இளம் வயதினருக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம்

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் இன்று 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை வங்காலை தூய ஆனாள் பங்கிலுள்ள இளம் வயதினருக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கினார்.தமது பங்கிற்கு முதன் முதலாக வருகை தந்த ஆயர் தந்தை அவர்களை வங்காலை பங்குத் தந்தை அருட்பணி.சீ.ஜெயபாலன் உதவிப் பங்குத் தந்தை அருட்பணி.றொசான், ஆலய அருட்பணிப் பேரவையினர், பங்குமக்கள் என பல்வேறு தரப்பினர் பிரதான நுழைவாயிலில் வைத்து சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற திருப்பலியில் ஆயர் தந்தை அவர்கள் பங்கிலுள்ள இளம் வயதினருக்கு உநுதிப்பூசுதல் அருட்சாதனத்தை வழங்கினார். திருப்பலியின் நிறைவில் புதிய ஆயரை வரவேற்று மதிப்பளித்தல் நிகழ்வும் இடம் பெற்றது. தொடர்ந்து ஆலய அருட்பணிப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அத்தோடு உறுதிப்பூசுதல் பெற்ற பிள்ளைகளையும் சந்தித்து அவர்களோடு உரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *