பிப்ரவரி:22
புனித பேதுருவின் தலைமைப்பீடம்
ஆண்டவர் இயேசு திறவுகோலின் அதிகாரத்தை பேதுருவிடம் ஒப்படைத்தார். இவ்வாறு பேதுரு பெருமைப்படுத்தப்பட்டதை நினைவு படுத்தவே இந்த திருநாள் கி.பி.354ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளைக் கொண்டாடுவதன் மூலம் பேதுருவுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். இறைவனின் சிறந்த பேணுதலால் அவர் திருச்சபையின் தலைவராக நியமனம் பெற்றார் எனவும் நினைவு கூர்கிறோம். எல்லாத் திருத்தந்தையர்களும் பேதுருவின் வழித் தோன்றல்கள். எனவே அவர்கள் கிறிஸ்து ஏற்படுத்திய ஒரே திருச்சபையின் தலைவர்கள். இவர்களனைவரும் கிறிஸ்துவின் போதனைகளை நமக்கு கற்றுக் கொடுக்கின்றனர்.
“காத்தேட்ரா” என்பதற்கு ஆயரின் அரியணை என்பது பொருள். இதிலிருந்து தோன்றும் சொல்தான் “கத்தீட்ரல்” என்பது. ஆயரின் ஆலயம் இருக்கும் அரியணை தான் “கத்தீட்ரல்” என்று அழைக்கப்படுகிறது. புனித பேதுரு தலைமைப்பீடம் என்பது பேதுரு திருச்சபையின் தலைவர் என்பதைக் குறிக்கிறது. இத்திருநாளுக்குரிய கட்டளை செபத்தின் இரண்டாம் வாசகத்தில் கூறப்படுவது போல் “ இத்திருநாளைக் கொண்டாடுவதன் மூலம் குருத்துவப் பணி பெருமைப்படுத்தப்படுகிறது.”