். பிரான்சிஸ் மரி டீ கோல், ச.ஜெயபாலன், றெஜினோல்ட், யூட் குரூஸ், றொக்சன் குரூஸ், டெஸ்மன் அஞ்சலோ ஆகியோர் தூய ஆவியாரின் செயற்பாடுகளை மையப்படுத்திய தியான உரைகளை வழங்கினர்.

ஆதிகாலை 05.00 மணிக்கு முன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்முhனுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் திருப்பலியுடன் அன்றைய திருவிழிப்பு செப வழிபாடு முடிவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *