பாதுகாவலரின் திருவுரு பவனி

இன்று 20.01.2018 சனிக் கிழமை மாலை வழமை போல மன்னார் தூய செபஸ் தியார் பேராலயப் பங்குமக்கள் தங்கள் பாதுகாவலரின் திருவுருவை மன்னார் நகரம் முழுவதும் பவனியாக எடுத்து வந்தனர். ஆயிரமளவிலான மக்கள் இப்பவனியில் கலந்து செபித்தனர். இறுதியில் பேராலய அருட்ப்பணிப் பேரவை செயலர் திரு.சதீஸ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். தொடர்ந்து மன்னார் ஆயர் இறைவார்த்தையை விளக்கியுரைத்தபின், தூய செபஸ்தியாரின் திருவுருவ ஆசீரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *