பிப்ரவரி: 17 புனித மரியாயின் ஊழியர் சபை நிறுவியவர்கள்

புனித மரியாயின் ஊழியர் சபை நிறுவியவர்கள்
(கி.பி.13ம் நூற்றாண்டு)

இந்த எழுவரில் இருவர் திருமணமானவர். இருவர் விதவையர். மூவர் திருமணமாகாதவர். இவர்கள் எல்லாரும் தங்கள் நாடான இத்தாலியில் பிளாரன்ஸ் நகரில் தனிமையான இடத்தில் ஒன்று கூடினர். தங்களின் உடமைகள் யாவற்றையும் துறந்து விட்டு செப தவ வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்தனர் என்றால் வியப்பாக இல்லையா? 1233ல் முழுவீச்சில் உலகை துறந்தனர் இந்த அபூர்வ சகோதரர்கள் . பிளாரன்ஸ் நகர ஆயரின் வேண்டுகோளின் படி தங்கெளுக்கென சபை ஒழுங்குகளை அமைத்துக் கொண்டனர். நாளடைவில் வேறு பலரையும் இந்தச் சபையில் சேர்த்தனர். இவர்கள் மரியாயின் ஊழியர்கள்; என்றே அன்றும் இன்றும் அழைக்கப்படுகின்றனர். புனித டோமினிக் சபையினரின் உடையைப் போல் ஆனால் கறுப்பு நிறத்தில் அணிந்து கொண்டனர். இந்த சபையைச் சேர்ந்த கன்னியர்களும் நாளடைவில் பல மடங்களை நிறுவியுள்ளார்கள். 3ம் சபையினரும் உண்டு. 16வது நூற்றாண்டு முதல் வியாகுல அன்னைக்கு சிறப்பான வணக்கம் காட்டுவதுதான் இந்தச் சபையின் தனிச் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *