தூய சனி, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூரும் திருவழிபாட்டு நிகழ்வுகள்

தூய சனி, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூரும் திருவழிபாட்டு நிகழ்வுகள் நேற்று (31.03.2018) இரவு 11.15 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்றன. மிகுந்த ஆன்மிக உணர்வோடு நடைபெற்ற இந்த வழிபாட்டில் பெருந் தொகையான நம்பிக்கையாளர் பங்கேற்றனர்.
அனைத்து திருவழிபாட்டு நிகழ்வுகளும் மன்னார் ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்றன. பல அருட்பணியாளர்களும் ஆயருடன் இணைந்து திருவழிபாட்டை நிறைவேற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *